கடந்த ஆண்டு வளி மாசுபாட்டுக்கு காலநிலை மாற்றத்தால் அடிக்கடி ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள் காரணமாக அமைந்துள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சுற்றுப்புற வளி மாசுபாடு ஆண்டுக்கு 4.5 மில்லியன் அகால மரணங்களை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடும் காட்டுத் தீ ஏற்படும்  அமேசன் காடுகள், கனடா, சைபீரியா மற்றும் மத்திய ஆபிரிக்கா போன்ற இடங்கள்  வளி மாசுபாடு ஏற்படும் இடங்களாக 2024 ஆம் ஆண்டிற்கான உலக வானிலை அமைப்பு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

புதைபடிவ எரிபொருள் உமிழ்வுகளால் ஏற்படும் புவி வெப்பமடைதல் வானிலை முறைகளை மாற்றுவதால், காட்டுத்தீ உலகம் முழுவதும் அடிக்கடி மற்றும் பரவலாகி வருகிறது. நிலக்கரி, எண்ணெய், எரிவாயு மற்றும் மரம் எரிப்பதாலும், போக்குவரத்து மற்றும் விவசாயத்தாலும் உருவாகும் காற்றில் பரவும் துகள்களுடன் இதுவும் இணைகிறது.

“காட்டுத்தீ தூசிகள் மாசுபாட்டிற்கு ஒரு பெரிய பங்களிப்பாகும், மேலும் காலநிலை வெப்பமடைகையில் இந்த பிரச்சினை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு அதிகரித்து வரும் அபாயங்களை ஏற்படுத்துகிறது,” என உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

“காலநிலை மாற்றம் மற்றும் வளியின் தரத்தை தனித்தனியாகக் கையாள முடியாது. நமது , சமூகங்கள் மற்றும்  பொருளாதாரங்களைப் பாதுகாக்க அவற்றை ஒன்றாகச் சமாளிக்க வேண்டும்.” என துணை பொதுச்செயலாளர் கோ பாரெட் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தெற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் அளவு கண்டம் முழுவதும் மாசுபாட்டிற்கு பங்களித்ததாக உலக வானிலை அமைப்பு  தெரிவித்துள்ளது.

காட்டுத் தீ குறைக்க எடுத்த முயற்சிகளால் கிழக்கு சீனாவில் வளி மாசுபாடு குறைந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version