சூடா­னிய ஜனா­தி­பதியை நாட்டை விட்டு வெளி­யேற அனு­ம­தித்­தது குறித்து நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்ள தென் ஆபிரிக்கா

எப்போது கடித்­துக்­ கு­த­றலாம் என தருணம் பார்த்து காத்துக் கொண்­டி­ருக்கும் சிங்­கத்தின் குகைக்குள் பிரவேசித்து உடலில் சிறு சிராய்ப்புக் காய­மு­மின்றி அலுங்­காமல் குலுங்­காமல் ஒருவர் திரும்பி வந்தால் எப்படி­யி­ருக்கும்?

அவ்­வா­றுதான் தென் ஆபி­ரிக்­கா­வி­லி­ருந்து தாய்­நாடு திரும்­பி­யி­ருக்­கிறார் சூடா­னிய ஜனா­தி­பதி ஓமர் அல்–பஷீர்.

தன் மீது வகை தொகை­யின்றி சுமத்­தப்­பட்­டுள்ள போர் குற்­றச்­சாட்­டு­களின் கீழ் தன்னை சிக்க வைக்க கழுகுப் பார்­வை­யுடன் சர்­வ­தேச நீதி­மன்றம் குறி வைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது என்­பது தெரிந்தும் அந்த நீதி­மன்­றத்­துடன் உடன்­ப­டிக்கை செய்து கொண்ட அதன் செல்­வாக்­கிற்கு உட்­பட்ட நாடொன்­றுக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு உண்மையிலேயே கடும் நெஞ்­ச­ழுத்தம் இருக்க வேண்டும்.

al-Bashir_CIகடின சிந்­தை­யுள்ள இரா­ணுவ வீர­ராக வாழ்க்­கையை ஆரம்­பித்து இரா­ணுவ அதி­கா­ரி­யாக இரா­ணுவ சதிப்புரட்சியின் மூலம் ஆட்­சியைக் கைப்­பற்றி வலிய கரம் கொண்டு ஆட்சி நடத்­திய ஓமர் அல் பஷீ­ருக்கு அந்த நெஞ்­ச­ழுத்தம் கொஞ்சம் அதி­கப்­ப­டி­யா­கவே இருந்­ததில் வியப்­பில்லை.

தென் ஆபி­ரிக்­காவில் இடம்­பெற்ற ஆபி­ரிக்க ஒன்­றிய உச்­சி­மா­நாட்டில் கலந்து கொள்ள அவர் ஜொஹன்னஸ் பேர்க் நக­ருக்கு புறப்­ப­டு­கிறார் என்­ற­வு­ட­னேயே அவர் அங்கு எந்நேரமும் கைது செய்­யப்­பட்டு சர்­வ­தேச நீதி­மன்றத்தில் நிறுத்­தப்­ப­டலாம் என்று பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆபி­ரிக்க ஒன்­றிய உச்சிமாநாடு ஆரம்­ப­மா­வ­தற்கு முன்பே சூடா­னிய ஜனா­தி­பதி பஷீரை கைது செய்­வ­தற்கான பிடி­யாணை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்த வேண்­டு­மென சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் தென் ஆபி­ரிக்­காவை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது.

அத்­துடன் பஷீரை கைது செய்­வ­தற்கு சர்­வ­தேச நீதி­மன்­றத்தால் பிறப்­பிக்­கப்­பட்ட பிடி­யா­ணையை மேற்­படி நீதிமன்ற அந்­தஸ்து தொடர்­பான உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டுள்ள நாடுகள் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனும் அழைப்பு விடுத்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் அங்­கத்­துவம் வகிக்கும் நாடு என்ற வகையில் அந்த நீதி­மன்­றத்தால் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்ட எவ­ரையும் கைது செய்ய வேண்­டிய கடப்­பாடு தென் ஆபி­ரிக்­கா­வுக்கு உள்­ளது.

இத்­த­கைய சூழ்­நி­லையில் ஆபி­ரிக்க ஒன்­றிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக பஷீர் தென் ஆபி­ரிக்கா செல்­வ­தற்கு எடுத்த தீர்­மானம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது என்றால் மிகை­யா­காது.

