ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, May 22
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»கட்டுரைகள்»புரியாத புதிராகிவிட்ட ரஜினியின் அரசியல் பிரவேசம்
    கட்டுரைகள்

    புரியாத புதிராகிவிட்ட ரஜினியின் அரசியல் பிரவேசம்

    adminBy adminNovember 27, 2014Updated:November 28, 2014No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ரஜி­னி­காந்தின் ‘அர­சியல் பிர­வேசம்’ என்­பது ஒரு புதி­ரா­கவே இருந்து வரு­கி­றது. சில நேரங்­களில் அர­சி­ய­லுக்கு வரு­வது போன்று பேசு­கிறார். பின்பு அர­சி­யலில் ஈடு­பாடு இல்லை என்­கிறார்.

    ஆனால் அவ்­வப்­போது எதை­யா­வது பர­ப­ரப்­பான கருத்­துக்­களைத் தெரி­வித்து அவ­ரது ரசி­கர்­க­ளையும் தமி­ழக மக்­க­ளையும் குழப்பி விடு­கிறார். இது இன்று நேற்­றல்ல நீண்ட கால­மா­கவே இடம்­பெற்று வரு­கி­றது.

    இந்­தி­யாவின்  கோவாவில் கடந்த 20 ஆம் திகதி 45 ஆவது இந்­திய சர்­வ­தேச திரைப்­பட விழா ஆரம்­ப­மா­னது. இதில் கலந்து கொள்­வ­தற்­காக தனது மனைவி லதா­வுடன் சென்ற ரஜினி கோவாவின் பனாஜி விமான நிலை­யத்தில் சென்று இறங்­கிய போது அவரைத் தனியார் தொலைக்­காட்சி ஒன்று பேட்டி கண்­டது.

    அப்­போது தொலைக்­காட்சி நிரு­பரின் கேள்­விக்கு பதி­ல­ளித்த ரஜி­னிகாந்த் ‘நான் இப்­போ­தைக்கு அர­சி­யலில் ஈடு­ப­ட­மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். அத்­துடன் அர­சியல் பற்றி மேலும் பேசு­வ­தற்கு விரும்­ப­வில்லை’ என்றும் அவர் தெரி­வித்­தி­ருக்­கிறார். இதன் மூலம் அவர் அரசியலில் இறங்­கு­வ­தற்கு விருப்­ப­மில்­லா­த­வரைப் போலவே காணப்­ப­டு­கிறார்.

    இதே­வேளை, கடந்த 16 ஆம் திகதி சென்­னையில் இடம்­பெற்ற ‘லிங்கா‘ திரைப்­பட இசை வெளி­யீட்டு விழாவில் பேசிய அவர் ‘அர­சி­யல்­பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும்.

    அதன் ஆழம் ஆபத்து பற்­றியும் தெரியும். யார் யாரின் தோளை மிதித்து அங்கு செல்ல வேண்டும் எனவும் தெரியும். இத்­தனை பாடு­பட்டு அர­சி­ய­லுக்குச் சென்றால் அங்கு நினைத்­ததை எல்லாம் செய்ய முடி­யுமா என்று சந்­தே­க­மாக இருக்­கி­றது.

    அர­சி­யலை நினைத்து பயப்­ப­ட­வில்லை. அதன் ஆழத்தை நினைத்தே பயந்து கொண்­டி­ருக்­கிறேன். அர­சி­யலைப் பற்றி நான் பேச­வில்­லை­யென்றால் திமிர் என்­றாகி விடும். எது­வாக இருந்­தாலும் சரி அதை கட­வுள்தான் முடிவு செய்வார்’ என்று பிடி­கொ­டுக்­காமல் பேசி­யி­ருக்­கிறார்.

