ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள்  பேர­வையில்  இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா முன்­வைத்த தீர்­மானம், கடந்த வியா­ழக்­கி­ழமை பர­ப­ரப்­பான சூழ்­நி­லையில், 11 மேல­திக வாக்­கு­க­ளினால் நிறை­வே­றி­யது.

இந்தத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக 23 நாடுகள் வாக்­க­ளித்த அதே­வேளை, எதி­ராக 12 நாடுகள் வாக்­க­ளித்­தன. மேலும்  12 நாடுகள் வாக்­கெ­டுப்பில்  பங்­கேற்­காமல்- நடு­நிலை வகித்­தன.  கடந்த வியா­ழக்­கி­ழமை  ஜெனீவா  நேரப்­படி மதியம் நடந்த விவா­தமும், வாக்­கெ­டுப்பும், ஐ.நா. மனி­த ­உ­ரி­மைகள் பேர­வையில் பெரும் பர­ப­ரப்­பான சூழ லை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இந்தத் தீர்­மா­னத்தை அமெ­ரிக்­காவே கொண்டு வந்­தது என்­பதும், அதை எதிர்ப்­பதில் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் முன்­னின்­றதும் தான் அதற்குக் காரணம்.

இந்­த­நி­லையில், சில நாடு­களின் நிலைப்­பாடு என்­ன­வென்ற கேள்வி கடை­சி­வரை, இர­க­சி­ய­மா­கவே வைக்­கப்­பட்­டி­ருந்­ததால், இறு­தி­யான முடிவு எப்­ப­டி­யா­ன­தாக இருக்கும் என்ற எதிர்­பார்ப்பு எகி­றி­யி­ருந்­தது.

என்ன கூறு­கி­றது தீர்­மானம்?

கடந்த 3ஆம் திகதி ஜெனீ­வாவில் ஆரம்­ப­மான ஐ.நா மனி­த­உ­ரி­மைகள் பேர­வையின் முதல் நாள் கூட்­டத்­தி­லேயே உறுப்பு நாடு­க­ளுக்கு இலங்­கைக்கு எதி­ரான தீர்­மான வரைவை விநி­யோ­கித்து அமெ­ரிக்கா அதிர்ச்­சியைக் கொடுத்திருந்தது.

இலங்­கையில், “நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல், மனி­த­ உ­ரி­மை­களை ஊக்­கு­வித்தல்” என்ற தலைப்­பி­லான இந்த தீர்­மான வரைவின் முதல் வடிவம், அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, மசி­டோ­னியா, மொன்­ர­னிக்ரோ, மொறி­சியஸ் ஆகிய நாடு­களின் இணை அனு­ச­ர­ணை­யுடன் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. 2012, 2013ஆம் ஆண்­டு­களில் நிறை­வேற்­றப்­பட்ட  தீர்­மா­னங்­களின் தொடர்ச்­சி­யா­கவே அமெ­ரிக்கா இதனை முன்­வைத்­தது.

2013ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட  தீர்­மா­னத்­துக்கு அமைய, நிறை­வேற்ற வேண்­டிய கடப்­பா­டு­களை இலங்கை அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்தத் தவ­றி­யதை, ஐ.நா மனி­த­உ­ரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையின் அறிக்கை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

போரின்­போது  இரு­த­ரப்­பி­ன­ராலும் நிகழ்த்­தப்­பட்ட மனி­த­ உ­ரிமை  மீறல்கள் குறித்து  இலங்கை அர­சாங்கம்   உள்­ளக விசா­ர­ணை­களை   நடத்தத் தவ­றி­யுள்­ள தால், சர்­வ­தேச சுதந்­திர விசா­ரணை ஒன்றை முன்­னெ­டுக்க வேண்டும் என்ற நவ­நீ­தம்­பிள்­ளையின் பரிந்­து­ரையின் அடிப்­ப­டையே- இந்த தீர்­மான வரைவின் முக்­கி­ய­மான அம்சம்.

அதா­வது, போரின்­போது இழைக்­கப்பட்ட குற்­றங்­க­ளுக்கு சுதந்­தி­ர­மான அனைத்­து­லக விசா­ர­ணை­களை, ஐ.நா. மனி­த­ உ­ரிமை ஆணை­யாளர் பணி­யகம் மூலம் முன்­னெ­டுக்க இது வழி செய்­கி­றது.

