மாத்தளை – பல்லேபொல பகுதியில் புதையல் தோண்டியதாக, சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் மாதிபொல பகுதியில் வைத்து புதையல் தோண்டும் போது, நேற்றையதினம் (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மில்லவான, தம்மின்ன, மாதிபொல, தெஹியத்தகண்டிய, வெலிகந்த போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேபொல  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version