ஜெனிவா மனித உரிமைப் பேரவை யின் தீர்மானங்கள் கடுமையாகிக் கொண்டிருக்கின்றன என்ற விமர்சனங்களும் விளக்கங்களும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கையில் இலங்கை அரசாங்கம் எங்களை ஏமாற்றி விட்டது.
நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம். இது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கும் அவமானமாகுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்திருக்கும் அறிக்கையானது இலங்கையரசியலில் புதிய அரசியல் சிக்கல் ஒன்றை ஏற்படுத்தப்போகும் கருத்தாகப் பேசப்படுகின்றது.
அமைச்சரின் இந்த விசனத்துக்கான கார ணங்களாக பின்வரும் விடயங்கள் கூறப்ப ட்டிருந்தன. 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு முதல் அமைச்சர் பதவியை வழங்கும்படி வேண்டு கோள் விடுத்தோம்.
எமது வேண்டுகோள் உதாசீனம் செய்யப்பட்டு ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நஜீப் அப்துல் மஜீதுக்கு அப்பதவி வழங்கப்பட்டது.
முதல் அமைச்சர் விவகாரம் தொடர்பில் ஆளும் அரசாங்கத்தின் அமைச்சர்களான பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் டலஸ் அழகப்பெரும, அனுர பிரியதர்ஷன யாப்பா போன்றோரிடம் பலமுறை பேசினோம். ஆனால் எந்தப் பலனும் கிட்டவி ல்லை.
முதல் அமைச்சர் பதவிக்குப் பதிலீடாக அமீர் அலியை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து பிரதியமைச் சர் பதவியொன்று வழங்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்கள்.
அந்த வாக்குறுதி கூட இன்றுவரை அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவில்லை. அதன் காரணமாகவே மேல் மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸாகிய நாங்கள் தனித்து நின்று போட்டியிடுகிறோமென கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தி ருந் தார்.
அமைச்சரின் இந்த விசனமானது எரிகிற சட்டியில் எண்ணெய் ஊற்றி விடுகிற ஓர் காரியமாக இருக்கிறதேயென்பது விமர்சகர்களின் கருத்தாகும்.
காரணம் ஏற்கனவே அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக இருந்து கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மறைமுகமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையிடம் கையளித்த 60 பக்கம் கொண்ட அறிக்கையில் இலங்கை யில் முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் சுட்டிக்காட்ட ப்பட்டு…
குறிப்பாக இனவாத அமைப்புக்களினாலும் பௌத்த குருமாரினாலும் பள்ளிவாசல்களுக்கும் மதப்பண் பாடுகளுக்கும் இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் பற்றி விபரிக்கப்பட்ட அறிக்கையாக அவ்வறிக்கை காணப்படுகின்றது என்பதைக் கேள்வியுற்ற இலங்கையரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸின் மீது கடும் கோபங்கொண்டிருக்கின்ற நிலையில்தான் அமைச்சர் ரிஷாத்தின் மேற்படி குற்றச் சாட்டு அரசாங்கத்தின் மீது சுமத்தப்ப ட்டிருக்கிறது.
அதற்கான ஆதாரங்களையும் சாட்சிகளையும் பொலிஸ் மா அதிபரிடம் நான் ஒப்படைத்திருந்தேன். இன்று வரை குறித்த பொலிஸாருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தெஹிவளையிலுள்ள கடவத்தை பள்ளிவாசலுக்கு எதிராக பொலிஸாரினாலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
அதை இந்த அரசாங்கம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது என்று தனது ஆதங்கத்தையும் அதேவேளை விசனத்தையும் அமைச்சர் ரிஷாத் தெரிவித்திருந்தார்.
இவரின் இந்த விசன நிறை கொண்ட குற்றச்சாட்டுக்களும் சுட்டிக்காட்டல்களும் வெளியி டப்படக் கூடிய ஒரு காலநிலை இப்பொழுது காணப்படுகிறதா என்பதே இன்றைய கேள்வி. ஏற்க னவே அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார்.
தேசத்துரோகி அவரை மன்னிக்கக் கூடாது என பேரின கடும்போக்காளர்களும் இனவாதக்குழுக்களும் கண்டனம் இட்டுக்கொண்டேயிருக்கின்றன.
தேசத்துரோக செயலில் ஈடுபட்டதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் உடனடியாக மன்னி ப்புக் கோர வேண்டும் சிங்கள பௌத்தர்களை தண்டிக்கும் செயலை ஹக்கீம் நிறுத்தாவிடின் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என இன விஷம் கக்கிய முறையில் பொதுபலசேனா என்னும் பௌத்த அமைப்பு ஹக்கீமை எச்சரித்துள்ளதுடன் தனது இனவாத விஷத்தையும் கக்கியுள்ளது.
