ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்களை விரும்புகின்ற, வெறுக்கின்ற எல்லா நாடுகளுமே, அவர் களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியிருக்கின்றன.
காபூல் வீழ்ச்சியடைந்த அன்று, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு,
கட்டாரில் உள்ள தலிபான்களின் அரசியல் தலைமையகத்தில் இருந்த தலிபான்களின் பேச்சுவார்த்தையாளரும், பேச்சாளருமான மொஹமட் சுஹைல்
ஷாஹீன் செவ்வியளித்திருந்தார்.
மிகக்குறுகிய அந்தச் செவ்வியின், முதலாவது கேள்வி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையில்தொடர்பு இருந்ததா என்பது தான்.
அதற்கு தலிபான் பேச்சாளர் சஹீன்,“தமிழீழ விடுதலை புலிகளுடன் எங்க
ளுக்கு எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான விடுதலைப் படை, கடந்த 20 ஆண்டுகளாக, ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக, வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடினோம்.” என்று கூறியிருந்தார்.
எந்தக் காலத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தங்களுக்கும் தொடர்புகள்
இருந்ததில்லை என்று அவர் கூறியிருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயம் அல்ல.
ஏனென்றால், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தலிபான்௧களுடன் நெருங்கிய தொடர்புகளோ உறவுகளோ இருந்தமைக் கான எந்த சான்றும் இதற்கு முன்னர் வெளியாகியிருக்கவில்லை.
ரஷ்யப்படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின்னர், அங்கு
ஏராளமான ஆயுதங்கள் கறுப்புச் சந்தையில் கொட்டிக் கிடந்தபோது ஆயுத வியாபாரிகள் அங்கு படையெடுத்தனர்.
அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளும் ஆப்கானிஸ்தானில் ஆயுதங்களை வாங்கும் முயற்சிகளை மேற்கொண்டபோதும் அந்த முயற்சிகள் பெரியளவில் வெற்றி பெறவில்லை.
அப்போது தலிபான் அமைப்பு உருவாகியிருக்க இல்லை.
அது முஜாகுதீன்களின் ஆட்சிக்காலம்.
தலிபான்களின் இலக்கும், செயற்பாடுகளும், அவர்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒத்துப்போக கூடியவையாக இருக்கவில்லை.
அதைவிடகிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள், இஸ்லாமிய நாடுகள், அமைப்புகளை,
“தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தலிபான்௧ளுடன் நெ௫ங்கிய தொடர்புகளோ உறவுகளோ இ௫ந்தமைக்கான எந்த சான்றும் இல்லை. அதேநேரம் ஆப்கானில் ஆபுதங்களை கொள்வனவு செய்வதற்கு விடுதலைப்புலிகள் முயற்சித்தபோதும் அது வெற்றியளித்தி௫க்கவில்லை’!
தழீழ விடுதலைப் புலிகளால் நெருங்கிச் செல்ல முடியாத நிலையையும் ஏற்படுத்தியிருந்தது. தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பின்னர் அங்கு மனித உரிமை மீறல்களும், கடும் அடிப்படைவாதப்போக்கும், சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோகும் நடவடிக்கைகளும் சர்வதேச சமூகத்திடம் இருந்துவிலகிச் செல்லும் நிலையை தோற்ற
வித்தது.
அந்தக் கட்டத்தில் தமிழீழ விடு தலைப் புலிகள் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற முற்பட்ட காலம் என்பதால் அவ்வாறான உறவுகளை ஏற்படுவதற்குத் தடைகளை ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.
இதனால் தலிபான்களுக்கும் தமிழீழ விடு தலைப் புலிகள் இடையிலான உறவுகள் உருவாகும் வாய்ப்பே ஏற்பட்டிருக்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னரும், எஞ்சியிருந்தவர்கள், தலிபான்களுடன் உறவுகளை ஏற்படுத்த விரும்பியிருக்கமாட்டார்கள்.
ஏனென்றால் தலிபான்கள் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஒரு இஸ்லாமிய இயக்கமாக இருந்தமையால், அவ்வாறான உறவுகளை ஏற்படுத்துவது
தற்கொலைக்குச் சமமாகும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
எனவே, இந்தக் கட்டத்தில் தமிழீழ புலிகளுடன் தங்களுக்கு எப்போதும் தொடர்பு இருந்திருக்கவில்லை என்ற தலிபான் பேச்சாளரின் கூற்று உண்மைக்குப் புறம்பானது எனக் கூறமுடியாது.
