ஹட்டன் – சிவனொளிபாதமலை பாதை முழுமையாக புனரமைப்பு
‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சேதமடைந்த மஹகிரிதம்ப பகுதி, இலங்கை இராணுவத்தினால் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட ஹட்டன் – சிவனொளிபாதமலை பிரதான பாதை தற்போது மீண்டும் யாத்திரிகர்களுக்காக திறப்பாகியுள்ளது. இலங்கை இராணுவத்தினர் பாதையை முறையாகத் திருத்தி, பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
நவீன பாதுகாப்பு வசதி:
ஸ்ரீபாதஸ்தானாதிபதி பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன நாயக்க தேரர், இராணுவத் தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, பாதையில் யாத்திரிகர்கள் பாதுகாப்பாக பயணிக்கக்கூடிய வகையில் நவீன பாதுகாப்பு வேலி ஒன்றையும் அமைத்துள்ளனர்.
புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததால், ஹட்டன் வீதி வழியாக வரும் பக்தர்கள் எவ்வித தடங்கலுமின்றி சிவனொளிபாதமலை யாத்திரையை மேற்கொள்ள முடியும் என, சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தொரபனே சுமனஜோதி தேரர் தெரிவித்தார்.

