ஈரான் மீதான போர் உணர்த்தும் உண்மை

Published By: Digital Desk 2
22 Jun, 2025 | 04:31 PM
image

 

ஈரான் – இஸ்ரேல் மோதல்கள் தான், இப்­போது உலகம் முழு­வதும் பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது.

ஏனென்றால், இந்தப் போர் உலகம் முழு­வ­திலும் உள்ள மக்கள் மீது ஏதோ ஒரு வகையில் தாக்கம் செலுத்­து­வ­தாக இருக்­கி­றது. ரஷ்ய- உக்ரேன் போர், நான்கு ஆண்­டு­க­ளாக நடந்­தாலும், அதன் தாக்கம் முழு உல­கி­னாலும் உண­ரப்­ப­ட­வில்லை.

ஆனால், ஈரான்- இஸ்ரேல் போர் அப்­ப­டிப்­பட்­ட­தல்ல. அது ஒவ்­வொ­ரு­வ­ரையும் தனிப்­பட்ட முறையில் பாதிக்­கி­றது. காஸா மோதல்கள், உக்ரேன் -ரஷ்ய போரைத் தாண்டி, ஈரான் -இஸ்ரேல் மோதல்கள் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருப்­ப­தற்கு அதுவே காரணம்.

இந்த போர் எதனை நோக்கி செல்­கி­றது? – ஏன் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது? என்­பது ஆரா­யப்­பட வேண்­டி­ய­தொன்று.

2009 ஆம் ஆண்டு, இலங்­கையில் தமி­ழீழ விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ரான போர் எவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­பட்­டதோ, அதற்கும் இப்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற போருக்கும் தொடர்­புகள் இருக்­கின்­றன.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரில் ஈடு­பட்ட இலங்கை இரா­ணு­வத்­திற்கு அமெ­ரிக்­காவின் ஆத­ரவு இருந்­தது, ஈரானின் வலு­வான ஆத­ரவு இருந்­தது, இஸ்­ரேலின் ஆயுத உத­வி­களும் கிடைத்­தி­ருந்­தன.

ஆனால், இப்­போது அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் ஈரானை தாக்­கு­கின்­றன.

ஈரா­னிடம் உள்ள அணு­சக்தி ஆற்­றலும், அத­னிடம் உள்ள சக்தி வாய்ந்த ஏவு­க­ணை­களும் தான், இந்தப் போர் தொடங்­கப்­பட்­ட­தற்கு இஸ்­ரே­லினால் கூறப்­பட்ட காரணம் ஆகும். ஈரான் அணு­குண்­டு­களை தயா­ரிக்கும் கட்­டத்தை எட்டி விட்­ட­தா­கவும், அதனை தயா­ரித்து விட்டால், தற்­போது தயா­ரித்­துள்ள ஏவு­க­ணை­களைக் கொண்டு, இஸ்­ரேலை அழித்து விடும் என்றும் இஸ்ரேல் கூறி­யது. ஈரா­னிடம் அணு ஆயுதம் இருப்­பது தனக்கு ஆபத்து என இஸ்ரேல் கரு­து­கி­றது.

ஈரானின் அந்தப் பலத்தை அழிப்­ப­தற்­கா­கவே ‘ஒப்­ப­ரேசன் ரைசிங் லயன்’ எனும் நட­வ­டிக்­கையை தொடங்­கி­ய­தாக இஸ்ரேல் கூறி­யது.

இஸ்­ரேலின் தாக்­கு­த­லுக்கோ அதன் மிரட்­ட­லுக்கோ ஈரான் மசி­ய­வில்லை. அதற்கு தாறு­மா­றாக ஏவு­க­ணை­களின் மூலம் பதி­லடி கொடுக்கத் தொடங்­கி­யது. இதனால் இஸ்­ரேலும் அமெ­ரிக்­காவும் ஆவேசம் அடைந்­தன.ஏனென்றால், இந்த இரண்டு நாடு­க­ளி­னதும் வான் பாது­காப்பு கட்­ட­மைப்­பு­களால், இஸ்­ரேலை முழு­மை­யாகப் பாது­காக்க முடி­ய­வில்லை.

