காஸாவில் பலஸ்­தீன பொது­மக்கள் மீது இஸ்ரேல் மேற்­கொண்­டுள்ள வர­லாற்றின் இடைக்­காலப் பகு­தியை ஒத்த சட்­ட­வி­ரோத காட்­டு­மி­ராண்­டித்­த­னத்தை அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து,

ஐரோப்­பிய மற்றும் அரபு சர்­வா­தி­கா­ரிகள் ஆத­ரித்த வரு­கின்ற நிலையில் இஸ்ரேல் குறுத்த உல­க­ளா­விய தீர்­மானம் ஒன்­று­பட்­ட­தா­கவே உள்­ளது.

இந்­நி­லையில் இஸ்­ரே­லி­யர்கள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்குக் கரை­யையும் தம்­மோடு இணைத்துக் கொள்ள முன்­னேறி வரு­கின்­றனர்.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட நிலப்­ப­ரப்பை இணைப்­பது சர்­வ­தேச சட்­டத்தின் கீழ் சட்­ட­வி­ரோ­த­மா­னது. எவ்­வா­றா­யினும் பலஸ்­தீ­னர்­களை இனப்­ப­டு­கொலை செய்­து­வெ­ளி­யேற்­றிய பின்னர் பலஸ்­தீன நிலங்­களில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அனைத்து சட்­டங்­க­ளையும் விதி­மு­றை­க­ளையும் மீறி பிரிட்டிஷ் ஏகா­தி­பத்­திய சக்­தியால் உரு­வாக்­கப்­பட்ட ஒரு செயற்கை நிறு­வ­ன­மான இஸ்ரேல், அமெ­ரிக்­கா -­ இங்­கி­லாந்­து-­ -­ஐ­ரோப்பா மற்றும் அரபு சர்­வா­தி­கா­ரி­களால் ஆத­ரிக்­கப்­ப­டு­வதால் அனைத்து சட்­டங்­க­ளையும் மீறலாம் என்ற நிலை அங்கு ஏற்­­கெனவே உரு­வாக்­கப்­பட்டு விட்டது.

இஸ்­ரேலின் தீவி­ர­வாதப் போக்கு நிதி­ய­மைச்­சரும் இன்­றைய நிலையில் மேற்குக் கரையின் ஆளு­ந­ரு­மான பெசலெல் ஸ்மோட்ரிச், மேற்குக் கரையின் 82 சத­வீ­தத்தை இஸ்­ரே­லுடன் இணைக்கும் திட்­டத்தை வெளி­யிட்­டுள்ளார்.

இது எதிர்­கா­லத்தில் பலஸ்­தீன அர­சொன்று அமை­வ­தற்­கான வாய்ப்பை திறம்­பட அகற்றும் ஒரு நட­வ­டிக்­கை­யாகும்.

அந்த வகையில் 1967 ஆம் ஆண்­டு­ ஆறு நாள் போரின் போது கைப்­பற்­றப்­பட்ட மேற்குக் கரையை அல்­லது அதன் சில பகு­தி­களை இஸ்­ரே­லுடன் இணைப்­பது பற்றி இஸ்­ரே­லிய அர­சி­யல்­வா­தி­களால் தற்­போது பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அரபு மொழியில் அல்-­தஃபா என்று அழைக்­கப்­படும் மேற்குக் கரை, ஜோர்தான் ஆற்றின் மேற்கே உள்­ளது.

அதனால் தான் அந்தப் பகுதி அதன் பெயரைப் பெறு­கி­றது. ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட கிழக்கு ஜெரு­ச­லே­முடன் சேர்த்து, இது 5,655 சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ளவைக் கொண்­டுள்­ளது.

இது காஸாவை விட 15 மடங்கு பெரி­யது. இது 2,747,943 பலஸ்­தீ­னர்கள் மற்றும் 670,000 இற்கும் மேற்­பட்ட இஸ்­ரே­லிய வந்­தேறுகுடி­களைக் கொண்­டுள்­ளது. அவர்­களில் சுமார் 220,000 பேர் கிழக்கு ஜெரு­ச­லேமில் வாழ்­கின்­றனர்.

