• இறந்துவிட்டதாக எண்ணிய நிலையில், சோனமின் குரலைக் கேட்டு அதிர்ந்துபோன குடும்பம் உடனடியாக ம.பி காவல்துறைக்குச் சொல்ல, உ.பி காவல்துறைக்குத் தகவல் பறந்திருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியும், அவரின் மனைவி சோனமும் ஹனிமூனுக்காக மேகாலயாவுக்குச் சென்றிருந்தனர்.

அங்கு சென்ற இருவரும் மாயமாகிவிட, ம.பி காவல்துறையை ரகுவன்ஷியின் குடும்பம் அணுக, மேகாலயா காவல்துறையினரை நாடியிருக்கிறது

ம.பி காவல்துறை. 10 நாள்களுக்கு மேலாக இருவரையும் கண்டுபிடிக்க முடியாமல் இரு மாநில காவல்துறையும் திணற, வடமாநிலங்களில் பெரும் பேசுபொருளானது இந்த வழக்கு.

ஜூன் 2-ம் தேதி, டூரிஸ்ட் கைடு ஒருவர் துப்புக்கொடுக்க, மேகாலயாவின் ஆழமான பள்ளத்தாக்கிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது ரகுவன்ஷியின் உடல்.

சோனத்தின் உடலையும் ஐந்தாறு நாள்களாகத் தேடித் திரிந்தது காவல்துறை. இந்த நிலையில், ஜூன் 9-ம் தேதி அதிகாலை, உத்தரப்பிரதேசத்திலுள்ள ஒரு சாலையோரக் கடைக்கு அழுதுகொண்டே வந்த சோனம்,

`மேகாலயாவுக்கு ஹனிமூனுக்குச் சென்ற எங்களிடம் ஒரு கும்பல் நகையைப் பறிக்க முயன்றது. என்னைக் காப்பாற்றும் முயற்சியில் கணவரின் உயிர் பிரிந்துவிட்டது’ எனக் கடையின் உரிமையாளரிடம் கதறியிருக்கிறார்.

அந்தக் கடைக்காரரிடம் செல்போனை வாங்கி, குடும்பத்தினரிடமும் இதே கதையைச் சொல்லியிருக்கிறார்.

இறந்துவிட்டதாக எண்ணிய நிலையில், சோனமின் குரலைக் கேட்டு அதிர்ந்துபோன குடும்பம் உடனடியாக ம.பி காவல்துறைக்குச் சொல்ல, உ.பி காவல்துறைக்குத் தகவல் பறந்திருக்கிறது.

தன்னைத் தேடி அந்தக் கடைக்கு வந்த உ.பி போலீஸைப் பார்த்ததும், பயத்தில், `என் கணவரைக் கொன்றது நான்தான்’ என ஒப்புக்கொண்டு `பகீர்’ கிளப்பியிருக்கிறார் சோனம்.

ம.பி காவல்துறையினரோ, “ரகுவன்ஷியுடனான திருமணத்தில் விருப்பமில்லாத சோனம், தன் காதலன் ராஜ் குஷ்வாஹா என்பவருடன் இணைந்து திட்டமிட்டு, மூன்று கூலிப்படையினரை வைத்து, ஹனிமூனுக்குச் சென்ற இடத்தில் ரகுவன்ஷியைக் கொலைசெய்திருக்கிறார்கள்.

தற்போது சோனமும், குஷ்வாஹாவும், கூலிப்படையினரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்’’ என்கிறார்கள்.

ஹனிமூனில் வைத்து மனைவியே கணவனைக் கொன்ற இந்தச் சம்பவம், தற்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது

Share.
Leave A Reply

Exit mobile version