மெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் ஜோன் கெரி இலங்­கைக்கு வந்­தி­ருந்த போது, கடந்த 2ஆம் திகதி, தாஜ் சமுத்­திரா விடு­தியில், அவரைச் சந்­தித்த இலங்கை அர­சாங்க குழுவில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் இடம்­பெற்­றி­ருந்தார்.

அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் ஜோன் கெரி­யிடம், வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, விடுதலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போருக்குத் தலைமை தாங்­கி­யவர் இவர் தான் என்று, பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவை அறி­மு­கப்­ப­டுத்தி வைத்தார்.

அப்­போது, சரத் பொன்­சே­கா­விடம், “நீங்கள் இப்­போது போரில் வெற்றி பெற்று விட்­டீர்கள். இது நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்­டிய நேரம்” என்று ஜோன் கெரி, குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஜோன் கெரி அவ்­வாறு கூறி­யதன் வெளிப்­ப­டை­யான அர்த்தம், சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு ஏற்ப போருக்குப் பிந்­திய நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் தொடர வேண்டும் என்­ப­தா­கவே இருக்க வேண்டும் என்று குறிப்­பிட்­டி­ருந்தார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா.

உள்­நாட்டுப் போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு அர­சாங்கம் தயா­ராகி வரு­வ­தாக கூறி வரு­கின்ற நிலையில் தான், சரத் பொன்­சே­கா­விடம், அமெ­ரிக்­காவின் இந்த எதிர்­பார்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார் ஜோன் கெரி.

ஆனால், அண்­மையில் பீல்ட் மார்­ஷ­லாகப் பதவி உயர்த்­தப்­பட்ட முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சேகா போர்க்­குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பான சாத­க­மான கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருப்­பினும், சில முன்­னுக்குப் பின் முர­ணான கருத்­துக்­க­ளையும் வெளி­யிட்டு வரு­கிறார்.

உள்­நாட்டுப் போர்க்­குற்ற விசா­ர­ணையை தாம் வர­வேற்­ப­தா­கவும், இதன் மூலம் தம் மீதான குற்றச்சாட்­டு­களில் இருந்து விடு­பட முடியும் என்று நம்­பு­வ­தா­கவும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அதா­வது, இப்­போது சரத் பொன்­சேகா, போர்க்­குற்­றச்­சாட்டில் இருந்து தன்னை விடு­வித்துக் கொள்வதிலேயே குறி­யாக இருக்­கிறார் என்­பது வெளிப்­ப­டை­யா­கி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை, இறு­திக்­கட்டப் போரில் திட்ட­மிட்ட போர்க்­குற்­றங்கள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை என்றும், ஆனால், சில குற்­றங்கள் நிகழ்ந்­தி­ருப்­ப­தாக குற்­றச்­சாட்­டுகள் இருப்­ப­தா­கவும் அவர் தி கார்­டி­ய­னுக்கு அளித்த பேட்­டியில் கூறி­யி­ருக்­கிறார்.

ஆனாலும், ஒட்­டு­மொத்த இரா­ணு­வத்தின் மீதும் போர்க்­குற்­றச்­சாட்டு சுமத்­தப்­ப­டு­வதை அவர் ஏற்கத் தயா­ராக இல்லை.

இதனை அவர் எல்லா சந்­தர்ப்­பங்­க­ளி­லுமே சுட்­டிக்­காட்டி வந்­தி­ருக்­கிறார்.

அது­மட்­டு­மன்றி, அண்­மையில் தி கார்­டி­ய­னுக்கு அளித்­தி­ருந்த பேட்­டியில், தாம் இரா­ணுவத் தளபதியாகப் பதவி வகித்த காலத்தில் பாலியல் வல்­லு­ற­வு­களோ, சித்­தி­ர­வ­தை­களோ இடம்­பெற்றிருக்க­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இதன் மூல­மாக, அவர் தான் இரா­ணு­வத்­துக்கு சிறந்த தலை­மைத்­து­வத்தை வழங்­கி­யி­ருப்­ப­தா­கவும், தனது தலை­மைத்­து­வத்தில், எந்த மனித உரிமை மீறல்­களும் நிக­ழ­வில்லை என்­ப­தையும் எடுத்துக் கூற முற்­பட்­டி­ருக்­கிறார்.

அதே­வேளை, சில குற்­றங்கள் இடம்­பெற்­ற­தான குற்­றச்­சாட்­டுகள் உள்­ளன என்­பதை ஏற்றுக்கொள்ளும் அவர், திட்­ட­மிட்ட போர்க்­குற்­றங்கள் இடம்­பெ­ற­வில்லை என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

போர் முடி­வுக்கு வந்த ஆறா­வது ஆண்டு நிறை­வை­யொட்டி, தொலைக்­காட்சி ஒன்­றுக்கு அளித்­தி­ருந்த பேட்­டியில் சரத் பொன்­சேகா வெள்ளைக் கொடி சம்­பவம் தொடர்­பாக கருத்துத் தெரி­விக்க மறுத்திருந்தார்.

