இன்று (ஜூன் 3) ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இதன் மூலம், ஆர்சிபி அணியின் 18 வருட கனவு நிறைவேறியுள்ளது. தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது ஆர்சிபி. ஐபிஎல் தொடங்கியது முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற ஒரே அணியில் விளையாடிவரும், விராட் கோலிக்கு இது மறக்கமுடியாத ஒரு வெற்றியாகும்.

ஆர்சிபி பல வருடங்களாக தோல்விகளைச் சந்தித்து வந்தபோதும் அதன் ரசிகர்கள் குறையவில்லை, தொடர்ந்து அதிகரித்தவண்ணமே இருந்தனர். அவர்கள் இந்த வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.

 விராட் கோலிக்கு இது மறக்கமுடியாத ஒரு வெற்றியாகும்.

2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில், முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து, 190 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். இதில் பிரியான்ஷ் 24 ரன்களில் ஹேசல்வுட் பந்திலும், பிரப்சிம்ரன் 26 ரன்களில் க்ருனால் பாண்டியா பந்திலும் ஆட்டமிழந்தனர்.

அதைத் தொடர்ந்து, ஜோஷ் இங்கிலிஸ், கேப்டன் ஷ்ரேயாஸ் களமிறங்கினர். ஆனால், ரோமரியோ ஷெப்பர்ட் 9வது ஓவரில் வீசிய பந்தில், ஜிதேஷ் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கேப்டன் ஷ்ரேயாஸ். அவர் 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார்.

20 ஓவர்களின் முடிவில், பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

ஆர்சிபி ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.

இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து, ஆர்சிபியின் பில் சால்ட்- விராட் கோலி தொடக்கவீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பில் சால்ட் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார்.

அர்ஷ்தீப் ஓவரில் சால்ட் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். ஆனால் 2வது ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். ஜேமிஸன் வீசிய 2வது ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து சால்ட் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வால், கோலியுடன் இணைந்தார். அர்ஷ்தீப் வீசிய 3வது ஓவரில் சிக்ஸர் விளாசினார். ஜேமிஸன் வீசிய 4வது ஓவரில் கோலி, அகர்வால் தலா ஒரு பவுண்டரி அடித்து பவர்ப்ளேயில் ரன்ரேட்டை காப்பாற்றினர். 5 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் 55 ரன்கள் சேர்த்தது ஆர்சிபி அணி.

இந்த ஜோடி சற்று நம்பிக்கை அளித்த நிலையில், யுவேந்திர சஹல் வீசிய பந்தில் 24 ரன்களில் (18 பந்துகள்) ஆட்டமிழந்தார் மயங்க் அகர்வால்.

அதைத் தொடர்ந்து ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் களமிறங்கினார். 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என அதிரடியாக ஆடிவந்த ரஜத் பட்டிதார், ஜேமிஸன் வீசிய பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அவர் 26 ரன்கள் (16 பந்துகள்) எடுத்து வெளியேறினார்.

 

வலையில் விழுந்த பட்டிதார்

பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஜேமிஸன் ஸ்லோவர் பந்துகளாக வீசித்தான் விக்கெட்டுகளையும் எடுத்தார், ரன்களையும் கட்டுப்படுத்தினார்.

அதே பாணியை பட்டிதாருக்கும் செயல்படுத்தினார். 11வது ஓவரை ஜேமிஸன் வீசினார், முதல் 4 பந்துகள் ஸ்லோவர் பந்துகளாக ஆஃப் சைடு விலக்கி வீசி பட்டிதாரை குழப்பினார்.

திடீரென 5வது பந்தை பட்டிதாருக்கு யார்கராக வீசியநிலையில் அவரால் எதிர்வினையாற்ற முடியாமல் கால்காப்பில் வாங்கி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு கோலி, பட்டிதார் 40 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ், ஆர்சிபியின் ஒவ்வொரு பேட்டருக்கும் சரியான திட்டத்தை வகுத்து அதை கச்சிதமாக செயல்படுத்தினார். எந்த பேட்டருக்கு யார் பந்துவீசுவது, எப்படிப் பந்துவீசுவது என அவ்வப்போது ஆலோசனையும் ஸ்ரேயாஸ் வழங்கினார்.