இலங்கையில் வாழ்ந்து கொண்டு அரசாங்கத்தின் அமைச்சுப்பதவி சலுகைகளை அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக ஹக்கீம் நடந்து கொண்டுள்ளார் என அந்த அமைப்பு பச்சையாக எச்சரித்துள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் தான் அங்கம் வகிக்கும் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் குறிப்பாக முஸ்லிம் கட்சிகளின் அரசியல் பரிமாணத் தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியை ஆட்சி பீடம் ஏற வைத்தது தொடக்கம் இன்றுவரை அரசாங்கத்தின் அதாவது ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் நாடியாகவும் நரம்பாகவும் விளங்கிய இரு முஸ்லிம் கட்சிகளில் ஒன்று ரிஷாத்தை தலைமையாகக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றொன்று அமைச்சர் அதாவுல்லாவை தலைமையாகக் கொண்ட தேசிய காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமாகும்.
இவையிரண்டும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி யென்று கூறுவதை விட ஆளும் அரசாங்கத்தின் ஆணித்தன்மையாகவும் இருந்து வந்துள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
இவ்விரு கட்சிகளும் பல்வேறு விட்டுக்கொடுப்புக்களுடனும் இணக்கப்பாடுகளுடனும் இருந்து வந்துள்ளது.
இதன் மூலவுடன்பாடு காரணமாகவே 2008 – 2012 ஆகிய காலப்பகுதியில் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண சபை தேர்தல்களில் அரசாங்கத்துடனான இணக்கப்பாட்டு கட்சி களாக இருந்து வந்துள்ளமையை கண்டிருக்கின்றோம்.
ஆனால் இம்மாத கடைசி வாரத் தில் நடைபெறவுள்ள மேல் மாகாண சபைத் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடுகி றோமென அமைச்சர் ரிஷாத் குறிப்பிட்டிரு ப்பதுடன் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் எமது கட்சி இனி தனித்தே போட்டியிடும்.
தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வீரவசனங்களைப் பேசி வாக்குகளை கொள்ளையடிக்கும் தந்தி ரோபாயம் எம்மிடமில்லை. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே அரசியல் நடத்து கிறோம் என அமைச்சரும் வீரவசனமே பேசியிருந்தார் என ஒரு விமர்சகர் தெரி வித்தார்.
அமைச்சரின் இந்த விசனமும் அறிவிப்பும் உள்ளார்ந்த மூன்று விடயங்களை தொட்டுக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஒன்று அரசாங்கத்துக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையிலான அண்மைக்கால விரிசல் இன்னொன்று முஸ்லிம் காங்கிரஸ் மீது அது கொண்டிருக்கும் (ஊடல்) கோபம் மற்றொன்று அரசு தங்களை ஏமாற்றி விட்டது என்ற ஏக்கம்.
கிழக்கு மாகாண முதல் அமைச்சர் சார்ந்த பிரச்சினைகள் கிழக்கு மாகாண சபை நிறுவிய காலத்திலிருந்தே ஆளும் ஐக்கிய மக் கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஒரு தலையிடி தரும் விடயமாகவே இருந்து வந்துள்ளது என்பது வெளிக்காட்டப்படாத ஒரு உண்மை.
2008 ஆம் ஆண்டு தேர்தலின் பின் முஸ்லிம் பெருமகன் ஒருவர் கிழக்கின் முதல் அமைச்சர் ஆக்கப்பட வேண்டுமென்ற கோஷமும் கோரிக்கையும் புயல் போல கிளம்பியிருந்த வேளையில் தான் அரசாங்கம் தவிர்க்க முடியாமலும் அண்டை நாட்டு அரசியல் அழுத்தம் காரணமாகவும் எதிர்கால தேவை கருதி ஒருவரை முதல் அமைச்சராக்கிய போது அதை ஜீரணிக்க முடியாத நிலையிலும் அரசாங்கத்தின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய தேவை முஸ்லிம் தலைமைப்பீடங்களுக்கு அன்று ஏற்பட்டது.
ஆனால் இரண்டாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் 2012 ஆம் ஆண்டு செப்டெம்பரில் நடத்தப்பட்ட போது இலங்கையரசாங்கத்துக்கு பல்வேறு சவால்கள் காத்திருந்தன.
