அமெரிக்காவில் சாலையின் நடுவே குர்ப்ரீத் சிங், தனது வாகனத்தை நிறுத்தி வைத்து, கையில் கூர்மையான கட்கா என்ற வாளை சுழற்றி, கலைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரை ஆபத்தான நபராகக் கருதி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உயிரிழந்தவர் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த குர்ப்ரீத் சிங். சுமார் 35 வயதான இவர், பஞ்சாபி மரபுக் கலைகளில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

குறிப்பாக, சீக்கிய சமூகத்தின் பாரம்பரிய யுத்தக்கலை கட்காவைக் காட்சிப்படுத்துவதில் பெரும் ஈடுபாடு கொண்டவர்.

ஜூலை 13, 2025 அன்று, சாலையின் நடுவே தனது வாகனத்தை நிறுத்தி வைத்து, கையில் பாரம்பரிய கூர்மையான வாள் போன்ற கண்டாயுடன் கட்கா கலைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரை ஆபத்தான நபராகக் கருதி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தது, உள்ளூர் மக்களிடையிலும் உலக சிக் சமூகத்திடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் அளித்த தகவலின்படி, அந்த நபர் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தியதால், அங்கு இருந்த பொதுமக்களின் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாகும் என அவர்கள் கருதினர்.

பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர் கேட்கவில்லை என்பதால், துப்பாக்கிச் சூடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால், காவல்துறையின் நடவடிக்கை அவசியமானதா அல்லது அதிகப்படியானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சம்பவம் வெளிப்பட்டதும் சீக்கிய சமூகத்தினரிடையே அதிருப்தி கிளம்பியுள்ளது. பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்திய ஒருவரை குற்றவாளியாகக் கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியது நியாயமற்றது என அவர்கள் வாதிடுகின்றனர்.
Gurpreet Singh

சிலர் இதை இன அடையாளம் மற்றும் மத அடையாளத்தை தவறாகப் புரிந்துகொண்டதால் நிகழ்ந்த துயரமாகக் கூறுகின்றனர்.

இச்சம்பவம் காவல்துறையின் நடவடிக்கை, கலாச்சார வெளிப்பாடுகள் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் விவாதிக்க வைக்கிறது.

அமெரிக்காவில் காவல்துறை துப்பாக்கிச் சூடுகள் அதிகரித்து வரும் சூழலில், இது போன்ற சம்பவங்கள் “மனிதாபிமான அடிப்படையில் வேறு வழிகள் தேட முடியாதா?” என்ற கேள்வியை எழுப்புகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version