பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களம் இப்­போது படிப்­ப­டி­யாக சூடு­பி­டிக்க ஆரம்­பித்­துள்­ளது. அர­சியல் கட்­சிகள் கொள்­கை ­பி­ர­க­ட­னங்­களை வெளி­யிட்டு வாக்­கு­று­தி­களை அள்ளி வீசு­கின்­றன.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கொள்கைப் பிர­க­ட­னம் ஆறு மாதங்­க­ளுக் குள் 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­திற்குள் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­ கா­ணப்­படும் எனத்­தெ­ரி­வித்­துள்­ளது. அதே­வேளை, அக்­கட்­சியின் பிரச்­சார மேடை­களில் பயங்­கரவாதம் மீண்டும் தலை தூக்­கு­கின்­றது,

புலம்­பெயர் அமைப்­புக்­களின் மாநாடு செப்ெ­டம்­பரில் இலங்­கையில் நடக்­கப்­போ­கி­றது; இதனால் பிரி­வி­னை­வா­தத்தை நோக்கி ஐ.தே.கட்சி நாட்டை நகர்த்திச் செல்­கின்­றது என்­றெல்லாம் முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவும் விஷமப் பிர­சா­ரங்­களை நடத்தி வாக்­கா­ளர்­க­ளுக்கு புலிப்­பூச்­சாண்டி காட்ட ஆரம்­பித்­து­விட்டார்.

மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வ­டைந்து ஒரு சில நாட்­க­ளுக்­குள்­ளேயே மஹிந்த ராஜ­பக்­ ஷ இந்த பிர­சா­ரத்தை ஆரம்­பித்து விட்டார். 100 நாட்கள் வேலைத்­திட்டம் பூர்த்தி செய்­யப்­பட்­ட­வுடன் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத்­தேர்தல் நடத்­தப்­படும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்தார். இந்த அறி­விப்­புடன் மஹிந்த தரப்­பினர் பிர­சா­ரத்தை ஆரம்­பித்­து­விட்­டனர்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­யுற்ற பின்னர் ஜன­வரி 9 ஆம் திகதி அல­ரி­மா­ளி­கை­யி­லி­ருந்து மெத­மு­ல­ன­யி­லுள்ள தனது இல்­லத்­துக்குச் சென்றார். அங்கு மக்கள் கூடி நின்­றனர். யன்­னலில் ஏறி நின்று மக்­க­ளுக்கு உரை­யாற்­றினார்.

அப்­போது அவர் உங்கள் வாக்­கு­களால் தோல்­வி­ய­டை­ய­வில்லை. ஈழ வாக்­கு­க­ளா­லேயே நான் தோல்­வி­யுற்றேன் என்று தெரி­வித்தார். அவர் உள்­ளத்­தி­லி­ருந்த ஆத்­திரம் அப்­போது வார்த்­தை­களால்வெளிப்­பட்­டுள்­ளது.

அதைத் தொடர்ந்து ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெற்­றதும் வடக்கில் புலிக்­கொ­டிகள் பறக்­க­வி­டப்­பட்­டுள்­ள­தாக இத் தரப்­பினர் புர­ளியை கிளப்­பி­விட்­டனர். இரா­ணுவப் பேச்­சாளர் வடக்கில் புலிக்­கொ­டிகள் பறக்­க­வில்லை அந்த புர­ளி­ வெறும் வதந்தி எனத் தெரி­வித்தார்

இது மட்­டு­மின்றி வெளி­வி­வ­கார அமைச் சர் மங்­கள சம­ர­வீர புதிய அர­சாங்கம் பத­வி­யேற்ற சில வாரங்­களில் இங்­கி­லாந்­துக்குச் சென்று புலம்பெயர் அமைப்­புக்­களைச் சந்­தித்தார். இந்த அமைப்­புக்­களில் சிங்­கள புலம்பெயர் அமைப்­புக்­களும் இருந்­துள்­ளன.

இந்த அமைப்­புக்­க­ளுடன் இலங்­கையின் அபி­வி­ருத்­திக்கு இந்நாட்டில் முத­லீடு செய்­வது குறித்து பேச்­சு­வார்தை நடத்­தி­யது மட்­டு­மின்றி எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் இலங்­கையில் புலம்­பெயர் அமைப்­பு­களின் மாநா­டொன்றை நடத்தப் போவ­தா­கவும் அறி­வித்தார்.

