தமிழ் திரையுலகில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்தவர் சூப்பர் சுப்பராயன். இவரின் மகனான திலீப் சுப்பராயனும் தற்போது சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இவர் தான் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.

நேற்று வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் ஹரி ஹர வீர மல்லு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரும் இவர்தான்.

இந்நிலையில் இவர் மீது இன்ஸ்டாகிராம் பிரபலம் இலக்கியா அவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அதனை அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேரும் செய்துள்ளார். அதில் அவர்,”என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம்.

என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன்கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்க கூட பழக்கம், அதைக்கேட்ட என்னை போட்டு அடிக்குறான்.

நானும் பொறுத்து பொறுத்து… என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான் என தன் இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஸ்டோரியில் திலீப் சுப்பராயனின் போட்டோவையும் பதிவிட்டிருக்கிறார்”. இந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இலக்கியா தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

அதிக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற யூடியூபர் இலக்கியா போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்படுள்ளார். இச்செய்தி தற்பொழுது பேசும் பொருளாக மாறியுள்ளது.

தொடர்புடைய செய்தி

பிரபல யூடியூபர் இலக்கியா தற்கொலை முயற்சியா?

பிரபல யூடியூபர் இலக்கியா அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டதாக அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வருபவர் பிரபல யூடியூபர் இலக்கியா.

 

இவர் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறி பூந்தமல்லியில் உள்ள அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வைத்திய பரிசோதனையில், அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டுள்ளமையும், அதிக அளவில் மது போதையில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

எனவே கீழ்ப்பாக்கம் அரசு வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முடிவு செய்த நிலையில், உடன் இருந்த நபர் போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்.

போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் யூடியூபர் இலக்கியா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version