இஸ்ரேல் மீது விழுந்த ஒவ்­வொரு ஏவு­க­ணையும் இந்த இரண்டு நாடு­க­ளி­னதும் பாது­காப்பு ஓட்­டை­களை உல­கத்­துக்கு எடுத்துச் சொல்லிக் கொண்­டி­ருந்­தது.

ஈரானின் நவீன ஏவு­க­ணைகள் இஸ்­ரேலின் விழுந்து வெடித்து ஏற்­ப­டுத்­திய சேதங்­களை விட, இரண்டு நாடு­க­ளி­னதும் பாது­காப்பு கட்­ட­மைப்பின் மீது வைக்­கப்­பட்­டி­ருந்த நம்­பிக்கை மீது ஏற்­ப­டுத்­திய சேதமே அதிகம்.

அதனால் ஈரானை எப்­ப­டி­யா­வது துவம்சம் செய்து விட வேண்டும் என்ற தீர்­மா­னத்­துடன் அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் செயற்­பட தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

ஈரானின் மீது இஸ்ரேல் எந்த முகாந்­தி­ரமும் இல்­லாமல் தாக்­கு­தல்­களை தொடுத்­தது.

முதலில் தாக்­கு­தலை கொடுத்­தது இஸ்­ரேல்தான். போரை தொடங்கி விட்டு, ஈரானை தாக்­கு­தலை நிறுத்­தும்­படி இரண்டு நாடு­களும் கூறின.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­தி­டு­மாறும் அது சார்ந்த பேச்­சுக்கு வரு­மாறும் இரண்டு நாடு­களும் அழுத்தம் கொடுத்­தன.

அதற்கு மசி­யாத ஈரானை பணிய வைப்­ப­தற்­காக- ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் திட்­டத்தை இப்­பொ­ழுது செயற்­ப­டுத்த தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

இரா­னிய மக்­களை அச்­சு­றுத்தி, ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக திரும்பச் செய்­வ­தற்கு, இந்த இரண்டு நாடு­களும் முயற்­சிக்­கின்­றன. இதற்­காக குழப்பம் விளை­விக்கும் வேலைகள் இஸ்­ரே­லிய புல­னாய்­வா­ளர்­களால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

ஈரானில் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம், பிரச்­சி­னைக்கு முற்று முழு­தாக தீர்வு காண முடியும் என அமெ­ரிக்­காவும் கூறி­யி­ருக்­கி­றது. இஸ்­ரேலும் கூறி­யி­ருக்­கி­றது. அதற்­காக ஈரானின் ஆன்­மீகத் தலைவர் ஆய­துல்லா அலி கமெய்­னியை படு­கொலை செய்­வ­தற்கு இஸ்ரேல் திட்­ட­மிட்­டி­ருக்­கி­றது.

அதனை இஸ்­ரே­லிய தலை­வர்கள் ஒப்புக் கொண்டும் இருக்­கி­றார்கள்.

அமெ­ரிக்­கா­வுக்கு அல்­லது இஸ்­ரே­லுக்குப் பணிந்து போகாத தலை­வர்­களை, ஆட்­சியில் இருந்து அகற்­று­வது அல்­லது உல­கத்தை விட்டு அகற்­று­வது ஓர் உலக நீதி­யாக மாறிக் கொண்­டி­ருக்­கி­றது.

லிபி­யாவில் கேணல் கடா­பியும், ஈராக்கில் சதாம் ஹுசெய்னும் இவ்­வாறு தான் – ஆட்­சியை விட்டு – உல­கத்தை விட்டு அகற்­றப்­பட்­டார்கள்.

அவர்கள் அணு ஆயு­தங்­களை, இர­சா­யன ஆயு­தங்­களை வைத்­தி­ருப்­ப­தாக , தயா­ரிப்­ப­தாக குற்­றச்­சாட்­டுகள் கூறப்­பட்டு சர்­வ­தே­சத்­திடம் இருந்து தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டார்கள். கடை­சியில் அவர்கள் மீது படை­யெ­டுப்­புகள் நடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டார்கள் அல்­லது தூக்கில் போடப்­பட்­டார்கள். ஆனால், கடைசி வரை ஈராக்­கிலோ, லிபி­யா­விலோ, எந்த ஒரு இர­சா­யன ஆயு­தமோ, அணு ஆயு­தமோ கண்­டு­பி­டிக்­கப்­ப­டவே இல்லை.