பந்துவீச்சில் மாற்றம் செய்து பேட்டர்களையும் செட்டில் ஆகவிடாமல் தடுமாறச் செய்தார். குறிப்பாக விராட் கோலிக்கு பெரும்பாலும் ஸ்லோவர் பந்துகளை வீசச்செய்து அவரை பெரிய ஷாட் அடிக்கவிடாமல் ஷ்ரேயாஸ் கச்சிதமாக திட்டம் தீட்டினார்.

ஷ்ரேயாஸ் ஐயர்


படக்குறிப்பு, பில் சால்ட் அடித்த பந்தை கேட்ச் பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர்

லிவிங்டன் களமிறங்கியதும், சஹலை பந்துவீசச் செய்தார் ஷ்ரேயாஸ். லிவிங்ஸ்டன் லெக்ஸ்பின் ஆடத் தெரியாது என்பதால், சஹலை பந்துவீசச் செய்து தடுமாறச் செய்தார்.

சஹல் வீசிய 12வது ஓவரில் 6 ரன்களும், வியாசக் வீசிய 13வது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே ஆர்சிபி சேர்த்தது.

சஹல் 14வது ஓவரை வீசினார். முதல் பந்திலேயே லிவிங்ஸ்டன் லாங்க் ஆஃப் திசையில் சிக்ஸர் விளாசினார். அதே ஓவரில் கோலியும் பவுண்டரி அடிக்க ஆர்சிபி அணி 14 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஷெப்பர்டு களமிறங்கி, ஜிதேஷுடன் சேர்ந்தார்.

15-வது ஓவரை ஓமர்சாய் வீசினார். கோலியும், லிவிங்ஸ்டனும் ஸ்லோவர் பந்துக்கு பெரிதாக ஷாட் அடிக்க முயன்று ஏமாற்றம் அடைந்தனர். 5வது பந்தை ஓமர்சாய் ஸ்லோவர் பவுன்ஸராக வீசவே, அதைதூக்கி அடித்த கோலி அவரிடமே கேட்ச் கொடுத்து 43 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணி பெரிய விக்கெட்டை இழந்து தடுமாற்றத்தின் மத்தியில் நின்றது.

பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி


படக்குறிப்பு, கோலி 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜித்தேஷ் சர்மா களமிறங்கி, லிவிஸ்டனுடன் சேர்ந்தார். 16-வது ஓவரை அர்ஷ்தீப் வீசினார். அர்ஷ்தீப் ஓவரில் ஜிதேஷ் சர்மா 2 பவுண்டரிகளை தொடர்ச்சியாக விளாசி ரன்ரேட்டை தக்கவைத்தார்.

ஜேமிஸன் வீசிய 17-வது ஓவரை இவர்கள் வெளுத்துவாங்கினர். முதல் பந்தில் ஜிதேஷ் சர்மா கரண்டி ஷாட்டில் தேர்டு மேன் திசையில் சிக்ஸர் விளாசினார்,

2வது பந்தில் லாங்க்ஆப் திசையில் 2வது சிக்ஸரை அடித்தார். 4வது பந்தில் லிவிங்ஸ்டன் மிட்விக்கெட்டில் சிக்ஸர் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினர். 5-வது பந்தில் லிவிங்ஸ்டன் ஸ்லோவர் பந்தில் கால்காப்பில் வாங்கி 25 ரன்னில் ஆட்டமிழந்தார்

18வது ஓவரை வைசாக் வீசினார். முதல் பந்தில் ஷெப்பர்ட் மிட்விக்கெட்டில் தூக்கி அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்க தவறவிட்டனர். வைசாக் வீசிய 4வது பந்தில் ஜித்தேஷ் க்ளீன்போல்டாகி 24 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

