வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக் கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் இரண் டாவது கட்டமாக வலி.வடக்கில் இரா­ணுவ வசம் இருந்த பொதுமக்­களின் காணி­களில் மேலும் 570 ஏக்கர் நிலப்­ப­ரப்பை விடு­வித்து மீள்­கு­டி­யேற்ற அமைச்­சிடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு நேற்று பிர­தமர் தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்துடன் மேலும் பல்வேறு காணிகளை விடு­வித்து பொது­மக்­க­ளிடம் ஒப்­ப­டைப்பதற்கும் பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

valivadkkuஅதேபோல் கிழக்கில் பொது­மக்­களின் காணி­களை விடு­வித்து இரா­ணுவம் வெளி­யே­று­வ­ தா­கவும் இராணுவ, கடற்­படை தள­ப­திகள் வாக்­கு­றுதியளித்­துள்­ளனர் .

வடக்கில் காணி­களை விடு­விப்­பது தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் நேற்று காலை பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் இடம்­ பெற்ற விசேட கலந்­து­ரை­யா­ட­லின்­போது இத் தீர்மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது .

இந்த கூட்­டத்தில் மீள் குடி­யேற்ற அமைச்சர் டீ.எம் .சுவா­மி­நாதன் , நகர அபி­வி­ருத்தி மற்றும் நீர் வடிகால­மைச்சு அமைச்சர் ரவுப் ஹக்கீம் , தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இ ரா . சம்­பந்தன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம் .எ. சுமந்­திரன் , பிர­தி­ய­மைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் மற்றும் இராணுவ , கடற்­படை தள­ப­திகள் கலந்து கொண்­டி­ருந்­தனர் .

இந்­நி­லையில் இது தொடர்பில் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் தெரி­விக்­கையில் ,

வடக்கில் இரா­ணுவ வசம் உள்ள பொது­மக்­களின் காணி­களை விடு­விக்கக் கோரி நாம் ஆரம்­பத்தில் இருந்தே அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி வரு­கின்றோம்.

அதற்­க­மைய அர­சாங்கம் வலி வடக்கில் ஆயிரம் ஏக்கர் பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தாக கூறி­ய­மைக்கு அமைய கடந்த மாதம் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தலை­மையில் வடக்கில் ஒரு பகுதிகாணிகள் விடு­விக்கப் பட்­டன .

அதன் அடுத்­த­கட்­ட­மாக இன்று (நேற்று) மேலும் 570 ஏக்கர் நிலம் விடு­விக்கப் பட்­டுள்­ளது . இவ்­வாறு விடு­விக்கப் பட்­டுள்ள காணிகள் மீள் குடி­யேற்ற துறை அமைச்­சிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன.

அதேபோல் விடு­விக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­களின் நிலங்­களை அம் மக்கள் பார்­வை­யிட அனு­ம­திக்கப் பட்­டுள்­ள­துடன் உரிய நிலங்­களை அப் பகுதி மக்கள் இனங்­காணும் பட்­சத்தில் நிலத்தை ஒப்­ப­டைப்­ப­தற்­கான நடை­மு­றை­களும் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

அதேபோல் இரா­ணுவ வசம் உள்ள பொது­மக்­களின் நிலங்கள் தொடர்­பிலும் நாம் பிர­த­ம­ரிடம் கேள்வி எழுப்­பி­ய­துடன் அவற்றை நிலங்­களை விடு­விப்­பது தொடர்­பிலும் கோரிக்கை விடுத்­தே­ருந்தோம்

அதற்­க­மைய வடக்கில் பிர­தான இரா­ணுவ முகாம்கள் தவிர்ந்து ஏனைய பொது­மக்­களின் நிலங்களையும் இரா­ணுவம் விரைவில் விடு­விப்­ப­தா­கவும் அதற்­கான நட­வ­டிக்­கை­களை இரா­ணுவம் மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் வாக்­கு­றுதி கொடுத்­துள்­ளது.

