2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி இன்று (ஏப்ரல் 24) எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணியுடன் விண்ணப்பம் கோரல் நிறைவடைவதோடு, அதன் பின்னர் இணையவழி (Online) விண்ணப்ப முறையானது செயலிழக்கச் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலப்பகுதி எக்காரணம் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எனவே, இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக நிகழ்நிலை (Online) ஊடாகத் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடைசி நேர இணையத் நெரிசல்களைத் தவிர்க்கும் பொருட்டு, முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version