என்ற எல்லா வகை கவனப்பாடுகளையும் கவனத்தில் கொண்டே முஸ்லிம்சமூகத் தின் ஆதரவும் அனுசரணையும் இல்லாமல் கிழக்கில் ஆட்சியை அமைத்து விட முடியாது என்ற தேர்தல் யுக்தியையும் மனங் கொண்டே கிழக்கின் முதலமைச்சர் பதவியை அமீர்அலிக்கு வழங்க முடியுமென்ற உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை கிழ க்கு தேர்தலில் 7 ஆசனங்களை தனதாக்கிக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்பாடு கொண்டு விடுமானால் கிழக்கு பறிபோய் விடும் என்ற கணிப்பின் அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவருக்கு முதல் அமைச்சர் பதவி வழங்கவும் உடன்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் தேர்தல் முடிவுக்குப் பின் முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்குவதா அல்லது அமீர் அலிக்கு வழங்குவதா? என்ற தர்க்க நிலை சார்ந்த உள்ளகப் போர் காரணமாகவே அங்குமில்லாமல் இங்குமில்லாமல் தமது கட்சியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மகனுக்கு இப்பதவியை வழங்குவதன் மூலம் உடன்பாடு காணமுடியாத எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வாக அமைந்து விடுமென்ற சாணக்கியத்துடன் தன் கட்சி சார்ந்த முஸ்லிம் பெருமக னுக்கு அந்தப்பதவியை வழங்கி விட்டது அரசாங்கம்.
ஆனால் அரசாங்கம் நினைக்க வில்லை. இந்தப் பிரச்சினையானது நீறுபூத்த தன்மை கொண்டதாக இருக்குமென்று நினைக்காத நிலையிலே அமைச்சர் ரிஷா த் தின் இந்த விசனம் வெளிப்படுத்தப்பட்டி ருக்கிறது.
இது இவ்வாறு இருக்க பதவிக்காலத்தை இரண்டாக வகுத்துக் கொண்ட ஒரு உள்ளா ர்ந்த ஒப்பந்தம் பற்றியும் இப்பொழுது பேசப்படுகிறது.
எனவே கிழக்கின் முதல் அமைச்சர் பதவி தங்களுக்கு வழங்கப்பட வில்லையென அகில இலங்கை மக்கள் காங்கிரசோ மறுபுறம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ பிணக்கப்படுகின்ற சூழ்நிலை யொன்று தற்பொழுது எழுந்துள்ளதை ஆளும் அரசாங்க கட்சியோ அல்லது அக்கட் சிக்கு பின்னணி வகுத்துக் கொண்டிருக்கின்ற கடும்போக்காளர்களோ இல்லாமல் பேரினவாத அமைப்புக்களோ அங்கீகரிக்க மாட்டார்கள் என்றே கொள்ள வேண்டும்.
ரிஷாத் பதியுதீனின் விசனத்தில் புட்டுக்காட்டப்பட்டிருக்கும் இன்னுமொரு விடயம் தேர்தல் காலத்தை குறித்து வைத்து தாங்கள் இயங்கப்போவதுமில்லை. முஸ்லிம் மக்களை ஏமாற்றும் கைங்கரியங்களிலும் நாம் ஈடுபடப்போவதில்லை. எனவே தான் இனிவரும் காலங்களில் எல்லாத் தேர்தல் களிலும் நாம் தனித்து நின்றே போட்டியி டப் போகின்றோம்.
இதுவே எமது கட்சிக்கு ஆரோக்கிய நிலையைக் கொண்டு வருமென அமைச்சர் ரிஷாத் குறிப்பிட்டுள்ளார். இது மறைமுகமாக யாரைச்சுட்டிக் காட்டுகிறது எனப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின் றது.
அமைச்சரவை மாற்றம் அல்லது சீரமை ப்பு நடைபெறுகின்ற வேளைகளில் எல்லா ஊடகங்களிலும் பொது மக்கள் மத்தியிலும் பேசப்படுகின்றதும் பரப்பப்படுகின்ற விசயம் என்னவென்றால் இம்முறை அமைச்சரவை மாற்றத்தில் அமீர் அலிக்கு மந்திரிப் பதவி வழங்கப்படும் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது என அந்த விடயம் பரவலாக அடிக்கடி பேசப்படுகின்ற போதும் அந்த விடயம் இதுவரை நடைபெற்றதாக தெரியவில்லை.
இதுவரை இலகுகாத்த கிளியைப் போல காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் கண்ட காரணத்தினாலேயே அமைச்சர் ரிஷாத் மேல் மாகாண தேர்தல் விடயத்திலும் தனது ஆதங்கத்தை ரிஷாத் வெளிக்காட்டியிருப்பதை ஊகிக்க முடிகிறது.
