மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நேற்று(14) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளம்

அத்தோடு, கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.

பல இடங்களில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையும் காண முடிகின்றது.

தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் சில பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் பாதிக்கப்படும் நிலைமைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்

இதேநேரம் கடந்த 11.11 2025 அன்று உருவான காற்றுச் சுழற்சி நகர்வதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கன மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இந்த மழை எதிர்வரும் 20.11.2025 வரை தொடரும் வாய்ப்பு உள்ளது.

கனமழைக்கு வாய்ப்புள்ளதனால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version