தெலுங்கானா மாநிலம் கமரேட்டி (Kamareddy) பகுதியில் உணவிற்காக ஏற்பட்ட சிறு தகராறு ஒரு கொடூரக் கொலையில் முடிந்துள்ள அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. அங்கு வசிக்கும் 28 வயதுடைய இளைஞர் ஒருவர், தனக்குக் கோழிக்கறி (Chicken Curry) சமைத்துத் தருமாறு தனது மனைவியைத் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண வாய்மொழித் தர்க்கம், ஒரு கட்டத்தில் கட்டுக்கடங்காத மோதலாக மாறியுள்ளது. அக்கம் பக்கத்தினர் தடுத்தும் கேட்காத நிலையில், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மனைவி, வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து கணவனின் கழுத்துப் பகுதியில் பலமாக வெட்டியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்த கணவன், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாக அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், உயிரிழந்தவரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலையில் ஈடுபட்ட மனைவியைக் கைது செய்துள்ளனர். உயிரிழந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தாயின் ஆத்திரத்தால் தந்தையை இழந்து அக்குழந்தைகள் தற்போது அனாதையாக நிற்கும் அவலம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version