மேலும் கிழக்கில் சம்பூர் பகு­தியில் இரா­ணுவ மற்றும் கடற்­படை வச­முள்ள நிலங்­களை விடுவிப்பதாகவும் அங்­குள்ள படை­யி­னரை வெளி­யேற்­று­வ­தா­கவும் இரா­ணுவ தள­பதி,கடற்­படை தளப­திகள் தெரி­வித்­தனர்.

அதோடு முல்­லைத்­தீவு ,சிலா­வத்­துறை ,பர­வி­பாஞ்சான்,கேப்­பா­பி­ளவு ஆகிய பகு­தி­க­ளிலும் பொதுமக்களை மீள் குடி­யேற்றும் நட­வ­டிக்­கை­களை   எடுப்­ப­தா­கவும் அதற்­கான நட­வ­டிக்­கை­களை துரிதப்படுத்து­வ­தா­கவும்  அர­சாங்கம்  உறு­தி­ய­ளித்­துள்­ளது  எனவும் தெரி­வித்தார் .

இதே­வேளை இன்று சனிக்­கி­ழமை விடப்­படும் பகு­தி­களில் காங்­கே­சன்­துறை புகை­யி­ரதப் பாதைக்கு கிழக்­குப்­பு­ற­மாக உள்ள பகு­தி­களில் சுமார் நானுறு ஏக்கர் நிலத்­திற்க்கு மேற்­பட்ட பிர­தேசம் உள்ளடங்கு­கின்­றமை குறிப்­பி்­டத்­தக்­க­தாகும்.

ஜே.235 காங்­கே­சன்­துறை தெற்கு ஜே.236 பளை வீமன்­காமம் வடக்கு ஜே . 237 பளை வீமன்­காமம் தெற்கு 238 கட்­டுவன் ஜே.240 தென்­ம­யிலை ஜே.241 வறுத்­த­லை­விளான் ஜே. 250 தையிட்டி தெற்கு ஜே 252 பலாலி தெற்கு  ஆகிய கிராம அலு­வ­லர்கள் பிரி­வுகள் பகு­தி­யா­கவும் முழ­மை­யா­கவும் விடப்படுகின்­றன.

வறுத்­த­லை­விளான் பிரி­வுக்கு செல்லும் மக்கள் தமது காணி­களை பார்­வை­யிட தெல்­லிப்­பளை வைத்­தி­ய­சாலை வீதி வழி­யா­கவும் மற்றும் பலாலி தெற்கு கிராம அலு­வலர் பிரி­வுக்க செல்லும் மக்கள் தமது காணிகளை பார்வையிட அச்சுவேலி தம்பாட்டி வழியாகவும் ஏனைய கிரா அலுவலர் பிரிவுகளுக்கு செல்லும் பொது மக்கள் பளை வீமன்காமம் புகையிரத வீதிவழியாகவும் சென்ற தமது காணிகளை பார்வையிட முடியும் எனவும் பிரதேச செயலகத்தினால் தொவிக்கப்பட்டுள்ளது..

இந்தப் பகுதியில் மீள்க்குடியேறும் மக்கள் தங்களுடைய காணிகளை பார்வையிட்டு உறுதிப்படுத்திய பின்னர் தமது கிராம அலுவலர்களிடம் பதிவுகளை மேற்க்கொள்ள முடியும்.

இதனடிப்படையில் சனிக்கிழமை (11) காணிகளை பார்வையிட மக்கள் வந்திருந்தனர்.

ஆனால் அங்கு குறித்த கிராம அலுவலர் பிரிவுகளில் பகுதி பகுதியாகவே காணிகளை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டது.

தற்போது விடுவிக்கபட்ட பகுதிகள் செறிவு குறைந்த குடியிருப்புக்கள் உள்ள பகுதிகள் ஆகும்.

இதனால் வருகை தந்திருந்த மக்களில் பலர் தமது காணிகளை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள முட்கம்பி வேலிகளுக்கப்பால் தொலைவில் நின்று பார்த்துவிட்டு அங்கலாய்ப்புடனும் விரக்தியுடனும் சென்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version