புலம் பெயர் அமைப்­புக்­களின் மாநாடு இலங்­கையில் நடத்­தப்­போ­வ­தாக அறி­வித்­தது வெறும் வாயை மெல்­லு­ப­வர்­க­ளுக்கு அவல் கிடைத்­தது போலா­கி­விட்­டது.

showImageInStoryமுன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சரும் பேரா­சி­ரியருமான ஜீ.எல்.பீரிஸ் இலங்­கையில் புலம்­பெயர் அமைப்­பு­களின் மாநாடு நடத்­து­வது நாட்டின் பாது­காப்­புக்கு பெரும் அச்­சு­றுத்தல் என்று எது­வித கார­ணத்­தையும் தெரி­விக்­காது மக்­களை குழப்­பத்­தொ­டங்­கி­விட்டார்.

இவ­ருடன் முன்னாள் அமைச்­சர்­க­ளான பந்­து­ல­கு­ண­வர்­தனவும், விமல் வீர­வன்­சவும் இணைந்து கொண்­டனர்.

பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு தேர் தல் அறி­விக்­கப்­பட்ட பின்னர் புலிப்­பூச்­சாண்டி காட்டும் பிர­சா­ரங்­களும் இப்­போது மீண்டும் மேடை­களில் ஒலிக்க ஆரம்­பித்­துள்­ளன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர் தல் விஞ்­ஞா­பனம் கடந்த வாரம் வெளி­யி­டப்­பட்­டது. இப்­போது மஹிந்த தரப்­பினர் இந்த தேர்தல் விஞ்­ஞா­பனம் குறித்து கடு­மை­யாக விமர்­சிக்க ஆரம்­பித்­துள்ளனர். சமஷ்டி முறை­மை­யி­லான தீர்வு வேண்டும் எனக் குறிப்­பிட்­டி­ருப்­பது நாட்டை துண்­டாக்கும் நட­வ­டிக்­கை­யாகும் என்று மஹிந்த தரப்பு தெரி­விக்­கின்­றது.

இன­வா­தத்தைக் கக்கி நாட்டை துண்­டாட இந்த அரசு துணை­போ­வ­தாக சிங்­கள மக்­களை அச்­சு­றுத்­தி­ வாக்கு வேட்டை நடத்­து­வ­தி­லேயே மஹிந்த தரப்­பினர் குறி­யாக இருக்­கின்­றனர்.

ஐ.ம.சு முன்­ன­ணியின் பிர­சாரம் குரு­ணா­க­லையில் ஐ.ம.சு முன்­ன­ணியின் தலைமை வேட்­பா­ள­ராக போட்­டி­யிடும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷ வும் குரு­ணா­க­லையில் மட்­டு­மன்றி நாடு முழு­வதும் பயணம் செய்து ஐ.ம.சு முன்­ன­ணியின் வேட்­பா­ளர்­களின் வெற்­றிக்­கா­கவும் பிர­சாரம் செய்து வரு­கின்றார்.

ஐக்­கிய தேசிய முன்­னணி ஜே.வி.பியு­டனும், தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பு­டனும் இணைந்து எவ்­வாறு ஆட்­சி­ய­மைக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்­பி­வ­ரு­கின் றார்.

ஜே.வி.பி. எந்தக் கட­்சி­யு­டனும் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு துணை போவ­தில்லை என்று அறு­தி­யிட்டுக் கூறி­யுள்­ளது.

அதேபோல் தமி­ழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பும் எக்கட்­சி­யு­டனும் கூட்டுச் சேரப்­போ­வ­தில்லை என் றும் எந்­த­வ­கை­யிலும் அமைச்சுப் பத­வி­களை ஏற்­கப்­போ­வ­தில்லை என்றும் அறு­தி­யிட்­டுக்­கூ­றி­யுள்­ளது.

இவை ஏற்­க­னவே பத்­தி­ரி­கை­களில் வெளி­வந்­துள்­ளன. இந்த நிலையில் மஹிந்த ராஜ­பக் ஷவும் குறு­கிய அர­சியல் லாபம் கருதி பிர­த­ம­ராகும் கன­வுடன் மக்­களை குழப்­பத்தில் ஆழ்த்தும் வகையில் பிர­சா­ரங்­களை முன்­னெ­ டுத்து வரு­வ­தாக அர­சியல் ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

ஸ்ரீ.ல.சு. கவி­லி­ருந்து ஐவர் அதி­ர­டி­யாக நீக்கம்

ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­ வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­­சியை விட்­டு­வெ­ளி­யே­றிய அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்­தன, எம்.கே.டி.எஸ். குண­வர்த்­தன, அர்­ஜுன ரண­துங்க, ஸ்ரீ.ல.சு கட்­சியின் பொருளாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன, ஐ.ம.சு முன்­ன­ணியின் மேல்­மா­காண உறுப்­பினர் ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர ஆகியோர் ஐக்­கிய தேசிய முன்­னணிப் பட்­டி­யலில் போட்­டி­யி­டு­வதன் கார­ண­மாக ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து அதி­ர­டி­யாக நீக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதற்கு ஜனா­தி­ப­தியும் ஸ்ரீ.ல.சு கட்­சியின் தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் ஒப்­புதல் வழங்­கி­யுள்ளார்.

