கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 10 குழந்தைகளும் 16 பெண்களும் அடங்குவர்.
அவர்களில் 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. எஞ்சிய 5 பேரின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
உயிரிழந்தவர்கள் யார்?
1. தாமைரக்கண்ணன் (25), பாகநத்தம், கரூர்
2. ஹேமலதா, விஸ்வநாதபுரி, கரூர்
3. சாய்லெட்சனா (8), விஸ்வநாதபுரி, கரூர்
4. சாய்ஜீவா (4), விஸ்வநாதபுரி, கரூர்
5. சுகன்யா (33), காவலர் காலனி, கரூர்
6. ஆகாஷ் (23), காமராஜ்புரம் வடக்கு, கருர்
7. தனுஷ்குமார் (24), காந்திகிராமம், கரூர்
8. வடிவழகன் (எ) வடிவேல் (54), பசுபதிபாளையம், கரூர்
9. ரேவதி (52), கொடுமுடி, ஈரோடு
10. சந்திரா (40), ஏமூர் புதூர், கரூர்
11. குருவிஷ்னு (2), வேலுச்சாமிபுரம், கரூர்
12. ரமேஷ் (32), கோடங்கிபட்டி, கரூர்
13. சனுஜ் (13), தாந்தோனி கிராமம், கரூர்
14. ரவிகிருஷ்ணன் (32), எல்.என்.எஸ் கிராமம், கரூர்
15. பிரியதர்ஷணி (35), ஏமூர் கிராமம், கரூர்
16. தரணிகா (14), ஏமூர் கிராமம், கருர்
17. பழனியம்மாள் (11), வேலுச்சாமிபுரம், கரூர்
18. கோகிலா (14), வேலுச்சாமிபுரம், கரூர்
19. மகேஷ்வரி (45), அருகம்பாளையம், மண்மங்கலம்
20. அஜிதா (21), அரவக்குறிச்சி, கரூர்
21. மாலதி (36), ராயனூர் வடக்கு, கரூர்
22. சுமதி (50), ரெத்தினம் சாலை, கரூர்
23. மணிகண்டன் (33), காங்கேயம், திருப்பூர்
24. சதீஷ்குமார் (34), கொடுமுடி, ஈரோடு
25. கிருத்திக்யாதவ் (7), 5 ரோடு, கரூர்
26. ஆனந்த் (26), சுக்காம்பட்டி, சேலம்
27. சங்கர் கனேஷ் (45), குஜிலியம்பாறை, திண்டுக்கல்
28. விஜயராணி (42), பிச்சம்பட்டி, கரூர்
29. கோகுலபிரியா (28), காங்கேயம், திருப்பூர்
30. பாத்திமாபானு (29), ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்
31. கிஷோர் (17), அன்பு நகர், கரூர்
32. ஜெயா (55), வெங்கமேடு, கரூர்
33. அருக்காணி (60), ஏமூர், கரூர்
34. ஜெயந்தி (43), வேலாயுதம்பாளையம், புகளூர்
உயிரிழந்தவர்களின் உருக்கமான பின்னணி
விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த தாமரைக் கண்ணனுக்கு திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆகிறது. அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களில் கரூர் விஸ்வநாதபுரியைச் சேர்ந்த ஹேமலதாவும், அவர்களது குழந்தைகள் சாய் லெட்சனா, சாய்ஜீவாவும் அடங்குவர். சாய் லெட்சனா கரூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தார்.
உயிரிழந்தவர்களில் 28 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏமூர் கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடையாளம் காணப்பட்டவர்களில் 8 பேர் குழந்தைகள் எனத் தெரியவந்துள்ள நிலையில் மொத்தம் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு
கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 52 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.