    அர­சி­யலில் இறங்க ஆர்­வ­மாக இருப்­பது போல பேசி­னாலும் பின்னர் தயக்­க­மாக இருப்­ப­தாக கூறு­கிறார். இதனால் ரஜி­னியை அர­சி­ய­லுக்கு இழுக்க வேண்டு­மென்று முயற்­சிப்­ப­வர்­க­ளுக்கும் அவ­ரது ரசி­கர்­க­ளுக்கும் குழப்­பத்­தையும் அதி­ருப்­தி­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

    அர­சி­ய­லுக்கு வரு­வதா? இல்­லையா? என்­பது பற்றி ஒரு உறு­தி­யான தெளி­வான பதிலை இது­வரை ரஜி­னிகாந்த் தெரி­விக்­க­வில்லை என்­பது புதி­ராக உள்ளது. இது கடந்த 15 வரு­டங்­க­ளா­கவே தொடர்ந்து இடம்­பெற்று வரு­கி­றது.

    காங்­கி­ர­ஸி­லி­ருந்து கருப்­பையா மூப்­பனார் விலகி தமிழ் மாநில காங்­கி­ரஸை ஆரம்­பித்தார். அப்­போது அவர் தி.மு.க.வுடன் கூட்­டணி அமைத்து தமி­ழக சட்டப்­பே­ரவைத் தேர்­தலில் போட்­டி­யிட்டார். அந்தக் கூட்­ட­ணிக்கு ஆத­ர­வாக அப்­போது ரஜி­னிகாந்த் பேசினார். அந்தத் தேர்­தலில் அந்தக் கூட்­டணி பெரும் வெற்றி பெற்­றது.

    இப்­போதும் கூட காங்­கி­ர­ஸி­லி­ருந்து வெளி­யேறி தனிக்­கட்சி அமைத்­துள்ள முன்னாள் மத்­திய அமைச்­சரும் மறைந்த கருப்­பையா மூப்­ப­னாரின் மகனுமான ஜி.கே. வாசன் அந்த தேர்­தலை கணக்கில் வைத்தே தமது புதிய கட்­சிக்கு ஆத­ரவு வழங்­கு­மாறு ரஜி­னி­யிடம் கோரிக்கை விடுத்து வரு­கிறார் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

    எனினும் ரஜி­னிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்­படம் தொடர்பில் பாட்­டாளி மக்கள் கட்­சியின் நிறு­வுனர் ராம­தா­ஸுக்கும் ரஜி­னிக்கும் இடையில் எழுந்த பிரச்சினையைத் தொடர்ந்து அப்­போ­தைய காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற தேர்­தலில் பார­தீய ஜன­தா கட்­சிக்கு (பா.ஜ.க.) வாக்­க­ளிக்­கும்­படி ரஜினி தமி­ழக மக்களை கேட்­டுக்­கொண்­டி­ருந்தார்.

    ஆனால், தமி­ழக மக்கள் பா.ஜ.க.வுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­க­வில்லை. ரஜி­னியின் வேண்­டுகோள் எடு­ப­டாமல் போனமை குறிப்­பி­டத்­தக்­கது.

    கடந்த லோக்­சபா (பாரா­ளு­மன்ற) தேர்­த­லிலும் கூட பா.ஜ.க. ரஜி­னியின் ஆத­ரவை நாடி­யது. பா.ஜ.க. சார்பில் பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட தற்­போதைய பிர­தமர் நரேந்­திர மோடி ரஜி­னி­காந்தின் வீடு தேடிச்­சென்று அவ­ரது ஆத­ரவைக் கோரி­யி­ருந்தார்.

    தேர்தலில் அகில இந்­திய அளவில் பா.ஜ.க. வெற்றி பெற்­றாலும் தமி­ழ­கத்தைப் பொறுத்­த­ளவில் பா.ஜ.க. பெறுந்­தோல்­வி­ய­டைந்­தது. இதில் அ.தி.மு.க பெரும் வெற்­றி­யீட்­டி­யது.

    இது பா.ஜ.க தலை­வர்கள் மத்­தியில் பெருந்­தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. எனவே, தமி­ழ­கத்தில் திரா­விடக் கட்­சி­களின் ஆதிக்­கத்தை ஒழிப்­ப­துடன் பா.ஜ.க. வின் ஆட்­சியை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்று உறுதி கொண்­டது.