இது 11 ஆளுநர் பிரி­வு­க­ளாகப் பிரிக்­கப்­பட்­டுள்­ளது. இதில் ஹெப்ரோன் அல்­லது அரபு மொழியில் அல்-­கலீல் சுமார் 842,000 குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுடன் அதிக மக்கள் தொகை கொண்ட பிர­தே­ச­மாகும்.

ஜெரு­சலேம் 500,000, நப்லஸ் 440,000, ரமல்லா மற்றும் எல்-­பைரே 377,000 மற்றும் ஜெனின் 360,000 சனத்­தொ­கை­யுடன் ஏனைய பகு­தி­க­ளாக உள்­ளன. சுமார் 700,000 இஸ்­ரே­லி­யர்கள் பலஸ்­தீன பூமியில் சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்­களில் வாழ்­கின்­றனர்.

1947 ஐ.நா. ஒப்­பந்­தத்தின் கீழ், இப்­போது மேற்குக் கரையில் உள்ள பெரும்­பா­லான பிர­தேசம் பலஸ்­தீன அரசின் ஒரு பகு­தி­யாக மாறி இருக்க வேண்டும். பலஸ்­தீ­னர்­களை விரட்­டி­ய­டித்த பின்னர் பலஸ்­தீன நிலங்­களில் இஸ்ரேல் அரசு நிறு­வப்­பட்­ட­போது பிரி­வினை திட்டம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

ஒரு யுத்த நிறுத்­தத்தைத் தொடர்ந்து, ஜோர்தான் இப்­ப­கு­தியின் கட்­டுப்­பாட்­டை­கொண்­டி­ருந்­தது. 1950 இல் அதை தன்­னோடு இணைத்­ததும் கொண்­டது.

1967 ஆம் ஆண்டு ஆறு நாள் போரின் போது இஸ்ரேல் இதை மீண்டும் ஆக்­கி­ர­மித்­தது. 1970கள் மற்றும் 80களில் இஸ்ரேல் அங்கு குடி­யேற்­றங்­களை நிறு­வி­யது. இது அரபு மக்­க­ளி­டையே அதி­ருப்­தி­யையும் சர்­வ­தேச சமூ­கத்தின் எதிர்ப்­பையும் தூண்­டி­யது.

அரபு கிளர்ச்­சிகள் 1987இல் காஸா பகு­தியில் தொடங்கி மேற்குக் கரை வரை பர­வின. ஜோர்தான் 1988 இல் தனது உரிமைக் கோரல்­களைக் கைவிட்­டது.

பலஸ்­தீன விடு­தலை அமைப்பு (பி.எல்.ஓ) அதி­கா­ரத்தை ஏற்­றது. 1993ல் பி.எல்.ஓ- அமைப்புக்கும் இஸ்­ரே­லுக்கும் இடை­யி­லான இர­க­சிய சந்­திப்­புகள், வன்­மு­றையை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்கும், மேற்குக் கரை மற்றும் காஸா பகு­தியின் சில பகு­தி­களில் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு சுயாட்­சியை வழங்­கு­வ­தற்­கான உடன்­ப­டிக்­கைக்கும் வழி­வ­குத்­தன.

நிலு­வையில் உள்ள பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் 1990 களில் இடை­வி­டாமல் தொடர்ந்­தன. ஆனால், 2000 ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் புதி­தாக தோன்­றிய வன்­மு­றை­க­ளுக்கு மத்­தியில் அவை முறி­வ­டைந்­தன.