இதே போன்றதொரு பிணக்குநிலை இலங்கையரசாங்கத்துக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் அண்மைக்காலமாக வெளிப்பட்டுக் கொண்டிருப்பதையும் அனு மானிக்க முடிகிறது.
காரணம் முஸ்லிம் காங்கி ரஸின் கடுமையான விமர்சனங்களை ஆட்சி யின் கடும் போக்காளர்கள் ஏற்றுக் கொள்ளாமை எல்லாவற்றுக்கும் மேலாக ஜெனிவா மனித உரிமையாணையாளரிடம் முஸ்லிம் காங்கிரஸ் கையளித்த அறிக்கை விவகாரமென்பதை ஏலவே சுட் டிக் காட்டியிருக்கின்றோம்.
முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரை கிழக்கு ஆட்சியிலும் சரி ஏனைய விடயங்களிலும் சரி அரசாங்கத்தை அடிபணிய வைக்க முடியாது.
ஏன் எனில் காங்கிரஸின் கிழக்கு மாகாண ஏழு உறுப்பினர்களுக்கும் மத்திய அரசாங்கத்துக்குமிடையில் சிறந்த உறவு காணப்படுகின்றது என்ற உண்மையை புட்டு வைத்துள்ளார் அசாத் சாலி.
பொதுவாகவே இன்றைய சூழ்நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமை ப்பு என்னும் விருட்சத்தை சுற்றியிருக்கின்ற நிழல்தேடு மரங்களான முஸ்லிம் சமூகத் தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி கள் பிணக்கு நிலை பெற்றிருப்பதைப் போன்ற மாயத்தன்மை கொணடிருப்பதையே அண்மைக்கால சம்பவங்களும் கரு த்து ஆடல்களும் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றன.
அமைச்சர் ரவூப் ஹக்கீமை தேசத்துரோகிப் பட்டியலில் சேர்த்திருக்கும் கடும் போக்காளர்கள் ஜெனிவா மனித உரிமைப்போர் என்ற சர்வதேச வில்லங்கத்துக்குள் இலங்கையரசாங்கம் மாட்டிக் கொண்டிருக்கும் இச் சிக்கலான சூழ்நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் உரித்துடைய நண் பரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்கள் அரசாங்கம் எங்களை ஏமாற்றி விட்டது.
நாங் கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் முஸ் லிம் சமூகத்துக்கு இந்த அரசாங்கம் பல கெடுதிகளைச் செய்து கொண்டிருக்கிறது எனப் பகிரங்கமாக தெரிவித்திருப்பது கடும் போக்காளர்களுக்கும் இனவாதக் கட்சிக ளும் விசனத்தையும் வெறுப்பையும் உண் டாக்கும் விடயமாக அமையாதா என்ற சந் தேகங்களையும் உண்டாக்கியிருக்கிறது.
ஏற் கனவே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது கடும் பாய்ச்சல் நடத்திக் கொண்டிருக்கும் மேற் படி இனவாதக் குழுக்களுக்கும் கடும் போக் காளர்களுக்கும் அமைச்சரின் இந்த விடயம் அவலைப்போல் ஆகி விட்டிருக்கும்.
இலங்கையின் சிறுபான்மை சமூகங் கள் மீது அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட முறையிலான கெடு பிடிகள் பற்றியே அமைச்சர் ரிஷாத் ஆளும் அமைச்சராக இருந்து கொண்டு உண்மை நிலைகளை வெளிச் சொல்லியிருக்கிறார் என்பது ஒரு பெரிய விடயந்தான்.
எது எப் படிப் பேசப்பட்ட போதும் ஆளும் அரசாங்கமானது முஸ்லிம் மக்களைப் பிரதிநி தித்துவப்படுத்தும் கட்சிகளை ஓரம் கட்ட முனைப்புக் காட்டி வருகின்றது என்ற கரு த்துப்பாடு முஸ்லிம் சமூகத்துக்கிடையே அதிருப்தியை வளர்த்துக் கொண்டு வரு கின்றது என்ற உண்மையை அங் கொன்றும் இங்கொன்றுமாக அறிய முடிகிறது என ஒரு முஸ்லிம் புத்திஜீவி தெரிவித்திருந்தமை இவ் விடத்தில் நினைவு கூரத்தக்கது.
ஜெனிவா மனித உரிமைப் போரின் பின்னரோ அல்லது மேல் மாகாண சபை தேர் தல் முடிவுகளுக்குப் பினபோ நிலைமைகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பதை அறிவதில் அரசியல் விமர்சகர்கள் ஆவலாக வேயுள்ளனர்.
-திருமலை நவம்-