களுதர போம்புவல புஸ் கோட்டா என அழைக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் தலைமையிலான மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது இரண்டு பெண்கள் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்களுடன் 5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்களில் இரண்டு மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குகளும் இரண்டு மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்களும் அடங்குவர்.

சந்தேக நபர்களால் திருடப்பட்ட 11 மோட்டார் சைக்கிள்கள், பிரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் முக்கிய சந்தேக நபரிடமிருந்து 10,300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version