Fullscreen capture 2252013 35642 PM.bmpபோர் முடி­வுக்கு வந்த 2009 மே 18ஆம் திகதி காலையில், வெள்ளைக் கொடி­யுடன் சர­ண­டையச் சென்ற விடு­தலைப் புலி­களின் அர­சி­யல்­து­றையை சேர்ந்த பா.நடேசன், புலித்­தேவன் உள்­ளிட்டோர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டி­ருந்­தனர்.

இவர்கள் சர­ண­டைந்த பின்னர், படை­யி­னரால் சுட்டுக் கொல்­லப்­பட்­ட­தாக மனித உரிமை அமைப்புகளால் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

இந்தச் சம்­பவம் தொடர்­பாக சரத் பொன்­சேகா முன்னர், சண்டே லீட­ருக்கு வெளி­யிட்ட கருத்து, பெரும் சர்ச்­சை­யா­கி­யது மட்­டு­மன்றி, அவரைச் சிறைச்­சாலை வரை துரத்­தியும் சென்­றதை மறக்க முடி­யாது.

இப்­போது சரத் பொன்­சேகா, வெள்­ளைக்­கொடிச் சம்­பவம் குறித்து கருத்து வெளி­யிடத் தயா­ராக இல்லை.

அதற்கு அவர், அண்­மைய தொலைக்­காட்சிப் பேட்­டியில், வச­தி­யான ஒரு கார­ணத்தை முன்­வைத்­தி­ருந்தார்.

தாம் இரா­ணு­வத்தின் இயந்­திரக் காலாற்­படைப் பிரி­வுக்கு கவ­ச­வா­க­னங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக சீனா­வுக்குச் சென்­றி­ருந்த போதே, அந்தச் சம்­பவம் நடந்­தது போன்று சூச­க­மாகப் பதி­ல­ளித்­தி­ருக்­கிறார்.

போரின் இறு­திக்­கட்­டத்தில் 2009 மே 11ஆம் திகதி சீனா சென்­றி­ருந்த அவர், மே 17ஆம் திகதி இரவு 9 மணிக்கே நாடு திரும்­பி­யி­ருந்தார். ஆனால், வெள்­ளைக்­கொடிச் சம்­பவம் நிகழ்ந்­தது – 2009 மே 18ஆம் திகதி காலையில் தான்.

சரத் பொன்­சே­காவின் இந்தப் பேட்டி வெளி­யான பின்னர், பி.பி.சி.யின் முன்னாள் ஊட­க­வி­ய­லாளர் பிரான்செஸ் ஹாரிசன் இதனை தனது டுவிட்டர் பதிவில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

வெள்ளைக்கொடிச் சம்­ப­வத்­துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று சரத் பொன்­சேகா நழுவ முனைந்­தாலும், இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த அவர் அதற்குப் பதி­ல­ளித்­தே­யாக வேண்­டி­யி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஏனென்றால், சரத் பொன்­சேகா தான் சீனாவில் இருந்த போதும், நாளொன்­றுக்கு மூன்று முறை கட்­டளைப் பீடத்­துடன் தொடர்பு கொண்டு கள­நி­ல­வ­ரங்­களை வழி­ந­டத்­தி­ய­தாக குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அதா­வது போர் முழு­வ­து­மாக தனது நெறிப்­ப­டுத்­தலில் தான் நடந்­தது என்று அவர் ஒட்டுமொத்த வெற்­றிக்கும் உரிமை கோரி­யி­ருக்­கிறார்.

அதே­வேளை, அந்தக் காலப்­ப­கு­தியில் நடந்த வெள்­ளைக்­கொடிச் சம்­ப­வத்­துக்கு மட்டும் பதி­ல­ளிக்­காமல் அவர் நழுவ முயல்­வதை நியா­ய­மான விசா­ரணை என்று எந்த வகை­யிலும் ஏற்றுக் கொள்­ளாது.

யஸ்மின் சூகா

அது­போ­லவே, போரின் இறு­திக்­கட்­டத்தில், சர­ண­டைந்த பின்னர் காணா­மற்­போன 110 விடு­தலைப் புலி­களின் தள­ப­திகள், பிர­மு­கர்கள் பற்­றிய விப­ரங்­களை அண்­மையில், யஸ்மின் சூகா வெளியிட்டுள்ளார்.

(இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் படையினரிடம் சரணடைந்து காணாமல் போன 110 புலித் தளபதிகளின் விபரங்கள் இதோ…)

இலங்­கையில் நடந்த போர்க்­குற்­றங்கள் தொடர்­பாக தனக்கு ஆலோ­சனை வழங்க ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் நிய­மித்த நிபுணர் குழுவில் இருந்­த­வர்­களில் ஒருவர் தான் யஸ்மின் சூகா.

