டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே திங்கள்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ட்ரோன் தாக்குதலின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு காரணங்களால் விமானப் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக டுபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட ட்ரோன் தாக்குதலில் எரிபொருள் கொள்கலன் ஒன்று சேதமடைந்துள்ளதாக டுபாய் ஊடக நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், டுபாய்க்கு வருகை தரும் மற்றும் டுபாயிலிருந்து புறப்படும் விமானப் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் போர் ஆரம்பத்தித்த பின்னர், வளைகுடா அரபு நாடுகள் 2,000-க்கும் மேற்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்கள் அமெரிக்க இராஜதந்திர அலுவலகங்கள் மற்றும் இராணுவத் தளங்களை மட்டுமன்றி, வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய எண்ணெய் உட்கட்டமைப்புகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், குடியிருப்பு மற்றும் அலுவலகக் கட்டிடங்களையும் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், 2020 ஆம் ஆண்டில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கிய ஐக்கிய அரபு அமீரகம், தாக்குதல்களின் பெரும் தாக்குதலை எதிர்கொண்டது. ஆனால் அனைத்து வளைகுடா அரபு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் அனைவரும் ஈரானை கண்டித்துள்ளனர்.

குவைத் விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

குவைத் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் மூன்று ட்ரோன்கள் விமான நிலையத்தை குறிவைத்து ஏவப்பட்டதாகவும், அதனால் அங்குள்ள ரேடார் அமைப்பு சேதமடைந்ததாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மேலும் ஏவப்பட்ட ஐந்து ட்ரோன்களை குவைத் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக அழித்துள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version