புட்டினின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் விமானங்களை அழித்த ‘ஒப்பரேஷன் சிலந்தி வலை” : ரஸ்யாவிற்குள் 117 ஆளில்லா விமானங்களை கொண்டுசென்று தாக்கிய உக்ரைன்!

டெய்லி மெய்ல்

அது 18 மாதங்களிற்கு முன்னர் திட்டமிடப்பட்ட ஒரு மிகவும் இரகசியமான நடவடிக்கை, ‘ஸ்பைடர்ஸ் வெப் ” என அதற்கு பெயரிட்டிருந்தனர்.நேற்று மதியம் பேரழிவு தரும் விளைவுகளுடன் அதனை முன்னெடுத்தனர்.

இந்த நடவடிக்கை மிகவும் புத்திசாலித்தனமானது என்பதுடன் மிகவும் துணிச்சலானதாகவும் காணப்பட்டது.

துருக்கி தலைநகரில் உக்ரைன் ரஸ்ய பிரதிநிதிகளின் சந்திப்பிற்கு முன்னதாக உக்ரைனிய ஜனாதிபதி தெரிவித்தது போல விளாடிமிர் புட்டினின் ஈடுசெய்ய முடியாத அணுவாயுதங்களை கொண்டு செல்லக்கூடிய போர் விமானங்களின் மீதான இந்த தாக்குதல் சந்தேகத்திற்கு இடமின்றி வரலாற்று புத்தகங்களில் இடம்பெறும்.

புடாபெஸ்ட் உடன்படிக்கையின் கீழ் ரஸ்யாவின் தாக்கமாட்டோம் என்ற வாக்குறுதிக்கு ஈடாக உக்ரைன் பல மூலோபாய குண்டுவீச்சு விமானங்களையும்,2000 அணுவாயுதங்களையும்,176 ஐசிபிம்களையும் ரஸ்யாவிடம் ஒப்படைத்து 29 ஆண்டுகளின் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதுவரை ரஸ்யாவுடன் இடம்பெற்ற போரில் மிகவும் துணிச்சலான தாக்குதல் என  வர்ணிக்கப்படக்கூடிய இந்த தாக்குதலில் உக்ரைனிய சிறப்பு படையினர் 117 ஆளில்லா விமானங்களை இரகசியமாக ரஸ்யாவிற்குள் கொண்டு சென்றனர்.இந்த வகை ஆளில்லா விமானங்களை விமானிகள் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தலாம்.

பின்னர் இலகுவாக நகர்த்தக்கூடிய மர அறைகள் வந்தன,அவற்றின் மேல் பகுதிகளில் மறைக்கப்பட்ட பெட்டிகள் காணப்பட்டன,அவற்றிற்குள் சிறிய பறக்கும் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தன.

ரஸ்யாவிற்குள் செல்லும் பொதுமக்களின் வாகனங்களில் அவற்றை ஏற்றினார்கள்,அவற்றை கொண்டு சென்ற ரஸ்ய சாரதிகளிற்கு தாங்கள் எதனை கொண்டு செல்கின்றோம் என்பது தெரியாது.

இறுதியாக அனைத்து லொறிகளும் வடரஷ்யா முதல் சைபீரியா வரை நீண்டு காணப்படுகின்ற விமானநிலையங்களிற்கு அருகில் வந்தன – ஐந்து கிலோமீற்றருக்குள்.

உக்ரைனிலிருந்து பாதுகாப்பான 2500 மைல்கள்

இறுதியில் தாக்குதல் இடம்பெற்றது.

மரத்தாலான அறைகளின் மேல்பகுதி தொலைவிலிருந்து திறக்கப்பட்டு எவ்பிவி ஆளில்லா விமானங்கள் விண்ணில் பறந்தன.

முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட கமராக்களின் உதவியுடன் ஏவுகணைகள் ஏற்றப்பட்ட டிரோன்கள் ரஸ்யாவின் மிகவும் விலையுயர்ந்த போர் விமானங்களை நோக்கி நேராக சென்றன.

ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த ரஸ்ய விமானங்களின் படங்கள் வெளியாகியுள்ளன.ரஷ்யாவின் 40க்கும் மேற்பட்ட பலகோடி மதிப்புள்ள விமானங்களை அழித்துவிட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு படையினர் நேற்றிரவு அறிவித்தனர்.

அணுவாயுதங்களை ஏந்திச்செல்லும் திறன் மிக்க டியு-95Tu-95  டியு 22  Tu-22Msவிமானங்களும்,ஏ50 மெயின்ஸ்டே காண்காணிப்பு விமானமும் A-50 ‘Mainstayஅழிக்கப்பட்டதாக உக்ரைனிய பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

மெயின்ஸ்டே விமானத்தின் மதிப்பு  £250,000,000— இந்த விமானம் ராடராகவும் கட்டளை பீடமாகவும் பயன்படுத்தப்பட்டது – ரஸ்யாவிடம் இவ்வாறான பத்து  விமானங்களே உள்ளன.