அவர் வெளி­யிட்ட பட்­டி­யலில், கொல்­லப்­பட்டு சட­லங்­க­ளாக படங்­களில் அல்­லது வீடி­யோக்­களில் காணப்­பட்ட நடேசன், புலித்­தேவன், பாலச்­சந்­திரன், கேர்ணல் ரமேஸ், இசைப்­பி­ரியா, திலக் உள்­ளிட்­டோரின் பெயர்­களும் அடங்­கி­யுள்­ளன.

யஸ்மின் சூகா வெளி­யிட்ட பட்­டி­யலில் இடம்­பெற்­றி­ருந்­த­வர்கள் சர­ண­டைந்­த­தற்கு நேர­டி­யான சாட்சிகள் பலர் உள்­ள­தாக கூறப்­பட்­டுள்­ளது.

இந்தப் பட்­டி­யலில் குடும்­பத்­தி­னரால் படை­யி­ன­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­ட­வர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

இந்­த­நி­லையில், திட்­ட­மிட்ட போர்க்­குற்­றங்கள் நிக­ழ­வில்லை என்று சரத் பொன்­சே­கா­வினால் ஒரு­போதும் வாதிட முடி­யாது.

சர­ண­டைந்த பின்னர், காணா­மற்­போன அல்­லது கொல்­லப்­பட்ட சம்­ப­வங்­களை எதேச்­சை­யா­ன­வை­யாக எவ்­வாறு எடுத்துக் கொள்ள முடியும் என்­ப­தற்கு சரத் பொன்­சே­காவே பதில் கூற வேண்­டி­யி­ருக்கும்.

போர் ஒன்றில் சர­ண­டைந்­த­வர்­களைப் படு­கொலை செய்தல் ஒரு மோச­மான போர்க்­குற்றம் என்று ஏற்­க­னவே ஒரு பேட்­டியில் குறிப்­பிட்­டி­ருந்தார் சரத் பொன்­சேகா.

ஆனால், இப்­போது அவர், போரின் போது திட்­ட­மிட்ட போர்க்­குற்­றங்கள் நிக­ழ­வில்லை என்று கூறு­கிறார்.

இதனால், சர­ண­டைந்­த­வர்கள் கொல்­லப்­பட்­டதை, அல்­லது காணா­மற்­போகச் செய்­யப்­பட்­டதை அவர் திட்­ட­மி­டப்­ப­டாத குற்­றங்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்த முனை­கி­றாரா என்ற கேள்வி எழு­கி­றது.

சில சந்­தர்ப்­பங்­களில், தனக்குத் தெரி­யாமல் போர்க்­க­ளத்தில் எதுவும் நடக்­க­வில்லை என்று பேட்­டி­களில் குறிப்­பிட்ட சரத் பொன்­சேகா, வேறு சில சந்­தர்ப்­பங்­களில், தனக்குத் தெரி­யாமல் சில சம்­ப­வங்கள் நிகழ்ந்­தி­ருக்­கலாம் என்றும் கூறவும் தயங்­க­வில்லை.

சரத் பொன்­சேகா உள்­நாட்டு போர்க்­குற்ற விசா­ர­ணையை வர­வேற்­றி­ருந்­தாலும், அவர் எதிர்­பார்ப்­பது போன்று நியா­ய­மான ஒரு விசா­ரணை அவ­ருக்குச் சாத­க­மாக அமையும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

அதை­விட, போரில் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர் என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்திருந்தார்.

படையினர் இறுதி நான்கரை மாதங்களும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என்றும், அதனால் படையினர் அதிகளவில் பலியாக நேரிட்டதாகவும், அவர் கூறியிருக் கிறார்.

இவையெல்லாம், போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்குத் தயார் என்று அவர் கூறினாலும், அந்தக் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கவோ, அல்லது பொய்யாக காண் பிக்கவோ அவர் தயாராக இருக்கிறார் என் பதை வெளிப்படுத்துகின்றன.

அதேவேளை, போர்க்குற்ற விசாரணைகள் நீதியாக-, நியாயமாக-, நம்பகமாக நடக்க வேண்டும் என்பதில், சர்வதேச சமூகம், உறு தியாகவே இருக்கும் என்றே தெரிகிறது.

இத்தகைய நிலையில், இராணுவத் தளப தியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பொறுப்புக்கூறியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.

பீல்ட் ல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா! மானத் தமிழர்கள்? -வீ. சுந்தரராஜன்

 

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளை இராணுவம் தேநீர் வழங்கிவிட்டு சுட்டுக் கொன்றது: சந்திரநேரு சாட்சி (வீடியோ )

Share.
Leave A Reply

Exit mobile version