வங்கதேசத்தில் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிளர்ச்சி வெடித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து, சுமார் 700 பேர் கொல்லப்பட்டனர்.

போராட்டம் வலுப்பெற்றதை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா வேறு வழியில்லாமல் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால நிர்வாகியாக பொறுப்பேற்றார்.. ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு கடந்த 12-ஆம் தேதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முகமது யூனுசை ஷேக் ஹசீனா கடுமையாக சாடி வருகிறார். முகமது யூனுஸ் நாட்டையே அமெரிக்காவுக்கு விற்பதாகவும், தீவிரவாத குழுக்களின் உதவியுடன் வங்கதேச அரசின் கட்டுப்பாட்டை யூனுஸ் எடுத்ததாகவும் அவர் சாடியுள்ளார்.

செயின்ட் மார்ட்டின் தீவு

தனக்கு எதிரான போராட்டத்தை அமெரிக்கா தூண்டியதாகவும், இதற்கு காரணம் St Martin’s தீவை அந்நாட்டிற்கு தாரை வார்க்காதது தான் என்றும் ஹசீனா கூறியுள்ளார்..

St Martin’s, வங்காள விரிகுடாவின் வட மேற்கு பகுதியில் வங்கதேச தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள மிக அழகிய தீவு. 9 கிலோ மீட்டர் மட்டுமே கொண்ட St Martin’s வங்கதேசத்தின் ஒரே ஒரு பவள தீவாகும். இந்த தீவில் சுமார் 3,700 பேர் வசித்து வருகின்றனர்..

அவர்கள் மீன்பிடித்தல், நெல் சாகுபடி, தென்னை விவசாயம் மற்றும் கடற்பாசி சேகரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.ருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version