உள்நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 337,600 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொழும்பு, புறக்கோட்டை சந்தையில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை நேற்று திங்கட்கிழமை 319,000 ரூபாவாக இருந்தது.

இன்று (14) காலை 10:30 மணி நிலவரப்படி 337,600 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, நேற்று திங்கட்கிழமை 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 345,000 ரூபாவாக இருந்தது.

இன்றையதினம் 365,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்

Share.
Leave A Reply

Exit mobile version