வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நோபல் அமைதிப் பரிசு பதக்கத்தை பரிசாக வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், குறித்த பதக்கத்தை ட்ரம்ப் தம்மிடமே வைத்துக்கொள்ள உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ட்ரம்ப் பதிவு

இதுதொடர்பாக ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில், இந்த நோபல் அமைதிப் பரிசு பதக்கம் “பரஸ்பர மரியாதையின் ஒரு அற்புதமான அடையாளம்” என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சை உருவாகும் பின்னணி

வெனிசுவேலாவின் அரசியல் சூழ்நிலையில் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவரால் வழங்கப்பட்ட இந்தப் பரிசு, சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, நோபல் அமைதிப் பரிசு பதக்கம் தனிநபரால் வழங்கப்பட்டு, அதனை ஒரு நாட்டின் ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் வைத்திருப்பது தொடர்பில் புதிய சர்ச்சை எழுந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரபூர்வமாக மேலும் விளக்கங்கள் வெளியாகுமா என்பதில் சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version