ஒரே ஓவரில் 3 விக்கெட்


கடைசிப்பந்தில் புவனேஷ்வர் குமாரும் ஒரு ரன்னில் ஆர்யாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஓமர்சாய் வீசிய 19-வது ஓவரில் தொடக்கத்தில் திணறிய ஷெப்பர்ட், 5வது பந்தில் பவுண்டரியும், கடைசிப்பந்தில் சிக்ஸரும் அடித்து முடித்தார். கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். 2வது பந்தில் ஷெப்பர்ட் கால்காப்பில் வாங்கி 17 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 4வது பந்தில் லாங்ஆன் திசையில் பெரிய ஷாட்டுக்கு முயன்று ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசிப்பந்தில் புவனேஷ்வர் குமாரும் ஒரு ரன்னில் ஆர்யாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி 23 ரன்களுக்கு ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது, கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது. அர்ஷ்தீப், ஜேமிஸன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஓமர்சாய், சஹல், வைசாக் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.

கேப்டன் ஷ்ரேயாஸ்.


படக்குறிப்பு, ரோமரியோ ஷெப்பர்ட் வீசிய பந்தில், ஜிதேஷ் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கேப்டன் ஷ்ரேயாஸ். அவர் 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார்.

191 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் அணி தொடங்கியது. பிரயன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங்ஆட்டத்தைத் தொடங்கினர். புவி வீசிய முதல் ஓவரிலேயே ஆர்யா முதல் பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் பிரப்சிம்ரன் சிக்ஸரும் விளாசி அதிரடியாகத் தொடங்கினர்.

யஷ் தயால் வீசிய 2வது ஓவரில் ஆர்யா 2 பவுண்டரிகள் தட்டிவிடவே 10 ரன்கள் கிடைத்தது. ஹேசல்வுட் வீசிய 3வது ஓவரில் பஞ்சாப் பேட்டர்கள் தடுமாறி 5 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

ஆனால், ஹேசல்வுட் வீசிய 5வது ஓவரில் சிறிதும் அச்சமின்றி, 2 பவுண்டரிகள் ஆர்யா விளாசினார் கடைசிப்பந்தில் பிரயன்ஸ் ஆர்யா டீப் ஸ்குயர் லெக்திசையில் பறக்கவிடவே அங்கிருந்த சால்ட் அருமையான கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்தபின் நிலைதடுமாறி பவுண்டரி எல்லைக்குள் செல்லவே பந்தை மேலே தூக்கிவீசி பின்னர் மைதானத்துக்குள் வந்து சால்ட் அற்புத கேட்சை பிடித்து ஆர்சிபிக்கு நம்பிக்கையளித்தார்.

5 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் சேர்த்து வலுவாகத் தொடங்கியது. 2வது விக்கெட்டுக்கு ஜோஸ் இங்கிலிஸ் களமிறங்கி பிரப்சிம்ரனுடன் சேர்ந்தார். யஷ் தயால் வீசிய பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் இங்லிஸ் சிக்ஸருடன் முடித்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்திருந்தது

ஆர்சிபி அளித்த அடுத்தடுத்த ஷாக்

7-வது ஓவரை க்ருனால் பாண்டியா கட்டுக்கோப்பாக வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சூயஷ் சர்மா வீசிய 8-வது ஓவரில் பிரப்சிம்ரன் 2 சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். க்ருனால் வீசிய 9-வது ஓவரில் பிரப்சிரம்ரன் பேட்டில் எட்ஜ் எடுத்து புவயிடம் கேட்சானது. பிரப்சிம்ரன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்ரேயாஸ் களமிறங்கினார்.

10-வது ஓவரில் திடீரென ஷெப்பார்ட் வந்தவீச அழைக்கப்பட்டார். முதல் பந்தில் இங்கிலிஸ் பவுண்டரி அடித்து அடுத்தபந்தில் ஒருரன் எடுத்தார். 4வது பந்தை சந்தித்த ஸ்ரேயாஸ், ஸ்லோவர் பந்தை கட்செய்ய முயற்சித்து அடிக்க முயன்றார், ஆனால், பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் ஜிதேஷிடம் தஞ்சமடைந்தது. ஸ்ரேயாஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

பஞ்சாப் அணி மிகப்பெரிய விக்கெட்டை இழந்து தடுமாறியது. அரங்கம் முழுவதும் ஸ்ரேயாஸ் விக்கெட் இழந்ததை எழுந்து கொண்டாடியது, மைதானத்திலும் கோலி, ஆர்சிபி வீரர்கள் துள்ளிக்குதித்து ஆர்பரித்தனர்.