அது­த­விர, 13ஆவது திருத்­தச்­சட்­டத்தின் அமு­லாக்கம், அதி­கா­ரப்­ப­கிர்வு, வடக்கில் பொது­மக்­களின் இயல்பு வாழ்வில் இரா­ணுவத் தலை­யீ­டு­களை விலக்­குதல், போன்­றன குறித்தும் தீர்­மான வரைவில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இலங்­கையில் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரும் சிறு­பான்மை மதத்­தினர் மற்றும் வழி­பாட்டு தலங்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், மனி­த ­உ­ரிமை ஆர்­வ­லர்கள் மீதான தாக்­கு­தல்­களை கண்­டிக்கும் வகை ­யிலும் – இத்­த­கைய சம்­ப­வங்­களில் தொடர்­பு­டை­ய­வர்­களை நீதியின் முன் நிறுத்தக் கோரும் வகை­யிலும்- தீர்­மான வரைவு  வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருந்­தது.

showImageInStory2தீர்­மான இறுதி வடிவம்

இதன் பின்னர், அமெ­ரிக்கா மூன்று இணைக் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி, உறுப்பு நாடு­களின் ஆலோ­ச­னையை பெற்று, இறு­தி­யான வரைவை கடந்த திங்­கட்­கி­ழமை ஐ.நா. மனி­த ­உ­ரி­மைகள் பேர­வையில் சமர்ப்­பித்­தி­ருந்­தது.

முதல் மற்றும் இரண்­டா­வது வரை­வு­களில் பல விட­யங்கள் நீக்­கப்­பட்டு, இன்னும் பல சேர்க்­கப்­பட்டு, இறுதி வரைவு தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதில், முக்­கி­ய­மான மாற்றம், இந்த விசா­ரணைக் காலப்­ப­கு­தியை வரை­யறை செய்ததாகும்.

சர்­வ­தேச விசா­ரணை என்­ப­தற்குப் பதி­லாக, ஐ.நா மனி­த­ உ­ரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்­தினால்  “சுதந்­தி­ர­மான விரி­வான விசா­ரணை” என்ற பதம் சேர்க்­கப்­பட்­ட­துடன், நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவனம் செலுத்­திய காலப்பகுதியில் நடந்த சம்­ப­வங்கள் குறித்து விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்று கால­வ­ரை­ய­றையும் வகுக்­கப்­பட்­டது.

இதன்­ மூலம், இந்த விசா­ர­ணை­க­ளுக் குள் இந்­தி­யா­வுடன் தொடர்­பு­டைய விவ­கா­ரங்கள் வராமல் பார்த்துக் கொள்­ளப்­பட்­டது. இந்­தி­யா­வி­னது ஆத­ரவை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கே, அமெ­ரிக்கா இந்த இரண்டு விட­யங்­க­ளிலும் திருத்தம் செய்­தது.

ஆனால், கடை­சியில் இந்­தியா காலை வாரி­விடும் என்று அமெ­ரிக்­காவோ, அல்­லது தமிழர் தரப்போ கொஞ்­சமும் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை.

விவா­தத்­துக்கு விடப்­பட்ட  தீர்­மான வரைவு

index1கடந்த 26ஆம் திகதி ஐ.நா. மனி­த ­உ­ரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையின் அறிக்­கையின் மீது நடந்த விவா­தத்தை அடுத்து, மறுநாள், அமெ­ரிக்­காவின் தீர்­மானம் வாக்­கெ­டுப்­புக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது.

முதலில், தீர்­மா­னத்தை முன்­வைத்து அமெ­ரிக்கப் பிர­தி­நிதி உரை­யாற்­றினார்.

தீர்­மா­னத்­துக்கு 41 நாடுகள் இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ள­தாகக் குறிப்­பிட்ட அவர், இலங்­கையில் தொடர்ந்தும் இடம்­பெறும் மோச­மான மனி­த­ உ­ரி­மை கள் மீறல்­களைச் சுட்­டிக்­காட்­டி­யதுடன், தீர்­மா­னத்தை நிறை­வேற்றித் தருமாறும் உறுப்பு நாடு­க­ளிடம் கேட்­டுக்­கொண்டார்.

