“ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கூறினார்.

இது பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த உதவும் என்று நம்புவதாக மேக்ரோன் கூறினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “மத்திய கிழக்கில் ஒரு நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான வரலாற்று உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் விதமாக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது” என்று மேக்ரோன் கூறினார்.

அடுத்த செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் இந்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

இதன்மூலம் ஐரோப்பாவின் மிகப்பெரிய யூத மற்றும் முஸ்லிம் சமூகங்களைக் கொண்ட பிரான்ஸ், பாலஸ்தீன அரசை அங்கீகரித்த முதல் பெரிய மேற்கத்திய நாடாக மாறும். இந்நிலையில் பிரான்சின் அறிவிப்புக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறுகையில், அத்தகைய நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாகவும், மற்றொரு ஈரானிய ‘பினாமியை’ உருவாக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் கூறினார்.

மேலும், “பாலஸ்தீன நாடு இஸ்ரேலை அழிப்பதற்கான ஒரு ஏவுதளமாக இருக்கும். பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் ஒரு நாட்டைத் தேடவில்லை.

அவர்கள் இஸ்ரேலுக்குப் பதிலாக ஒரு நாட்டைத் தேடுகிறார்கள்,” என்று நேதன்யாகு தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவும் பிரான்சின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “,

Share.
Leave A Reply

Exit mobile version