அதேவேளை, தலிபான்கள் தமிழீழவிடுதலைப் புலிகளுடன் தங்களுக்கு. தொடர்பில்லை என்று கூறியிருப்பினும் அவர்கள் தொடர்பான எந்த விமர்சனத்தையும் தலிபான் பேச்சாளர் முன்வைக்க வில்லை என்பது கவனிக்கத்தக்கது.
தங்களை ஒரு சுதந்திரத்தை அடைவ தற்காக உருவாக்கப்பட்ட படை என்றும் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரா கவே போரிடுகிறோம் என்று மட்டும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
இந்தக் கட்டத்தில் விடுதலைப் புலிகளும் சரி, தலிபான்களும் சரி, ஒரேவித
மாகவே செயற்பட்டிருக்கிறார்கள். செயற்படவும் முனைகிறார்கள்.
அவர்கள் தங்களின் மீது விழுந்துள்ள ‘தீவிரவாத’ அடையாளத்துக்குள் இருந்து வெளியேறவே விரும்புகிறார்கள்.
முன்னொரு காலகட்டத்தில் சர்வதேசஅளவில் விடுதலை இயக்கங்களுக் கிடையில் தொடர்புகள், ஒத்துழைப்புகள் இருந்தன.
பலஸ்தீன விடுதலை இயக்கம் 1980களின் தொடக்கத்தில் தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை கொடுத்திருந்தது. அப்போது பி.எல்.ஓவிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற பலர் இப்போதும் இருக்கிறார்கள்.
ஆனால் பலஸ்தீன விடுதலை இயக்கம், தங்களுக் கென ஒரு அரசு அமைந்த பின்னர், தமிமீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே செயற்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் நெருங்கிச் செயற்பட்டிருந்தது.
தங்களுக்கென ஒரு அரசு அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, சர்வதேச அங் கீகாரத்தை எதிர்பார்க்கின்ற எல்லா அமைப்புகளுமே, தாங்கள் தீவிரவாத முத்திரைக்குள் சிக்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றன.
பலஸ்தீன விடுதலை இயக்கத்தைப் போலவே, விடுதலைப் புலிகளும், தமக்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூடிய அமைப்புகளுடன், சர்வதேச உறவுகளை சீர்குலைத்து விடக் கூடிய அமைப்புகளுடனான உறவுகளை தவிர்க்கவே விரும்பினர்.
அதையே தான் இப்போது தலிபான்களும் செய்ய முனைகிறார்கள். தலிபான்கள் இந்த விடயத்தில் சூடுபட்டவர்கள்.
“உங்கள் நாட்டின் விடுதலைக்காகப்போராடிய உங்கள் முன்னோர்களைப்
போல நாங்களும், ஆப்கானிஸ்தானின் சுதந்திரப் போராளிகள். ஆனால் நாங்கள் விஷம பிரசாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்,” என்று தலிபான் பேச்சாளர் ஷாஹீன் குறிப்பிட்டிருக்கிறார்.
தலிபான்கள் 20 ஆண்டுகளாக அமெரிக்காவுடன் போராட வேண்டிய நிலைக்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று அவர்கள் அல்கெய்டா அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்தமை. தங்களின் பகுதிகளில் அவர்கள் தலையெடுக்க இடமளித்தமை.
இன்னொன்று ஆப்கானிஸ்தானில் அதிகரித்த இஸ்லாமிய அடிப்படைவாதமும், மனித இனத்
துக்கு எதிரான மீறல்களும் தான்.
அல்கெய்டா அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்ததால் தான், தாங்கள் ஆட்சியை இழந்து, 20 ஆண்டுகளாக தலையெடுக்க முடியாமல் போனது என்பதை தலிபான்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் செயற்பாடுகள் எவ்வாறாக அமையும் என்பதை எதிர்வுகூற முடியா
விட்டாலும், அவர்கள் வெளியிடும் கருத்துக்களில் இருந்து, முன்னைய நிலையில்
தாங்கள் இல்லை என்பதை வெளிப்படுத்த முனைகிறார்கள்.