இதை­ய­டுத்து, இணை   அனு­ச­ரணை வழங்கும் நாடு­களின் சார்பில் மசி­டோ­னியா, மொறி­சியஸ், ஐரோப்­பிய ஒன்­றியம், மொன்­ர­னிக்ரோ நாடு­களின் பிர­தி­நி­தி­களும் அதே தீர்­மா­னத்தின் அவ­சியம் குறித்து உரை­யாற்­றினர்.

இலங்­கையும் நட்பு நாடு­களும் நிரா­க­ரிப்பு

தீர்­மா­னத்தை முன்­வைத்த நாடு­களின் உரையை அடுத்து, இலங்கை பிர­தி­நிதி ரவிநாத் ஆரி­ய­சிங்­க­வுக்கு பதி­ல­ளிக்க வாய்ப்பு வழங்­கப்­பட்­டது.

அவர், இந்த தீர்­மானம் ஐ.நா. பிர­க­ட­னத்­துக்கு முர­ணா­னது என்றும், உறுப்பு நாடு ஒன்றின் இறை­மைக்கு ஆபத்தை விளை­விக்கக் கூடி­யது என்றும் சுட்­டிக்­காட்­டினார். தீர்­மா­னத்தை இலங்கை நிரா­க­ரிப்­ப­தா­கவும், உறுப்பு நாடுகள் இதனை நிரா­க­ரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதை­ய­டுத்து, ஏனைய நாடு­க­ளுக்கு உரை­யாற்றும் வாய்ப்பு அளிக்­கப்­பட்ட போது, பாகிஸ்தான், கியூபா, இந்­தியா, வெனி­சு­வேலா, சீனா, ரஷ்யா, கியூபா, மாலை­தீவு, இந்­தோ­னே­சியா ஆகிய நாடு கள் கருத்து தெரி­விக்க விருப்பம் வெளி­யிட்­டன. இந்த நாடுகள் அனைத்­துமே தீர்­மான வரை­வுக்கு எதி­ரா­கவும், தேவை­யற்ற தலை­யீடு என்றும் கடு­மை­யாக விமர்­சிக்க, பேரவை விவாதம் சூடு­பி­டிக் கத் தொடங்­கி­யது.

‘கலக்­கிய’ பாகிஸ்தான் பிர­தி­நிதி

பாகிஸ்தான் பிர­தி­நிதி சமீர் அக்ரம் தான், இலங்­கையைக் காப்­பாற்­று­வ­தற்கு கடு­மை­யாகப் போரா­டி­யவர். அவர், ஐ.நா. விசா­ர­ணையைத் தடுத்து நிறுத்தப் பல வழி­க­ளிலும் முயற்­சி­களை முயற்­சி­களை மேற்­கொண்டார்.

ஐ.நா. மனி­த­ உ­ரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் மூலம் விசா­ரணை நடத்­தப்­படக் கோரும் தீர்­மா­னத்தின் 10 ஆவது பந்­தியை திருத்த வேண்டும் என்று முத­லா­வது கோரிக்­கையை வைத்தார்.

அடுத்து, இந்த விசா­ர­ணை­க­ளுக்குத் தேவைப்­படும் பெரு­ம­ளவு நிதியை எவ்­வாறு பெறு­வது என்றும் கேள்வி எழுப்­பினார்.

அப்­போது வழக்­க­மான வர­வு­–செ­ல­வுத்­திட்ட ஒதுக்­கீட்டில் இருந்து இதற்­கான நிதியைப் பெற­மு­டி­யாது என்றும், எனவே இந்த தீர்­மானம் மீது வாக்­கெ­டுப்பு நடத்­து­வதை ஒத்­தி­வைக்க வேண்டும் என் றும் பாகிஸ்தான் பிர­தி­நிதி கோரிக்கை விடுத்தார்.

எப்­ப­டி­யா­வது இந்த தீர்­மா­னத்தை நிறை­வேற்­றாமல் தடுப்­ப­தற்கு பாகிஸ்தான் தான் உச்­சக்­கட்­ட­மாக முனைந்­தது.  வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்டால், தீர்­மானம் எப்­ப­டியும் நிறை­வேறிவிடும் என்­பதை, பாகிஸ்தான் போன்ற நட்பு நாடு கள் நன்­றா­கவே அறிந்­தி­ருந்­தன.

