மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இன்று வெள்ளிக்கிழமை பகல் 11 மணியில் இருந்து சுற்றி வளைத்து முற்றுகையிட்டு பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சந்திரகாந்தனை கடந்த ஏப்ரல் 8 ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஐடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மட்டக்களப்பு முதலாவது வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்துள்ள விசேட அதிரடிப்படை மற்றும் சிஐடியினர் சம்பவ தினமான இன்று பகல் 11 மணிக்கு முற்றுகையிட்ட சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version