முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், விவசாய அமைச்சகத்திற்காக இராஜகிரிய பகுதியில் ஒரு கட்டிடத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று (டிசம்பர் 11, 2025) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜரானார்.

இந்தச் சம்பவம் நடந்த காலத்தில் முன்னாள் அமைச்சரவை அமைச்சராகவும், வெகுசன ஊடகத்துறை அமைச்சராகவும் கடமையாற்றிய அவர், இன்று காலை 9 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையாகி, சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version