அதனால், நிதி ஒதுக்­கீட்டை காரணம் காட்டி தீர்­மா­னத்தை நிறை­வேற்­றாமல் தடுக்கப் பார்த்­தது.

விடாப்­பி­டி­யாக நின்­றது அமெ­ரிக்கா

ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகள் பாகிஸ்­தானின் யோச­னைக்கு ஆத­ர­வாக நின்­றன. ஆனால், அமெ­ரிக்­காவும், இணை அனு­ச­ரணை நாடு­களும், எந்த முடி­வாக இருந்­தாலும், வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்டே தீமானிக்­கப்­பட வேண்டும் என்று அழுத்­த­மாக கூறின.

வெறும் வாய்­மூலத் திருத்­தங்­க­ளுக்கு இட­ம­ளிக்க அனு­ச­ரணை நாடுகள் தயா­ராக இருக்­க­வில்லை. இதனால், இலங்கை தொடர்­பான தீர்மானம் மீது மூன்று வாக்­கெ­டுப்­புகள் நடத்­தப்­பட்­டன.

பாகிஸ்­தானின் காப்­பாற்றும்  முயற்­சிகள் தோல்வி

பாகிஸ்தான் முன்­வைத்த தீர்­மா­னத்தை ஒத்­தி­வைக்கும் யோசனை மீது முதலில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது.  அப்­போது வாக்­கெ­டுப்பை பிற்­போ­டு­வ­தற்கு ஆத­ர­வாக 16 நாடு­களும், எதி­ராக 25 நாடு­களும் வாக்­க­ளித்­தன. 6 நாடுகள் வாக்­கெ­டுப்பில் பங்­கேற்­க­வில்லை.

இதனால், பாகிஸ்­தானின் முத­லா­வது யேசனை நிரா­க­ரிக்­கப்­பட்­ட­துடன், தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­டு­வதை தடுக்கும் முயற்­சிக்கும் ஆப்பு வைக்­கப்­பட்­டது. அதை­ய­டுத்து, ஐ.நா. மனி­த­ உ­ரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் மூலம் விசா­ரணை நடத்த வலி­யு­றுத்தும், 10ஆவது பந்­தியை நீக்கும் யோசனை குறித்து வாக் ­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது.

ஆனால், 10 ஆவது பந்­தியை நீக்­கு­வ­தற்கு 23 நாடுகள் எதிர்ப்புத் தெரி­விக்க, 14 நாடுகள் மட்டும் ஆத­ரவு தெரி­வித்­தன. 10 நாடுகள் நடு­நிலை வகித்­தன.

இதனால், 10 ஆவது பந்­தியை நீக்கும் யோச­னையும் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

இணைந்து கொண்ட இந்­தி­யாவும் பாகிஸ்­தானும்

பாகிஸ்­தானின் யோச­னைகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டதால், இலங்­கைக்கு ஆத­ர­வாக, நட்பு நாடுகள் மேற்­கொண்ட முயற்­சிகள் அனைத்தும் முடங்­கின. எப்­போதும் கீரியும் பாம்­பு­மாக அடி­படும் இந்­தி­யாவும் பாகிஸ்­தானும்,  இலங்கை விட­யத்தில் ஒன்­று­பட்டு நின் ­றதைப் பார்த்து பலரும் புரு­வத்தை உயர்த்தி ஆச்­ச­ரி­யப்­பட்­டனர். பாகிஸ்தான் முன்­வைத்த இரண்டு யோச­னை­க­ளுக்­குமே இந்­தி­யாவும் ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தது.

அதே­வேளை, தீர்­மா­னத்தை எதிர்த்த, பாகிஸ்­தானே அதில் திருத்­தங்­களைச் செய்யவும் யோசனை முன்­வைத்­தது இன்னொரு முரண்­பா­டான விடயம்.

இறுதி வாக்­கெ­டுப்பு

சுமார் ஒன்­றரை மணி நேரம் நீடித்த வாதப்­பி­ர­தி­வா­தங்­களின் முடிவில், இறுதி வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது.  இதன் போது 23 நாடுகள் ஆத­ர­வாக வாக்­க­ளிக்க, 12 நாடுகள் எதிர்த்­தன, 12 நாடுகள் வாக்­க­ளிக்­க­வில்லை.