    அதன் அடிப்­ப­டை­யி­லேயே ரஜி­னியை பா.ஜ.க. வில் இணைத்­துக்­கொள்­வ­தற்கு பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, பிர­தமர் மோடி ஆகியோர் தொலை­பே­சியில் ரஜி­னி­காந்­துடன் பேசி­ய­தாக தக­வல்கள் வெளி­யா­கின. மட்­டு­மன்றி கர்­நா­டக மாநி­லத்தின் முன்னாள் முத­ல­மைச்சர் எடி­யூ­ரப்பா மற்றும் ஈஸ்­வ­ரப்­பாவும் ரஜி­னியை நேரில் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தினர்.

    பா.ஜ.க. தமி­ழக மாநில தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள தமி­ழிசை சௌந்­த­ரா­ஜனும் கூட ரஜி­னியின் வீட்­டுக்கு சென்றார். தொடர்ந்தும் ரஜி­னியை கட்சிக்குள் இணைத்து கொள்ள முயற்சி செய்து வந்தார்.

    பா.ஜ.க. வுக்குள் ரஜி­னியை வளைத்துப் போட்டு 2016 இல் நடை­பெ­ற­வுள்ள தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் ­தேர்­தலில் தமி­ழ­கத்தின் ஆட்­சியைப் பிடிப்­பதே பா.ஜ.க. வின் திட்­ட­மாக இருக்­கி­றது.

    எனினும் பா.ஜ.க. வில் சேர்ந்து கொள்­வது பற்றி ரஜினி இது­வரை எந்­த­வித கருத்­தையும் வெளி­யி­ட­வில்லை. எனினும் லிங்கா படப்­பி­டிப்பு முடிந்­த­வுடன் தமது முடிவை தெரி­விப்­ப­தாக கூறி வந்தார்.

    ஆனால் சொத்­துக்­கு­விப்பு வழக்கில் சிறை சென்று திரும்­பிய முன்னாள் முதல்வர் ஜெய­ல­லி­தா­வுக்கு வாழ்த்து தெரி­வித்து ரஜினி அறிக்கை விட்­டதால் பா.ஜ.க. தரப்பு பின்­வாங்கிக் கொண்­டது. ‘சீச்சீ இந்­தப்­பழம் புளிக்கும்’ என்ற கதை­யா­கிப்­போ­னது.

    எந்­த­வொரு கட்­சி­யி­ன­ரையும் ரஜி­னிகாந்த் பகைத்­துக்­கொள்­ளா­த­வ­ரா­கவே காணப்­ப­டு­கிறார். தி.மு.க. தலைவர் கரு­ணா­நி­தி­யுடன் நெருங்­கிய நட்­பினைக் கொண்­டி­ருக்­கிறார். அது போலவே விஜ­யகாந்த், வைகோ, காங்­கிரஸ் தலை­வர்கள் உள்­ளிட்ட அனை­வ­ரு­டனும் சுமு­க­மான உறவைக் கொண்­டி­ருக்­கிறார்.

    ஒவ்­வொரு கட்­சி­யி­னரும் ரஜி­னியின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்­வதில் போட்டி போட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. தமி­ழக காங்­கிரஸ் தலைவர் ஈ.வி. கே.எஸ். இளங்­கோவன் அர­சி­ய­லுக்கு ரஜினி வரக்­கூ­டாது என்­கிறார்.

    அதே­வேளை தமிழ் மாநில காங்­கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமது கட்­சிக்கு ஆத­ரவு வழங்க வேண்­டு­மெனக் கூறு­கிறார். அதேவேளை பா.ம.க. நிறு­வுனர் ராமதாஸ் அர­சி­யலில் ஈடு­பட ரஜி­னிக்கு உரிமை இருக்­கி­றது. அவர் அர­சி­யலில் ஈடு­ப­டலாம் என்­கிறார். தமி­ழக தலை­வர்கள் சிலரும் கூட சந்­தர்ப்­பங்­க­ளுக்கு ஏற்­ற­வாறு பேசு­கின்­றனர்.

    இந்த நிலையில் கோவாவில் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் 45 ஆவது இந்­திய சர்­வ­தேச திரைப்­பட விழாவில் ரஜி­னி­காந்­துக்கு சிறந்த திரை­யு­லக பிர­மு­க­ருக்­கான ‘இந்­திய சினிமா நூற்­றாண்டு விருது’ வழங்­கப்­பட்டு கௌர­விக்­கப்­பட்­டுள்ளார். இந்த விரு­தினைப் பெறு­வ­தற்கு அனைத்து வகை­யிலும் ரஜினிகாந்த் தகு­தி­யு­டை­யவர் என்­ப­துடன் அவரால் தமி­ழக திரை­யு­ல­குக்கு பெருமை சேர்­கி­றது.

