நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 22 ஆம் நாளான இன்று (19) காலை தண்டாயுதபாணி உற்சவம் இடம்பெற்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் ஒருமுகத்திருவிழா
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தில் 22 ஆம் நாள் திருவிழாவான இன்று (19) செவ்வாய்க்கிழமை மாலை ஒருமுக உற்சவம் இடம்பெற்றது.
நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளைய தினம் புதன்கிழமை மாலை சப்பர திருவிழா இடம்பெறவுள்ளது.
நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.