முன்­னரே இந்­திய பிர­தி­நிதி வாக்­கெ­டுப்பில் கலந்து கொள்ளப் போவ­தில்லை என்று அறி­வித்­ததால், இந்­தியா பற்­றிய சஸ்பென்ஸ் இல்­லாமல் போனது.

எவ்­வா­றா­யினும், 23 நாடு­களின் ஆத­ர­வுடன் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட போதும், 47 உறுப்­பி­னர்­களைக் கொண்ட சபையின் பெரும்­பான்மை நாடு­களின் ஒப்­பு­தலை அது பெற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பெரும்­பான்மை என்­பது 24 வாக்­கு­க­ளாகும். அதைப் பெறு­வ­தற்கு இந்தத் தீர்­மானம் தவ­றி­விட்­டது.

தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு குறைந்­தது ஏன்?

முன்னர், 2012இல் 24 நாடு­களும், 2013இல் 25 நாடு­களும் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னத்தை ஆத­ரித்­தி­ருந்­தன.    இந்த ஆண்டு உறுப்­பு­ரிமை மாற்­றத்தின் போது புதி­தாக உள்ளே வந்த நாடுகள் அதி­க­ளவில் இலங்­கைக்கு ஆதரவானவை என்­பதால், தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு குறை­வா­கவே கிடைத்­தது.

இதை­விட கடந்த இரண்டு தட­வை­களும், ஆத­ரித்து வாக்­க­ளித்த இந்­தியா, ஒதுங்கிக் கொண்­டதால், தீர்­மா­னத்­துக்கு அறுதிப் பெரும்­பான்மை கிடைக்­காமல் போனது.  அது­போ­லவே, இலங்­கைக்கு ஆத­ர­வாக – தீர்­மா­னத்தை எதிர்த்த நாடு­களின் எண்­ணிக்­கையும் தொடர்ச்­சி­யாக குறைந்து வந்­துள்­ளதை அவ­தா­னிக்­கலாம்.

2012இல் இலக்­கைக்கு ஆத­ர­வாக 15 நாடுகள் நின்­றன. 2013இல் 13 நாடுகள் இலங்­கையை ஆத­ரித்­தன. இம்­முறை 12 நாடு­களே தீர்­மா­னத்தை எதிர்த்­தன.

முஸ்லிம் நாடு­களின் நிலை

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் பற்­றிய அறிக்­கையின் தாக்­கத்­தினால், குவைத் நடு­நிலை வகித்­தது. கடந்த ஆண்டு குவைத்தின் ஆத­ரவு இலங்­கைக் குக் கிடைத்­தி­ருந்­தது. அதே­வேளை, அல்­ஜீ­ரியா, மாலை­தீவு, பாகிஸ்தான், ஐக்­கிய அரசு எமிரேட்ஸ், சவூதி அரே­பியா ஆகிய 5 முஸ்லிம் நாடு­களே தீர்­மா­னத்தை எதிர்த்து வாக்­க­ளித்­தன.

முஸ்லிம் காங்­கி­ரஸின் அறிக்­கையின் தாக்கம், அர­சாங்­கத்­துக்கு குறைந்­தது குவைத்தின் ஒரு வாக்­கை­யேனும் கிடைப்­பதை தடுத்து விட்­டது.

இலங்­கை­யுடன் இணை­யாத இலத்தீன் அமெ­ரிக்கா

இம்­முறை அர­சாங்கம் இலத்தீன் அமெ­ரிக்க நாடுகள் விட­யத்தில் கடும் தோல்­வி­யையே சந்­தித்­தது.

ஏனென்றால், இலத்தீன் அமெ­ரிக்கா சார்பில் 8 நாடுகள், ஐ.நா. மனி­த ­உ­ரி­மை கள் பேர­வையில் அங்கம் வகிக்­கின்ற போதும், கியூ­பாவும், வெனி­சு­வே­லாவும் மட்­டுமே இலங்­கையை ஆத­ரித்­தன.

ஆஜென்­ரீனா, கோஸ்­டா­ரிக்கா, பிறே சில், பெரு, சிலி, மெக்­ஸிகோ ஆகிய நாடு கள் தீர்­மா­னத்தை ஆத­ரித்­தன.

இதனால், இலத்தீன் அமெ­ரிக்­காவை நோக்கி அர­சாங்கம் நகர்த்­திய இரா­ஜ­தந்­திர முயற்­சிகள் எல்­லாமே வீண்­போ­யின.