உச்சிமாநாட்டில் பஷீர் கௌர­வ­மிக்க ஒரு தலை­வ­ராக நடத்­தப்­ப­டுவார் எனவும் அவ­ருக்கு எதி­ராக எதுவும் இடம்­பெ­றாது எனவும் தென் ஆபி­ரிக்க ஜனா­தி­பதி ஜாகொப் ­ஸுமா உறு­தி­ய­ளித்­தி­ருந்­த­மையும் பஷீர் தென் ஆபிரிக்க பய­ணத்தை தைரி­ய­மாக மேற்­கொண்­ட­மைக்கு கார­ண­மாக அமைந்­தது எனலாம்.

எனினும் மேற்­படி தென் ஆபி­ரிக்க ஜனா­தி­ப­தியின் இந்த உறு­தி­ய­ளிப்பு சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் பிடிக்குள் சிக்­காமல் இருக்கும் அவரை பொறிக்குள் சிக்க வைக்கும் முயற்­சி­யாக இருக்­கலாம் என சந்­தே­கங்­களும் நில­வின.

ஆனால் கடந்த காலங்­களில் பஷீர் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தில்லை என்றே பல ஆபி­ரிக்க நாடுகள் தீர்­மா­னித்­தி­ருந்­தன.

இந்­நி­லையில் பஷீர் ஆபி­ரிக்க ஒன்­றி­யத்தின் ஆசீர்­வா­தத்­து­ட­னேயே தென் ஆபி­ரிக்­காவை விட்டு வெளி­யேறியுள்­ள­தாக தோன்­று­வ­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்­றது.

சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் பஷீரை கைது செய்­வ­தற்­காக தன்னால் பிறப்­பிக்­கப்­பட்ட பிடி­யா­ணையை நடை முறைப்­ப­டுத்த தென் ஆபி­ரிக்­காவை  ஏற்­க­னவே வலி­யு­றுத்­தி­யி­ருந்த நிலையில் தென் ஆபி­ரிக்கா அதனை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த தவ­றி­யமை சர்­வ­தேச ரீதியில் கடும் கண்­ட­னத்தை அந்­நாட்­டிற்கு சம்­பா­தித்து தந்­துள்­ளது.

பஷீரை சர்­வ­தேச நீதி­மன்ற உத்­த­ரவின் பிர­காரம் கைது செய்­வதா அல்­லது இல்­லையா என்­பதை தீர்­மா­னிக்க முடி­யாது திண­றிய தென் ஆபி­ரிக்கா அது தொடர்­பான தீர்­மானம் எடுக்கும் வரை பஷீர் நாட்டை விட்டு வெளியே­றக்­கூ­டாது என அவ­ருக்கு தடை உத்­த­ரவு பிறப்­பித்­தது.

ஆனால் பஷீர் தென் ஆபி­ரிக்­கா­வி­லி­ருந்து தாய்­நாடு செல்­வ­தற்­காக விமா­னத்தில் புறப்­பட்டு பல மணி நேரம் கழித்தே அவ­ருக்கு நாட்­டி­லி­ருந்து வெளி­யே­றத் ­தடை விதிக்கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டமை சர்­வ­தேச ரீதியில் சர்ச்­சையை தோற்­று­வித்­துள்­ளது.

தனக்கு தென் ஆபி­ரிக்­காவை விட்டு வெளி­யேற தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டலாம் என ஊகித்து அவர் தானாகவே உரிய நேரத்தில் அந்­நாட்டை விட்டு புறப்­பட்­டாரா அல்­லது அவர் நாட்டை விட்டு தப்­பிச்­செல்லும் வரை காத்­தி­ருந்து தென் ஆபி­ரிக்கா மேற்­படி தடை உத்­த­ரவை பிறப்­பித்­ததா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

