ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்­தினால் 2013 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் 13 ஆயிரம் இலட்சம் ரூபா செலவில் மாலை­தீவில் 4.5 கிலோமீற்றர் தூர­ம­ள­வி­லான வீதி நிர்­மா­ணப்­ப­ணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ரமசிங்க நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தகவல் வெளி­யிட்டார்.

அத்­துடன் மேற்­படி நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்­கென இலங்­கை­யி­லி­ருந்து சட்­டத்­துக்கு முர­ணா­கவே கப்பல் மூலம் கருங்கல் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.

மாலை­தீவில் வீதி நிர்­மா­ணப்­ப­ணிகள் மற்றும் கப்பல் மூலம் கருங்கல் கொண்டு சென்­றமை தொடர்பில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­படும் என்றும் கூறினார்.

பாரா­ளு­மன்றம் நேற்று புதன்­கி­ழமை காலை 9.30க்கு சபா­நா­யகர் சமல் ராஜ­பக் ஷ தலை­மையில் கூடி­யது. சபையின் பிரதான நட­வ­டிக்­கை­களின் பின்னர் வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தில் ஜன­நா­யக தேசியக் கூட்­ட­ணியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் அனுரகுமா­ர­ தி­சா­நா­யக்­க­வினால் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

முன்­ன­தாக கேள்வி எழுப்­பிய அனு­ர­கு­மார திசா­நா­யக்க எம்.பி. கடந்த ஐந்து வருட காலப்­ப­கு­தியில் இலங்கை அர­சாங்­கத்­தினால் மாலை­தீ­வுக்கு செய்­துள்ள நிதி உத­விகள், கருத்­திட்­டங்கள் அவற்றின் பெறு­மதி உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து கேட்டார்.

இக்­கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறு­கையில் மாலை­தீவு எமது அயல் நாடாகும்.அந்­நாட்­டுக்கு எமது நாட்­டி­லி­ருந்து பல்­வேறு ஒத்­து­ழைப்­புக்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

வைத்­தி­யர்கள், ஆசி­ரி­யர்கள் போன்ற மனி­த­வள உத­விகள் பெற்றுக் கொடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் முத­லா­வது தட­வை­யாக அந்­நிய நாட்டில் வீதி நிர்­மா­ணித்துக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

4.5 கிலோ மீற்றர் தூரத்­தி­லான மேற்­படி வீதி நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்­கென இலங்­கை­யி­லி­ருந்து 99 இலட்சம் டொலர் அதா­வது இலங்கை ரூபாவின் படி 13 ஆயிரம் இலட்சம் ரூபா இதற்­கென ஒதுக்­கீடு செய்து செல­வி­டப்­பட்­டுள்­ளது என்றார்.

இதன் போது பிறி­தொரு கேள்­வியைத் தொடுத்த அனுரகுமார திசா­நா­யக்க எம்.பி. கருங்கல்லானது ஏற்­று­மதி செய்ய முடி­யாத பொருட் தொகு­தி­யாகும். ஆனால் இலங்­கை­யி­லி­ருந்து கப்பல் மூல­மாக கருங்கல் ஏற்றிச் செல்­லப்­பட்டே மாலை­தீவில் வீதி நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.இது சட்­டத்தை மீறிச்­செ­யற்­பட்ட பார­தூ­ர­மான செயற்­பா­டாகும்.

எனவே இது தொடர்பில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டுமா எனக்­கேட்க விரும்­பு­கிறேன் என்றார்.கப்பல் மூலம் கருங்கல் கொண்டு சென்­றமை சட்­டத்­துக்கு முரணானது. கடந்த காலங்களில் மக்கள் ஆட்சி இருக்கவில்லை. தற்போது அது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே 13 ஆயிரம் இலட்சம் ரூபா செலவிட்டு மாலைதீவில் வீதி நிர்மாணித் தமை கருங்கல் ஏற்றுமதி செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள் ளப்படும் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version