இதில் எஸ்.பி. நாவின்ன மாத்­திரம் பொது­வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யே­ற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னரை குழப்­பத்தில் ஆழ்த்­து­வ­தாக அக்­கட்­சி­யினர் விமர்­சிக்க ஆரம்­பித்­துள்­ளனர்.

யாரும் எதிர்­பார்க்­காத விதத்தில் பல­ரது எதிர்ப்­புக்கும் மத்­தியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவை பொதுத்­தேர்­தலில் போட்­டி­யிட அனு­மதி வழங்­கினார். இப்­போது தனது வெற்­றிக்­காக அர்­ப­ணிப்­புடன் உழைத்­த­வர்­களை ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­யி­லி­ருந்து நீக்கி அதிர்ச்­சி­ய­ளித்­துள்ளார்.

தேர்­தலில் ஐக்­கிய தேசிய முன்­னணி நிச்­ச­ய­மாக வெற்றி பெறு­மென அவர் திட­மாக நம்­பு­வதால் அவர் இவ்­வாறு அதி­ரடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தா­கவே அர­சியல் ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

தேர்­தலில் வெற்றி பெற்­ற­வுடன் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணிப் பட்­டி­யலில் வெற்றி பெறும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­களை இணைத்துக் கொண்டு தேசிய அர­சாங்­க­மொன்றை அமைக்­கவும் அவர் எண்­ணி­யுள்ளார் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­கவும் தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்­க­மொன்றை அமைக்­கப்­போ­வ­தாக தெரி­விப்­பதும் இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

யட்டி நுவர ஐ.ம.சு. முன்­னணி கூட்­டத்தில் பறந்த தேசியக் கொடி

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பிர­சாரக் கூட்­ட­மொன்று கடந்த 27 ஆம் திகதி நடை­பெற்­றது. இந்த கூட்டம் நடை­பெற்ற மேடையில் மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட தேசியக் கொடிகள் பறந்­தன. இந்த கொடி­களில் சிறு­பான்­மை­யி­னரை குறிக்கும் பச்சை, ஆரஞ்சு நிறங்கள் நீக்­கப்­பட்ட கொடி­களே பறக்க விடப்­பட்­டி­ருந்­தன.

பிர­சாரக் கூட்டம் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்னர் இந்தக் கூட்ட செய்­தி­களை சேக­ரிக்க வந்­தி­ருந்த செய்­தி­யா­ளர்கள் இந்த மாற்­றப்­பட்ட கொடியை புகைப்­படம், வீடியோ எடுப்­ப­தி­லி­ருந்து தடுக்­கப்­பட்­டனர்.

இந்­தக்­கொ­டிகள் அவ­சர அவ­ச­ர­மாக நீக்­கப்­பட்­டன. ஆனால் அங்கு பறந்த மாற்­ றப்­பட்ட கொடிகள் தொடர்­பான செய்­தி­களும் படங்­களும் தொலைக்­காட்சி செய்­தி­களில் ஒளி­ப­ரப்­பப்பட்­டன, பத்­தி­ரி­கை­களில் பிர­சு­ர­மா­கின.

இதே போன்ற கொடிகள் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்­ ஷவை விசேட பொலிஸ் பிரி­வுக்கு விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­ட­போது அதை எதிர்த்து நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­திலும் காணப்­பட்­டன.

இந்த கொடி­களை அந்த ஆர்ப்­பாட்­டத் தில் கலந்து கொண்ட அமைச்­சர்­களும் கைகளில் ஏந்­தி­யி­ருந்­தனர். இது தொடர்­பான விசா­ர­ணைகள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக் ­கின்­றன.

அமைச்­சர்கள் ராஜி­னாமா

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சாங்­கத்தில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் 27 பேருக்கு அமைச்­சுப்­ப­த­விகள் வழங்­கப்­பட்­டன. தேர்தல் அறிவிக் ­கப்­பட்ட பின்னர் நிலைமை மாற்­ற­ம­டைந்­தது. முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்­ ஷ­வுக்கு பொதுத்­தேர்­தலில் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அனு­மதி வழங்­கினார்.