அதே­போன்­றுதான், இப்­பொ­ழுது ஈரானின் ஆன்­மீகத் தலைவர் கமெய்­னியை அழிப்­ப­தற்கு, அணு ஆயு­தங்­களை அவர் வைத்­தி­ருக்­கிறார் என்ற கார­ணத்தை அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் முன்­னி­றுத்­தி­யி­ருக்­கின்­றன.

எந்த ஒரு நாடும் தன்­னிடம் உள்ள ஆயு­தங்­களை பிற நாடு­களின் மீது பயன்­ப­டுத்­தாமல் இருக்கும் வரை- அதனை அச்­சு­றுத்­த­லுக்­கு­ரிய ஒன்­றாக கருத முடி­யாது.

ஆனால், இஸ்­ரேலோ அமெ­ரிக்­காவோ அப்­ப­டிப்­பட்­ட­வை­யல்ல. தங்­க­ளிடம் உள்ள ஆயு­தங்­களைக் கொண்டு பிற நாடு­களை அச்­சு­றுத்தி வரு­கின்­றன.

அவ்­வப்­போது பிற நாடு­களின் மீது தாக்­குதல் நடத்தி வரு­கின்­றன. தங்­களின் ஆயு­தங்­களை பரி­சோ­தித்து வரு­கின்­றன. அந்த வகையில் இப்­பொ­ழுது ஈரான் பலிக்­கடா வாகி­யி­ருக்­கி­றது, ஆக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது.

சிரி­யாவில் இதே­போன்­றுதான், இர­சா­யன ஆயு­தங்கள் இருப்­ப­தாக கூறி முன்னர், பஷர் அல் அசாத் அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு மேற்­கு­ல­கினால் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

அதற்­கெல்லாம் தாக்குப் பிடித்த அசாத் அண்­மையில் இஸ்ரேல்– அமெ­ரிக்க கூட்டின் இர­க­சிய சதித் திட்­டத்­தினால், ஆட்­சியை இழந்து, தப்­பி­யோ­டு­கின்ற நிலை ஏற்­பட்­டது.

அந்த ஆட்சி மாற்­றத்தை நிகழ்த்­தி­யது இஸ்ரேல் தான் என்று இஸ்­ரே­லிய பாது­காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்­புக்­கொண்­டி­ருந்தார்.

அசாத் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான படை­களை பலப்­ப­டுத்தி, அவர்­களை தாக்­குதல் தொடங்க வைத்து, அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக தாக்­கு­தல்­களை நடத்தி, தங்­களின் திட்­டத்தை நிறை­வேற்­றி­னார்கள்.

அது­மாத்­தி­ர­மன்றி, அந்தச் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி, சிரி­யா­விடம் இருந்த அத்­தனை சக்தி வாய்ந்த ஆயு­தங்­க­ளையும் இஸ்ரேல் தனது போர் விமா­னங்­களைக் கொண்டு தாக்கி அழித்­தது.

இஸ்­ரேலின் இலக்கு, சிரி­யாவில் இருந்து அசாத்தை துரத்­து­வது மாத்­திரம் அல்ல, அத­னிடம் உள்ள சக்­தி­வாய்ந்த ஆயு­தங்­களை இல்­லாமல் அழிப்­பதும் தான்.

அதே­போ­லத்தான், இப்­பொ­ழுது ஈரானை நிரா­யு­த­பாணி ஆக்கும் தாக்­கு­தலை தொடுத்துக் கொண்­டி­ருக்­கி­றது இஸ்ரேல்- –அமெ­ரிக்க கூட்டு.

ஈரான் தன்­னிடம் உள்ள ஏவு­கணை பலத்தைக் கொண்டு இஸ்­ரே­லுக்கு கடு­மை­யான சவாலை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது.

Kim Jong-Un-North Korea

அமெ­ரிக்­கா­வி­னது இந்த விளை­யாட்டு, வட கொரி­யா­விடம் பலிக்­க­வில்லை.