ரஸ்ய போர்விமானங்கள் மற்றும் வான்பாதுகாப்பை ஒருங்கிணைப்பதில் இந்த மெயின்ஸ்டேக்கள் பிரதமானவை.இந்த வகை விமானங்கள் அழிக்கப்பட்டமை புட்டினின் போர் முயற்சிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.இந்த விமானங்களை தயாரிப்பதை மொஸ்கோ நிறுத்திவிட்டது,

ரஸ்யாவிடம் 120 டியு95 ரகவிமானங்களும் டியு22எம் விமானங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,உக்ரைன் மீதான புட்டினின் இரவு நேர குண்டுவீச்சிற்கு இந்த விமானங்கள் மிகவும் முக்கியமானவை.

185 கிலோமீற்றர் வரை செல்லக்கூடிய ,உக்ரைனிற்கு மேற்குலக நாடுகள் வழங்கிய ஸ்டோர்ம் சடோஸ் மற்றும் ஏடிஏசிம்களை கருத்தில் கொண்டு ரஸ்யா தனது இந்த ரக விமானங்களை மிகவும் உள்ளே நகர்த்தியிருந்தது – உக்ரைனிலிருந்து ஆயிரம் மைல் தொலைவிற்கு அப்பால்.

இந்த நிலையில் ரஸ்யாவை மிகவும் நெருங்கி வரக்கூடிய உக்ரைனின் எவ்பிவி குறித்து ரஸ்யா கனவு கண்டிருக்காது.

ரஸ்யாவின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த குண்டுவீச்சு விமானங்களின் மூன்றில் ஒரு பங்கை அழித்துவிட்டதாக நேற்றிரவு தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஜெலென்ஸ்கி ரஸ்யாவின் இரகசிய படைப்பிரிவுகளின் தளங்களிற்கு மிக அருகில் வைத்தே இந்த தாக்குதலை முன்னெடுத்தாக தெரிவித்துள்ளார்.

‘ரஸ்யாவில் எங்கள் நடவடிக்கையின் தளம் அவர்களின் பிராந்தியத்தில் உள்ள அவர்களின் எவ்எஸ்பியின் தளங்களிற்கு அருகிலேயே அமைந்திருந்து” என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் போது மொத்தமாக 117 ஆளில்லா விமானங்களை பயன்படுத்தினோம்,ரஸ்யாவின் விமானதளங்களில் நிறுத்தப்பட்டிருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த குரூஸ் ஏவுகணைகளை கொண்டு செல்லக்கூடிய விமானங்கள் தாக்கப்பட்டன, நாங்கள் தொடர்ந்தும் தாக்குவோம் என ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைனின் இந்த தாக்குதலை ரஸ்யாவின்பேர்ள் ஹாபர்இராணுவ விடயங்களை பதிவிடும் புளொக்கர் ரோமன் அலெக்கின் வர்ணித்துள்ளார்- பேர்ள் ஹாபர் தாக்குதல் அமெரிக்காவிற்கு எதிரான ஜப்பானின் தாக்குதலை குறிக்கின்றது – இந்த தாக்குதல் இரண்டாம் உலகப்போரிற்குள் அமெரிக்கா நுழைவதற்கு காரணமாகயிருந்தது.

போரியல் வல்லுநர்கள் 1942ம் ஆண்டு எகிப்தில் உள்ள சிடிஹெய்னஸ் தளத்தின் மீது எஸ்ஏஎஸ் நடத்திய தாக்குதலுடன் உக்ரைனின் தாக்குதலை ஒப்பிட்டுள்ளனர்.இந்த தாக்குதலின் போது பிரிட்டனின் விசேட கொமாண்டோ படைபிரிவினர் 40 லுப்ட்வாப் விமானங்களை செயல் இழக்க செய்தனர்.

பாலைவன யுத்தத்தில் இது முக்கியமான தருணம் இல்லை என்ற போதிலும்,வடஆபிரிக்காவில் அக்சிஸ்களின் விநியோகத்தை குழப்புவதற்கும் பிரிட்டிஸ் படையினரின் மனோநிலையை உயர்த்துவதற்கும் இது உதவியது.

இது பிரிட்டனின் எஸ்ஏஎஸ் படைபிரிவின் ஜாம்பவான் அந்தஸ்த்தை உயர்த்திய தருணமாகும்.

ரஸ்யர்கள் இதுபோன்ற ஒன்றை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ள பிரிட்டனின் விமானப்படையின் முன்னாள் விமானியும் இராணுவ ஆய்வாளருமான மிக்கே கே புட்டினின் மூலோபாய சொத்துக்களின்  மீது இந்த தாக்குதல்  ஏற்படுத்தியுள்ள விளைவுகளை நீங்கள் கருத்தில் கொண்டால் இந்த தாக்குதல் மிகவும் திறமையானது என குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version