2007 ஆம் ஆண்டில், முன்­னணி பலஸ்­தீன அமைப்­பு­க­ளான ஹமா­ஸுக்கும் ஃபதா­ஹுக்கும் இடை­யி­லான மோதல்கள் காஸா பகு­தியின் கட்­டுப்­பாட்டை ஹமாஸ் கைப்­பற்­று­வ­தற்கும், மேற்குக் கரையின் கட்­டுப்­பாட்டை ஃபதாஹ் தலை­மை­யி­லான அவ­சர அமைச்­ச­ரவை பொறுப்­பேற்­கவும் வழி­வ­குத்­தன.

2010 களில் ஃபத்தாஹ் ஆதிக்கம் செலுத்­திய பலஸ்­தீன அதி­கார சபை மேற்குக் கரையின் நகர்ப்­புற பலஸ்­தீன பகு­தி­களில் தன்னை ஒரு சுயா­தீன அர­சாங்­க­மாக நிலை­நிறுத்த முயன்­றது. அதே நேரத்தில், இஸ்ரேல் பிராந்­தி­யத்தில் தனது குடி­யேற்ற நட­வ­டிக்­கை­களை விரி­வு­ப­டுத்­தி­யது.

2022 ஆம் ஆண்டில் மேற்குக் கரையில் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ராக இஸ்ரேல் ஏரா­ள­மான தாக்­கு­தல்­களை நடத்­தி­யது. 2023 ஆம் ஆண்டில் இஸ்­ரேல்-­ – ஹமாஸ் போர் தொடங்­கி­யது முதல் இஸ்­ரே­லிய இரா­ணுவம் மேற்குக் கரையில் நட­மாட்­டத்தைக் கட்­டுப்­ப­டுத்தத் தொடங்­கி­யது மற்றும் அங்கு சுற்றி வளைப்பு சோத­னை­க­ளையும் அதி­க­ரித்­தது.

இஸ்­ரே­லிய யூத குடி­யேற்றத் தாக்­கு­தல்கள் மேற்குக் கரையில், குறிப்­பாக குடி­யேற்ற புற நகர் காவல் நிலை­யங்­க­ளுக்கு அருகில் தின­சரி நிகழ்­வாக மாறி­விட்­டன. குடி­யேற்­ற­வா­சிகள் பலஸ்­தீன சமூ­கங்­க­ளுக்­கான வீதி­களைத் தடுத்­துள்­ளனர்.

அத்­தி­யா­வ­சிய சேவைகள் மற்றும் வாழ்­வா­தா­ரங்­க­ளுக்­கான அணு­க­லையும் தடுத்­துள்­ளனர். சில சந்­தர்ப்­பங்­களில், அவர்கள் நீர் ஆதா­ரங்­களை அழித்து, பலஸ்­தீன மந்தை மேய்க்கும் மக்கள் பிரிவின் சமூ­கங்­க­ளுக்­கான முக்­கிய வளங்­களை துண்­டித்­துள்­ளனர்.

பலஸ்­தீன தலை­வர்கள், எதிர்­கால அர­சுக்­காக மூன்று பிர­தே­சங்­க­ளையும் விரும்­பு­கின்­றார்கள். சுமார் 3 மில்­லியன் பலஸ்­தீ­னர்­களும் 500,000 இற்கும் மேற்­பட்ட இஸ்­ரே­லிய குடி­யேற்ற வாசி­களும் தற்­போது மேற்குக் கரையில் வசிக்­கின்­றனர். மேற்குக் கரையை இணைப்­பது ஒரு பலஸ்­தீன அரசை உரு­வாக்­கு­வ­தற்­கான வழி­களை சாத்­தி­ய­மற்­ற­தாக்கும். இது இஸ்­ரே­லி­ய-­ – ப­லஸ்­தீன மோதலைத் தீர்ப்­ப­தற்­கான மிகவும் யதார்த்­த­மான வழி­யாக சர்­வ­தேச அளவில் கரு­தப்­ப­டு­கி­றது.

காஸா மீதான இஸ்­ரேலின் கொடிய போரைத் தொடர்ந்து, இஸ்­ரே­லிய படைகள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்குக் கரையில் உள்ள பலஸ்­தீன நக­ரங்கள் மற்றும் கிரா­மங்கள் மீது தாக்­கு­தல்­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளன.