    இதுவும் கூட ரஜி­னியை தன்­பக்கம் இழுப்­ப­தற்கு பா.ஜ.க. செய்த ஒரு தந்­திரம் எனப் பேசப்­ப­டு­கி­றது.

    எவ்­வா­றா­யினும் அர­சி­ய­லுக்கு வரு­வதில் தனக்கு இஷ்டமில்லை என்று ரஜினி கூறி­யி­ருப்­பது அவரை தத்­த­மது கட்­சிக்குள் வளைத்­துப்­போட முயன்ற தலை­வர்­க­ளுக்கும் ரஜி­னியின் ரசி­கர்­க­ளுக்கும் பெருத்த ஏமாற்­றத்தை அளித்­துள்­ளது என்றே எண்­ணத்­தோன்­று­கி­றது.

    எவ்­வா­றா­யினும் அவர் தமது எண்­ணத்தை மாற்­றிக்­கொண்டு எதிர்­கா­லத்தில் அர­சி­யலில் ஈடு­ப­டலாம் என்­ற­தொரு கருத்தும் நில­வு­கி­றது. தான் அர­சி­யலில் ஈடு­ப­டு­வது பற்றி ‘காலமும் கட­வுளும் தான் தீர்­மா­னிக்க வேண்டும்’ என்ற வச­னத்­தையும் அவர் அடிக்­கடி பயன்­ப­டுத்தி வரு­கிறார். எனவே, காலம் கைகூடினால் அவர் அரசியலில் ஈடுபடலாம்.

    பல்­வேறு கட்­சிகள் அவரை இணைத்­துக்­கொள்ள முயற்சி செய்­தாலும் ரஜி­னி­காந்தின் ரசி­கர்­களின் விருப்பம் வேறாக இருக்­கி­றது. அதா­வது தற்­போ­துள்ள எந்தக் கட்­சி­யிலும் சேரக்­கூ­டாது. புதி­தாக கட்சி ஆரம்­பித்து அதன் மூலம் தமி­ழக ஆட்­சியை கைப்­பற்ற வேண்டும் என்­பதே அந்த விருப்பம்.

    காலம் பதில் சொல்­கின்­ற­போது ரஜி­னிகாந்த் புதிய கட்சி ஆரம்­பிப்­பாரா? அல்­லது ஏதா­வது ஒரு கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வாரா? அவ­ரது ஸ்டைலில் சொல்ல வேண்­டு­மானால் ‘காலந்தான் பதில் சொல்ல வேண்டும்’.

    நல்லதம்பி நெடுஞ்செழியன்

    Post Views: 413

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    இலங்கை நெருக்கடி: பணத்தை அச்சிட்டால் பொருளாதார பிரச்னை முடிந்துவிடுமா?

    May 20, 2022

    டொலர் நெருக்கடியை தீர்க்க ரணில் அமைக்கும் வியூகம் வெற்றிபெறுமா?

    May 17, 2022

    இராணுவ ஆட்சி சாத்தியமா ? சுபத்ரா

    May 15, 2022

    Leave A Reply Cancel Reply

    November 2014
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Oct   Dec »
    Advertisement
    Latest News

    டெங்கு காய்ச்சலால் யாழில் 11 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு

    May 22, 2022

    உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!

    May 21, 2022

    பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!

    May 21, 2022

    21 ஆவது திருத்தத்திற்கு தயாராகும் நீதி அமைச்சர்: பஸில் வீட்டுக்குப் போவார்!

    May 21, 2022

    லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதம்? – அமெரிக்கா மறுப்பு

    May 21, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • டெங்கு காய்ச்சலால் யாழில் 11 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு
    • உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!
    • பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!
    • 21 ஆவது திருத்தத்திற்கு தயாராகும் நீதி அமைச்சர்: பஸில் வீட்டுக்குப் போவார்!
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version