குருநாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அதற்மைய இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
நா உயன ஆரண்ய சேனாசனத்தின் மடங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கேபிள் கார் உடைந்து வீழ்ந்த விபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 7 பிக்குகள் முன்னதாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் ரஷ்யா, ருமேனியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டுப் பிக்குகளும் அடங்குவர். உயிரிழந்த உள்நாட்டுப் பிக்குகளின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இதேவேளை, இந்த விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த 5 பிக்குகள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.