இருப்­பினும், இஸ்­ரே­லி­ய –­ப­லஸ்­தீன மோதலின் மைய­மாக மேற்குக் கரை உள்­ளது. காஸா பகு­தி­யுடன் இதை தங்கள் கற்­ப­னை­யான அரசின் மைய­மாக பலஸ்­தீ­னர்கள் கரு­து­கின்­றனர்.

மிக வேக­மாக அதி­க­ரித்து வரும் இஸ்­ரே­லிய குடி­யேற்­ற­வா­சி­களின் தாய­க­மா­கவும் இது மாறி வரு­கின்­றது. பிரிவு ‘சி’ பகு­தியில் 230 இஸ்­ரே­லிய குடி­யேற்­றங்கள் உள்­ளன. அங்கு இஸ்­ரே­லிய சட்டம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஒஸ்லோ உடன்­ப­டிக்­கையின் கீழ் இந்த பகுதி பெரும்­பாலும் 1997 க்குள் பலஸ்­தீன தேசிய அதி­கார ஆணை­யத்­திற்கு மாற்­றப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் இஸ்ரேல் இந்த ஒப்­பந்­தத்தை மதிக்க தவ­றி­விட்­டது. மேற்குக் கரையில் உள்ள இஸ்­ரே­லிய குடி­யேற்­றங்கள் சர்­வ­தேச சட்­டத்தின் கீழ் சட்­ட­விரோ­த­மா­னவை என்று சர்­வ­தேச சமூகம் கரு­து­கின்­றது.

2007 ஆம் ஆண்டில் மனி­தா­பி­மான விவ­கா­ரங்­களின் ஒருங்­கி­ணைப்­புக்­கான ஐ.நா. அலு­வ­ல­கத்தின் மதிப்­பீட்டின் படி, மேற்குக் கரையின் சுமார் 40% பகுதி இஸ்­ரே­லிய உள்­கட்­ட­மைப்பால் உள்­வாங்­கப்­பட்­டுள்­ள­தாகக் கண்­ட­றி­யப்­பட்­டது.

குடி­யேற்­றங்கள், தடைகள், இரா­ணுவத் தளங்கள் மற்றும் மூடிய இரா­ணுவப் பகு­திகள் ஆகி­ய­வற்றைக் உள்­ள­டக்­கி­யதே இந்த உள்­கட்­ட­மைப்­பாகும். இங்­குள்ள இயற்கை இருப்­புக்­க­ளையும் மற்றும் அவற்றுடன் வரும் வீதிகளையும் இஸ்ரேல் தடுத்துள்ளது.

மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் குடியேற்றவாசிகள் இருப்பது அவர்களின் அரச அந்தஸ்து மற்றும் இறையாண்மைக்கான உரிமையை மீறுவதாக ‘பலஸ்தீன மக்கள் கருத்து’ என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது 1989ல் முன்னாள் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்ததிலிருந்து நடந்து வருவதைப் போல முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமித்து அழித்து முஸ்லிம்களை படுகொலை செய்யும் அமெரிக்க- -இங்கிலாந்து –ஐரோப்பிய புதிய உலக ஒழுங்கின் கீழ் இவை இடம்பெறுகின்றன.

இதுவரை பல முஸ்லிம் நாடுகள் தகர்த்து தள்ளப்பட்டுள்ளன. மில்லியன் கணக்கானவர்கள் அமெரிக்க- -பிரித்தானிய- ஐரோப்பிய மேற்கத்திய நாடுகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காஸாவில் நடைபெற்று வரும் இனப்படுகொலையும், மேற்குக் கரையை இஸ்ரேல் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையும் இந்த தொடர் போர்க்குற்றங்களின் அண்மைக்கால நிகழ்வுகளாகவே அமைந்துள்ளன.

லத்தீப் பாரூக்

Share.
Leave A Reply

Exit mobile version