பஷீர் தென் ஆபி­ரிக்­காவை விட்டு வெளி­யே­றி­யமை பிர­தான அர­சி­ய­ல­மைப்பு மற்றும் ரா­ஜ­தந்­திர நெருக்­க­டி­யொன்றை தோற்­று­வித்­துள்­ள­துடன் சர்­வ­தேச நீதி­மன்­றத்­தி­லான தென்­னா­பி­ரிக்க அங்­கத்­து­வத்தை கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தென் ஆபி­ரிக்கா பெருந்­தொ­கை­யான ஆபி­ரிக்­கர்­களின் படு­கொ­லை­க­ளுடன் தொடர்­பு­டைய தேடப்­படும் ஒருவரை தப்­பிச்­செல்­வ­தற்கு அனு­ம­தித்­ததன் மூலம் சர்­வ­தேச நீதி­மன்­றத்­தையும் உள்­நாட்டு நீதிமன்றத்தையும் வெட்கக்கேடான வகையில் உதா­சீ­னப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக மனித உரி­மைகள் கண்காணிப்பகத்தின் பணிப்­பாளர் கென்னத் ரொத் தெரி­வித்தார்.

பஷீரை கைது செய்­யத்­­ த­வ­றி­யமை நாட்டின் அர­சி­ய­ல­மைப்பை மீறும் செயல் என தென் ஆபி­ரிக்க நீதி­பதி டஸ்டன் மலம்போ குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

எனினும் நீதி­மன்ற ஆணையை அலட்­சி­யப்­ப­டுத்தும் வகையில் பஷீரை தப்­பிச்­செல்ல அனு­ம­தித்­த­தற்­காக தென் ஆபி­ரிக்கா மீது உட­ன­டி­யாக சர்­வ­தேச தடைகள் விதிக்­கப்­படும் அபாயம் இல்லை என கருதும் அர­சியல் அவதானிகள், இந்த விவ­கா­ரத்தால் அந்­நாட்டின் ஜனா­தி­பதி ஜாகொப் ஸுமா கடும் நெருக்­க­டி­களை எதிர்­கொள்ள நேரி­டலாம் என தெரி­விக்கின்­றனர்.

பஷீரை கைது செய்­யத்­த­வ­றி­யமை ஏமாற்றம் தரு­வ­தாக உள்­ள­தாக சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் கூறுகிறது.

இந்­நி­லையில் சூடா­னிய வெளி­நாட்டு அமைச்சர் இப்­ராஹீம் கன்டோர், பஷீ­ருக்கு தென் ஆபி­ரிக்­காவை விட்டு வெளி­யேற அந்­நாட்டு நீதி­மன்­றத்தால் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டமை நாட்டின் இறை­மையை மீறும் செயல் என குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

உல­க­மெங்கும் இடம்­பெற்று வரும் மனித உரிமை மீறல்­களை அலட்­சியம் செய்யும் அதே­ச­மயம் ஆபி­ரிக்க மக்களை தண்­டிக்க மேற்­கு­லக நாடு­களால் விசே­ட­மாக உரு­வாக்­கப்­பட்ட கரு­வியே சர்­வ­தேச குற்­ற­வியல் நீதிமன்றம் என சூடானிய தகவல் அமைச்சர் அஹ்மெட் பிலால் தெரி­வித்தார்.

2003 ஆம் ஆண்டு சூடானில் மோதல்கள் ஆரம்­ப­மா­னது முதற்­கொண்டு அந்­நாட்டில் சுமார் 300, 000 பேர் பலியான­துடன் 1.4 மில்­லியன் பேர் வீடு வாசல்­களை விட்டு இடம்­பெ­யர்ந்­துள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபை கூறுகி­றது.

சூடானில் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான போரின் போது அந்­நாட்டு அர­சாங்­கப்­ப­டை­யி­னரும் அதன் நேச அரபுப் படை­யி­னரும் கறுப்பு ஆபி­ரிக்க இனத்­த­வர்­களை வகை தொகை­யின்றி படு­கொலை செய்­த­தாக குற்றஞ்சாட்டப்ப­டு­கி­றது.

