கிளிநொச்சி முறிப்பு பகுதியில் 2015 ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட் படுத்திய குற்றவாளிக்கு 10 ஆண்டு கால கடூழிய சிறை தண்டனை விதித்து கிளிநொச்சி மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு 14 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியமை தொடர்பில் கிளிநொச்சி பொலிசாரால் கிளிநொச்சி நீதிவான் நீதிமன் த்தில் வழக்கு தொடரப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த வழக்கு கிளி நொச்சி மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கானது நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி யு.பு.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த எதிரி மற்றும் பாதிக்கப் பட்ட சிறுமி அவரது தாயார் மன்றில் ஆஜராகி இருந்த நிலையில் இச்சம்பவத்துடன் தொடர் புபட்ட எதிரிக்கு 10 ஆண்டுகால கடூழிய
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் ஐயாயிரம் ரூபாய் தண்ட பணமும் விதிக்கப்பட் டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version