முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் ஜோதிகா. திருமணத்திற்குப் பிறகு கணவன், குழந்தைகள் என பிசியாகி விட்டார்.
சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சூர்யாவுடன் சேர்ந்து சில விளம்பரப் படங்களில் தலை காட்டினார் ஜோதிகா. அதன் தொடர்ச்சியாக குழந்தைகள் வளர்ந்து விட்டதால் ஜோதிகா மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாயின.
ஜோதிகாவுக்கான ஸ்கிரிப்ட் வந்தா நிச்சயம் நடிப்பாங்க. ஆனா, இப்ப வரை எந்த புராஜெக்ட்டையும் அவங்க கமிட் பண்ணலை.
ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கக்கூடிய ஸ்கிரிப்ட் கிடைச்சா, சேர்ந்து நடிப்போம். ஆனா, ஒரு கண்டிஷன்.100 நாள் கால்ஷீட்லாம் கேக்கக் கூடாது. ஏன்னா ரெண்டு,மூணி மணி நேரம்கூட பிள்ளைங்களை விட்டுட்டு அவங்களால இருக்க முடியாது’ என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பெருமையா இருக்கு. வீட்ல செம சேட்டை, குறும்பு பண்ணுவாங்க. ஆனா வெளியே போனா, ‘அட சமத்துப் பிள்ளைகளா இருக்காங்களே!’னு வெரிகுட் வாக்கிடுவாங்க.
இதுக்கான முழு கிரெடிட்டும் ஜோவுக்குத் தான். குழந்தைகள் கண்ணாடி மாதிரி நாம என்ன பண்றோமோ, அதைத் தான் பிரதிபலிப்பாங்கனு பார்த்துப் பார்த்து வளர்க்கிறாங்க.
பொண்ணுக்கு ஜிம்னாஸ்டிக் பிடிச்சிருக்கு. ஸ்விம்மிக், பாட்டனி, குழந்தைகளுக்கான தியேட்டர் பயிற்சினு நிறைய கிளாஸ் போயிட்டு இருக்காங்க.
பையன் எங்க அப்பா மாதிரி. அவனுக்கும் ஓவியம் வரையப் பிடிச்சிருக்கு. ஒரு நாளைக்கு 100 படக்கள் கூட வரையுறார்.
அதுக்குள்ள வீடு முழுக்க அவங்களோட கிரியேட்டிவிட்டி நிறைஞ்சிருக்கு. ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்.
ஒரு அப்பாவுக்கு இவ்ளோ சந்தோஷம் கிடைக்குமாங்கிற ஆச்சர்யத்தோடவே அதை அனுபவிச்சிட்டு இருக்கேன்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சூர்யா.