20 ஆண்டுகளுக்கு முந்திய தலிபான்கள் அல்ல என்று அவர்கள் கூறு
வதும், அரசுடன் இணைந்து பணியாற்ற பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும், அனைவருக்கும் பொது மன்னிப்பு அளித்துள்ளதாக கூறியிருப்பதும்,
தலிபான்கள் சர்வதேச ஆதரவையும், அனுதாபத்தையும் பெற முனைகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.
அவர்கள், முன்னைய அடையாளத்தை அழித்து விட்டு புதிய பாதையில் செல்ல
விரும்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்கள்.
சர்வதேச ஆதரவு இல்லாவிட்டால், தங்களால் தாக்குப் பிடிக்க முடி
யாது என்பது அவர்களுக்கும் தெரியும்.
சர்வதேசத்துடன் முரண்படுவதை தவிர்க்கவே, தலிபான்கள் எத்தனிக்கிறார்கள்.
இவ்வாறான நிலையில் இலங்கை போன்ற சிறிய நாடுகளையோ, அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளையோபகைத்துக் கொள்ள தலிபான்கள் தயாராக இல்லை.
விடுதலைப் புலிகளுடன் தங்களுக்கு தொடர்பு இல்லை என்ற செய்திமட்டுமே, இலங்கைக்கும் தலிபான்களுக்கும் இடையிலான உறவு மேம்படுவதற்குப் போதுமானது அல்ல.
ஏனென்றால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் களுக்குப் பின்னர் இஸ்லாமிய அடிப்ப
டைவாதத்துக்கு எதிரான கடும்போக்கை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்துகிறது.
தலிபான்களின் மூலம் இலங்கையில் எந்த வகையிலும் இஸ்லாமிய அடிப்ப
டைவாதமோ, தீவிரவாதமோ தலையெடுத்து விடக் கூடாது என்றே இலங்கை
அரசாங்கம் விரும்பும்.
அதேவேளை, தலிபான்களுக்கு இப்போது சர்வதேச அங்கீகாரம் தேவைப்ப
டுவதால் அவர்கள், அடிப்படைவாதம், தீவிரவாதம் போன்றவற்றில் இருந்து
விலகியிருக்கவே முனைவார்கள்.
சீனாவுடன் அவர்கள் நெருக்கமான உறவை ஏற்படுத்த முனைந்துள்ளமை
அதற்கான ஒரு அடையாளம் தான்.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் இன முஸ்லிம்கள் மிகமோ
சமான அடக்குமுறைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் சீனாவிடம் இருந்து விடுதலை பெற மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு துணைபோகப் போவதில்லை
என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறது தலிபான்.
இதையடுத்து தலிபான்களுடன் உறவுகளை ஏற்படுத்த தயார் என்று சீனா
கூறியிருக்கிறது.
அதுபோல, சீனாவின் வழியில் நடக்கும் இலங்கையையும்,
தலிபான்கள் தங்களின் பக்கம் சாய்க்க முனையலாம்.
அதற்காக அவர்கள், இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் நலன்களை
பெரிதாக எடுத்துக் கொள்ளாமலும் போகலாம்.
ஏனென்றால் அவர்களுக்கு இப்போதுதங்களின் நாடு தான் முக்கியமானது.
அந்த இலக்கை அடைவதற்காக அவர்கள்தங்களின் இலக்கிற்கு குறுக்கே உள்ள
எல்லா தரப்புகளையும் வெட்டி விடவும்.தயங்கமாட்டார்கள்.
ஆப்கானிஸ்தானில் உள்ள புத்தர் சிலைகளின் பாதுகாப்புக்கு தலிபான் பேச்சாளர்
உத்தரவாதம் கொடுக்க முனைவது கூட இலங்கைக்கு போட்ட தூண்டில் தான்.
உடனடியாகவே அதில் இலங்கை சிக்கிக் கொண்டு விட்டதாகவே தெரிகிறது.
ஆட்சியமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்சாயுடன் தலிபான்கள் ஆலோசனை நடத்திய சற்று நேரத்தில், அவருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,
தொடர்பு கொண்டு பேசியிருப்பது அதனைத் தான் வெளிப்படுத்தியிருக்கிறது.
-ஹரிகரன்-