நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (20) காலை மழை பெய்திருந்தது.

அந்நிலையில் தீவக பகுதியில் பலத்த காற்றும் வீசி வருவதனால், தீவகத்திற்கான படகு சேவைகள் தாமதப்பட்டுள்ளது.

அதேவேளை, நயினாதீவு பகுதியில் வீசிய காற்றினால் நயினாதீவு இறங்கு துறை பகுதியில் பக்தர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டிருந்த நிழற் கொட்டகைகள் சேதமடைந்துள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version