சென்னை: தென்னிந்திய சினிமாவில் நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா கிருஷ்ணன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வரும் அவர்,
சமீப காலமாக தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பேச்சுகளால் மீண்டும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார்.
அதே நேரத்தில், அவரது சினிமா பயணம், வாழ்க்கை முறை, சம்பளம், சொத்து மதிப்பு போன்ற விஷயங்களும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன.
திரிஷா முதலில் சினிமாவுக்கு வர வேண்டும் என்று நினைத்தவர் அல்ல. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு அவர் சென்னையில் உள்ள எதிராஜ் மகளிர் கல்லூரியில் BBA படித்தார்.
அப்போது அவர் மனதில் இருந்த ஆசை சினிமா அல்ல; குற்றவியல் உளவியல் நிபுணராக (Criminal Psychologist) வேலை பார்க்க வேண்டும் என்பதுதான்.
ஆனால் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் மாடலிங் துறையில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அதன்பிறகு அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.

அந்த வெற்றிக்குப் பிறகு விளம்பரங்கள், மாடலிங் போன்ற வாய்ப்புகள் அவரை தேடி வந்தன. அதே சமயம் சினிமாவிலும் சிறிய வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.
திரிஷா முதலில் சிறிய கதாபாத்திரமாக நடித்த படம் ஜோடி. ஆனால் அதில் பெரிய கவனம் கிடைக்கவில்லை.
அதன் பிறகு அவருடைய சினிமா பயணம் வேகமாக முன்னேறியது. குறிப்பாக சாமி, கில்லி, ஆறு, உனக்கும் எனக்கும் போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால் திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்
அதேபோல் தெலுங்கு சினிமாவிலும் அவர் நல்ல பெயர் பெற்றார். வர்ஷம், நுவ்வோஸ்தானண்டே நெனோடண்டானா, அதடு போன்ற படங்கள் அங்கேயும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கின.
திரிஷாவின் சினிமா பயணத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், காலம் மாறினாலும் அவர் தனது இடத்தை இழக்காமல் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டே இருக்கிறார்.
குறிப்பாக 96 திரைப்படத்தில் நடித்த ஜானு கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
அதேபோல் பொன்னியின் செல்வன்: பாகம் 1 மற்றும் பொன்னியின் செல்வன்: பாகம் 2 திரைப்படங்களில் அவர் நடித்த குந்தவை கதாபாத்திரமும் ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டது.
இவ்வளவு ஆண்டுகளாக சினிமாவில் முன்னணியில் இருப்பதால், திரிஷா தற்போது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
ஒரு படத்திற்கு சுமார் 10 முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 80 முதல் 85 கோடி ரூபாய் வரை இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் ஹைதராபாத்திலும் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள மற்றொரு வீடு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் கார்கள் மீது அவருக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. Mercedes-Benz S-Class, BMW 5 Series, Range Rover Evoque, Mercedes-Benz E-Class போன்ற லக்ஷரி கார்கள் அவரிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, 2015ஆம் ஆண்டு திரிஷா தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
ஆனால் சில காரணங்களால் அந்த நிச்சயதார்த்தம் பின்னர் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு நடிகர் ராணா டகுபதி உடன் அவர் காதலில் இருந்ததாகவும் பல வதந்திகள் பரவின. ஆனால் அந்த உறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை.
இருவரும் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இதனால் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒருவராக இவர்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள்.
ஆனால் தங்களுக்குள் காதல் எதுவும் இல்லை, நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று இருவரும் பலமுறை தெளிவாக கூறியுள்ளனர்.
இவ்வளவு ஆண்டுகளாக சினிமாவில் இருந்து கொண்டே ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பது திரிஷாவின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இன்று கூட அவர் நடிக்கும் புதிய படங்களுக்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.