வட கொரி­யாவை சாதா­ரண நாடு என கருத முடி­யாது.

அது ரஷ்­யா­வு­டனும் சீனா­வு­டனும் நெருக்­க­மான உறவை கொண்­டி­ருக்­கி­றது, கிட்­டத்­தட்ட தரை­வழித் தொடர்­பு­க­ளையும் பேணு­கி­றது.

இன்று ரஷ்­யா­வுக்கு தேவை­யான ஆயு­தங்­களை மாத்­தி­ர­மன்றி ஆள­ணி­யையும் போருக்­காக வழங்­கு­கின்ற அள­வுக்கு வட­கொ­ரியா வலு­வான நிலையில் இருக்­கி­றது.

அதன் மீது கை வைத்தால், தென்­கொ­ரியா அழிந்து போகும் என்­பதும், வட­கொ­ரியா எந்த எல்­லைக்கும் செல்ல தயா­ராக இருக்­கி­றது என்­பதும் அமெ­ரிக்­கா­வுக்கு தெரியும்.

அதனால் தான் வட­கொ­ரியா விட­யத்தில் கொஞ்சம் எட்ட நின்றே விவ­கா­ரங்­களை கையாளப் பார்க்­கி­றது.

ஈரான் விட­யத்தில் அவ்­வாறு இல்லை. ஈரா­னுக்கு என அர­பு­லகில் ஆத­ர­வா­ளர்கள் மிக மிகக் குறைவு.

அதனால் இஸ்­லா­மிய உல­கத்தை பிள­வு­ப­டுத்தி, ஈரான் போன்ற நாடு­களை அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் தங்­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றன.

2000 ஆம் ஆண்­டு­களின் தொடக்­கத்தில் கிட்­டத்­தட்ட விடு­தலைப் புலி­க­ளுக்கும் அதே நிலை தான் ஏற்­பட்­டது.

அப்­பொ­ழுது பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போருக்கு அமெ­ரிக்கா தலைமை தாங்க தொடங்கி இருந்­தது. அந்த சந்­தர்ப்­பத்தை இலங்கை அர­சாங்கம் பயன்­ப­டுத்திக் கொண்­டது.

விடு­தலைப் புலி­களை தனி­மைப்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு எதி­ராக சர்­வ­தேச வலைப்­பின்னல் உரு­வாக்­கப்­பட்­டது. அதன் தொடர்ச்­சி­யாக, விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­கரன், சர்­வ­தேசம் காட்டும் பாதையில் பய­ணிக்க நிர்­பந்­திக்­கப்­பட்டார்.

பிர­பா­க­ரனை வேட்டி கட்­டிய அர­சி­யல்­வா­தி­யாக மாற்ற முயன்­றது மேற்குலகம். ஆனால், அவர் தனது இலக்கில் இருந்து விலகத் தயாராக இருக்கவில்லை.

சீருடை அணிந்த போராளியாக மரணத்தை தழுவ தயாராக இருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை, பயங்கரவாதத்துக்கு எதிரான போராக அடையாளப்படுத்தி, சர்வதேச ஆதரவுடன் அதில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் எந்த ஒரு நாட்டுக்கும் அடிபணியாத அமைப்பு எனப் பெயரெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம், அதன் தலைமைத்துவம் எல்லாமே அடியோடு அழிக்கப்பட்டன.

மேற்குலகம் விரும்புகின்ற உலக ஒழுங்கிற்கு ஒத்திசைந்து போகாத உலகத் தலைவர்களாக இருந்தாலும் சரி, அமைப்புகளின் தலைவர்களாக இருந்தாலும் சரி- அவர்களால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது.

இதனை அவ்வப்போது அமெரிக்கா மற்றும் அதனுடன் இணைந்த நாடுகள் வெளிப்படுத்தி வருகின்றன. ஈரானில் இப்பொழுது நடக்கின்ற தாக்குதல்களையும் அவ்வாறே பார்க்க வேண்டியிருக்கிறது.

ஹரிகரன்

 

Share.
Leave A Reply

Exit mobile version