ஆபி­ரிக்க நாடு­க­ளிடம் வீசிய நடு­நி­லைக்­காற்று

ஆபி­ரிக்க நாடு­களைப் பொறுத்­த­வ­ரை யில், 13 நாடுகள் பேர­வையில் அங்கம் வகித்த போதும், அல்­ஜீ­ரியா, கொங்கோ, கென்யா ஆகிய மூன்­றுமே இலங்­கைக்கு ஆத­ர­வ­ளித்­தன.  பெனின், பொட்ஸ்­வானா, ஐவ­ரிகோ ஸ்ட், சிய­ர­லியோன் ஆகிய 4 நாடுகள் தீர்­மா­னத்தை ஆத­ரித்­தன.

ஏனைய நாடு­க­ளான நமீ­பியா, எதி­யோப்­பியா, மொேராக்கோ, புர்­கி­னோ­பாசோ, காபோன், தென்­னா­பி­ரிக்கா ஆகிய 6 நாடு­களும் வாக்­கெ­டுப்பில் பங்­கெ­டுக்­க­வில்லை.

ஆசி­யாவில் ஒரே ஒரு நாடு தான் அமெ­ரிக்கா பக்கம்

ஆசிய நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில், பேர­வையில் உள்ள 13 நாடு­களில்   தீர்­மா­னத்தை ஆத­ரித்த  ஒரே நாடு தென்­கொ­ரியா மட்டும் தான். சீனா, மாலை­தீவு பாகிஸ்தான், சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு எமிரேட்ஸ், வியட்னாம், ஆகிய நாடுகள் தீர்­மா­னத்தை எதிர்த்து வாக்­க­ளித்­தன. அதே­வேளை, இந்­தியா, இந்­தோ­னே­ சியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், கசக்ஸ் தான், குவைத் ஆகி­யன 6 நாடு­களும் நடு­நிலை வகித்­தன.

ஒன்­று­பட்டு நின்­றது ஐரோப்பா

கிழக்கு மற்றும்  மேற்கு ஐரோப்­பிய வல­யங்­களில் 13 நாடுகள் ஐ.நா. மனி­த­ உ­ரி­மைகள் பேர­வையில் அங்கம் வகிக்­கின்றன. இவற்றில், ரஷ்யா மட்டும் தான், இலங்­கைக்கு நட்­புக்­கரம் நீட்­டி­யது. ஏனைய 12 நாடு­களும் தீர்­மா­னத்தை ஆத­ரித்து, வாக்­க­ளித்து ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்­தின.

indexதோல்­வியில் முடிந்து கம­ரூனின் முயற்சி

அதேவேளை, தென்னாபிரிக்கா, ஜப் பான், காபோன், கஸகஸ்தான் உள்ளிட்ட நாடுகளை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் கடும் முயற்சிகளை மேற்கொண்டன.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஹேக்கில் நடந்த கூட்டத்தில் காபோன், ஜப்பான், கஸகஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் தனிப்பட்ட ரீதியாக ஆத ரவு கோரியிருந்தார்.

ஆனால், அந்த நாடுகள் நடுநிலை வகித் ததால், அமெரிக்க பிரித்தானிய முயற்சி கள் பின்னடைவு கண்டன.

விசாரணைக்கு 1.46 மில்லியன் டொலர்

இலங்கையில் நடந்து மீறல்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்தப் போகும் ஒரு ஆண்டு விசாரணைக்கு 1.46 மில்லியன் டொலர் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேர வைச் செயலகத்தினால், இந்த மதிப்பீடு செய் யப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும், ஐ.நா. மனித உரிமை கள் பேரவைக்கு ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டே இதைச் சமாளிக்கலாம் என்று பேரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

அடுத்தது என்ன?

கடும் இழுபறிக்கு மத்தில் ஜெனீவா வில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை, இலங்கை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்து விட்டது.  இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்ற எதிர் பார்ப்பு தோன்றியுள்ளது.

அதுமட்டு மன்றி இந்த விசாரணைகளின் முடிவில், அளிக்கப் படும் அறிக்கையின் அடிப்படையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதும் கூட கேள்வியாகவே உள்ளது.

(என்.கண்ணன்)

 

Share.
Leave A Reply