உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று ஜூன் 15- ஆம் திகதி பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன.

சவூதி அரேபியாவில் இருந்து சவூதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஹஜ் பயணிகள் உட்பட 250 பேர் பயணித்த விமானம் லக்னோ விமான நிலையத்தை நேற்று ஜூன் 15-ந் திகதி வந்தடைந்தது. இந்த விமானம் தரை இறங்கும் போது திடீரென சக்கரங்களில் தீப்பொறி பறந்தது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

ஆனால் விமானி, கவனமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரை இறக்கினார். இதனால் விமானத்தில் பயணம் செய்த 250 பேரும் உயிர் தப்பினர்.

அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்த நிலையில் லக்னோ சம்பவம் குறித்த தகவல்கள் இன்றுதான் வெளியாகி இருக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version