திருப்புமுனை ஏற்படுத்திய குர்னால்

படக்குறிப்பு, குர்னால் பாண்டியா

குர்னால் பாண்டியா வீசிய 11வது ஓவரில் முதல் பந்தில் இங்கிலிஸ் சிக்ஸர் விளாசினார். அதன்பின் அந்த ஓவரில் தடுமாறியதால், 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஷெப்பர்ட் வீசிய 12 ஓவரில் இங்கிலிஸ் சிக்ஸர் உள்பட 10 ரன்கள் சேர்த்தார்.

குர்னல் பாண்டியா தனது கடைசி ஓவராக 13வது ஓவரை வீசினார். முதல் பந்தில் சிக்ஸருக்கு தூக்க இங்கிலிஸ் முயன்றார். லாங்ஆன் திசையில் நின்றிருந்த லிவிங்ஸ்டன் எல்லைக்கோட்டில் வைத்து கேட்ச் பிடித்து இங்ஸிலிஸை39 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து சஷாங் சிங் களமிறங்கினார்.

ஷெப்பர்ட் வீசிய 15-வது ஓவரை பயன்படுத்திய இருவரும் ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் சஷாங் ஒரு பவுண்டரியும், வதேரா ஒரு சிக்ஸரும் விளாசினர். கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றி பெற 72 ரன்கள் தேவைப்பட்டது.

16-வது ஓவரை ஹேசல்வுட் வீசினார். ஹேசல்வுட் ஓவரில் தடுமாறிய சஷாங்சிங் 3வது பந்தில் லெக் திசையில் ஒரு சிக்ஸரும், கடைசிப்பந்தில் ஸ்ட்ரைட் திசையில் 2வது சிக்ஸரையும் விளாசினார்.

அடுத்தடுத்து 2 விக்கெட்

 கடைசிவரை போராடிய சஷாங் சிங் அரைசதம் அடித்து 61 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

17-வது ஓவரை அனுபவ வீரர் புவனேஷ்வர் வீசினார். 2வது பந்தில் வதேரா டீப் கவர் திசையில் தூக்கி அடிக்க க்ருனல் பாண்டியா கேட்ச் பிடித்தார். வதேரா 15 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டாய்யனிஷ், சந்தித்த முதல் பந்திலேயே புவனேஷ்வர் பந்தில் லாங்ஆப் திசையில் சிக்ஸருக்கு விரட்டினார்.

அடுத்த பந்தில் புவி வைடாக வீசவே அதை ஸ்டாய்னிஷ் தேர்டுமேன் திசையில் தட்ட அங்கு நின்றிருந்த யஷ்தயால் அருமையாக கேட்ச் பிடித்தார். ஸ்டாய்னிஷ் 6 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பஞ்சாப் அணி மெல்ல தோல்விக்குள் மூழ்கத் தொடங்கியது. அடுத்து ஓமர்சாய் களமிறங்கினார்.

யஷ் தயால் வீசிய 18-வது ஓவரின் 2வது பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று க்ருனல் பாண்டியாவிடம் கேட்சாகி வெளியேறினார். அடுத்து ஜேமிஸன் களத்துக்கு வந்தார். இந்த ஓவரில் தயால் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி 12 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது.

19வது ஓவரை புவனேஷ்வர் வீசினார். முதல் பந்திலேயே சஷாங்சிங் சிக்ஸர் விளாசி, 4வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். 19-வது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது.

ஹேசல்வுட் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தை சஷாங்சிங் தவறவிடவே ஆர்சிபி வெற்றி உறுதியானது. சஷாங்சிங் 3வது பந்தில் சிக்ஸர், 4வது பந்தில் பவுண்டரி, 5வது, 6வது பந்தில் அடுத்தடுத்து சிக்ஸர் விளாசியும் வெற்றி பெற முடியவில்லை.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்து 6 ரன்னில் தோல்வி அடைந்தது. கடைசிவரை போராடிய சஷாங் சிங் அரைசதம் அடித்து 61 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version