ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் முச்சக்கரவண்டியும்  மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்து வெள்ளிக்கிழமை (05) மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறு குழந்தை ஒன்று  படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவையில் எரிபொருள் விநியோக நிலையத்திலிருந்து கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் சேமிப்பு வளாகத்திற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றே முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும், பாரவூர்தியில் இருந்து எரிபொருளை இறக்கிய பின்னர் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version