திங்­கட்­கி­ழமை மாலை சூடா­னிய கார்டொம் விமான நிலை­யத்தில் வந்­தி­றங்­கிய பஷீரை அங்கு கூடி­யி­ருந்த அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் வர­வேற்­றனர்.

டாபூரில் இடம்­பெற்ற மோதல்­களின் போது வகை தொகை­யின்றி படு­கொ­லை­களும் பாலியல் வல்­லு­ற­வு­களும் மனித உரிமை மீறல்­களும் மேற்­கொள்­ளப்­பட தூண்­டி­ய­தாக பஷீர் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.

எனினும் சூடா­னிய மக்­களில் பெரும்­பான்­மை­யானோர் பஷீரை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் விசாரணைக்கு உட்­ப­டுத்­து­வதை தமது நாட்டின் இறை­மையை மீறும் செய­லொன்­றா­கவே கரு­து­கின்­றனர்.

1960 ஆம் ஆண்டு சூடா­னிய இரா­ணு­வத்தில் இணைந்து படிப்­ப­டி­யாக பதவி நிலை­களில் உயர்ந்த பஷீர், 1989 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி மோச­மான இரா­ணுவப் புரட்­சியின் மூலம் ஜன­நா­யக ரீதியில் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தமர் சாதிக் அல்-­–மெஹ்­டியை ஆட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற்றி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றினார்.

மூன்று தட­வைகள் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த அவர், 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தால் அதி­கா­ரத்­தி­லி­ருந்த போது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்ட முதல் ஜனா­தி­பதி என்ற பெயரைப் பெற்றார்.

2005 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் சூடானில் இரண்­டா­வது உள்­நாட்­டுப்­போரை முடி­வுக்கு கொண்டு வரும் வகையில் பஷீரின் அர­சாங்கம் பேச்­சு­வார்த்­தை­களில் களம் இறங்­கி­யதன் விளை­வாக சூடானிலிருந்து தென் சூடான் தனி நாடாக பிரிந்­தது.

ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து தனது அதி­கா­ரத்தை பெரு­ம­ளவில் அதி­க­ரித்துக் கொண்ட பஷீர், அந்நாட்டின் அதி­கா­ரத்­துவம் பொருந்­திய தேசிய மீட்­புக்­கான புரட்­சி­கர கட்­டளை சபை­யையும் எதிர் அர­சியல் கட்­சி­க­ளையும் கலைத்து முழு­மை­யான நிறை­வேற்­ற­தி­காரம் பொருந்­திய ஜனா­தி­ப­தி­யாக மாறினார்.

படு­கொ­லைகள், மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ரான குற்றச்செயல்கள் மற்றும் போர் குற்­றங்கள் என்­பன போன்ற சர்வ­தேச குற்­றங்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் முக­மாக 2002 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்ட சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் சந்­தித்த தோல்­வி­களில் ஒன்­றாக பஷீரை கைது செய்­யத்­த­வ­றிய விவ­காரம் உள்­ளது.

அந்த நீதி­மன்றம் குற்­றச்­சாட்­டுக்­குள்­ளா­ன­வர்­களை நேர­டி­யாக கைது செய்ய முடி­யாது தனது 123 அங்­கத்­துவ நாடு­களின் நீதி­மன்­றங்­கள் மூலம் தனது செயற்­கி­ர­மங்­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளமை அதற்கு பல சந்­தர்ப்­பங்­களில் எதிர்­ம­றை­யான பெறு­பே­று­க­ளையே தந்­துள்­ளது.

இந்­நி­லையில் தென் ஆபி­ரிக்க சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தால் பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ர­வுக்கு மாறாக பஷீர் தப்பிச் செல்ல அனு­ம­தித்­துள்­ளமை அந்த நீதிமன்றத்தின் அங்கத்துவ நாடுகளிடையே நிலவும் ஒத்துழைப்பின்மையையே சுட்டிக்காட்டுவதாக உள்ளதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சூடானிய விவகாரத்தில் ஏற்பட்ட பின்னடைவை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுமா? இல்லையா? என்பதை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version