இதை­ய­டுத்து மஹிந்த ராஜ­பக்­ ஷ ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்குள் தனது பலத்தை படிப்­ப­டி­யாக அதி­க­ரித்துக் கொள் ளும் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்தார். இதன் ஒரு அங்­க­மாக பதவி ஏற்­றுக்­கொண்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் மீது பத­வியை இராஜி­னாமா செய்­யும்­படி பல்­வேறு விதங்­களில் அழுத்தம் விடுக்­கப்­பட்­டது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தேர் தல் பிர­சா­ரங்­களில் மைத்­திரி தரப்பு வேட்­பா­ளர்கள் ஓரங்­கட்­டப்­பட்­டனர். மொத்­தத்தில் ஐ.ம.சு.முன்­ன­ணிக்குள் மைத்­திரி தரப்­பி­ன­ரது வெற்­றியை எப்­ப­டி­யா­வது தடுக்க வேண்­டு­மென்று மஹிந்த தரப்­பி­ன­ருக்கு இர­க­சிய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

இந்த நிலையில் அம்­முன்­ன­ணியின் வேட்­பா­ளர்கள் யாரை ஆத­ரிப்­பது மைத்­தி­ரி­யையா? மஹிந்­த­வையா? என்று குழம்­பித் ­த­வித்­தனர்.

பொதுத்­தேர்­தலில் யார் வெற்றி பெறுவர் என அனு­மா­னிக்க முடி­யாமல் தடு­மா­று­கின்­றனர். தேர்­தலில் மஹிந்த அணி வெற்றி பெறும் என எண்ணும் அமைச்­சர்கள் தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களை இராஜி­னாமா செய்து வரு­வ­தா­கவும், மைத்­திரி அணி வெற்றி பெறும் என்றும் நம்­புப ­வர்கள் தொடர்ந்தும் அமைச்சுப் பத­வி­களை வகிப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர்.

சிலர் எந்த முடி­வையும் எடுக்க முடி­யாமல் இரு­த­லைக்­கொள்ளி எறும்­பாக தொடர்ந்து மௌனம் சாதித்து வரு­கின்­றனர்.

மஹிந்­தவின் திட்டம்தவி­டு­பொ­டி­யா­னது

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய குழுவை கூட்­டு­வ­தற்கு நீதி­மன்றம் விதித்­தி­ருந்த தடை ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

இதனால் மஹிந்த தரப்பின் திட்­டங்கள் குழம்பிப் போன­தாக அக்­கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

பொதுத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வெற்றி பெற்றால் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை அறி­விக்­கவும் அமைச்­சுப்­ப­தவி ஏற்­றுள்ள ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் அமைச்­சுப்­ப­த­வி­க­ளி­லி­ருந்து விலகும் தீர்­மா­னத்­தையும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் எடுக்க மஹிந்த அணி தீர்­மா­னித்­தி­ருந்­தது.

ஆனால் நீதி­மன்றம் கட்­சியின் மத்­திய குழுக்­கூட்­டத்­துக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடையை 7ஆம் திகதி வரை நீடித்­ததால் மஹிந்த ராஜ­பக்­ ஷ தலை­மை­யி­லான மஹிந்த அணியின் இந்தத் திட்டம் தவிடு பொடி­யா­கி­யுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

மஹிந்­தவை பிர­தமர் வேட்­பா­ள­ராக அறி­விப்­பது அமைச்சு பத­வி­யேற்ற ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் ஒட்டு மொத்­த­மாக இராஜி­னாமா செய்யும் தீர்­மா­னங்­களை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய குழுக்­கூட்­டத்தில் நிறை­வேற்ற மஹிந்த தரப்பு திட்­ட­மிட்­டிருந்­தது.

நீதி­மன்றம் தடையை நீடித்­ததால் இத்­திட்டம் தோல்­வி­யுற்­றது. அக்­கட்­சியின் மத்­திய குழுக்­கூட்டம் கடந்த 30ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை நடை­பெ­ற­வி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய குழுவைக் கூட்டி அதன் யாப்பை திருத்தி தலைமைப் பத­வி­யி­லி­ருந்து மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நீக்­கி­விட்டு மஹிந்த ராஜ­பக்­­ ஷவை தலை­வ­ராக நிய­மிக்க இரக­சிய திட்டம் தீட்­டி­யி­ருந்­ததால் மத்­திய குழு உறுப்­பி­னரும் கொட்­டி­கா­வத்தை பிர­தேச சபை தலை­வ­ரு­மான பிர­சன்ன சோலங்­கா­ராச்சி மத்­திய குழுக்­கூட்­டத்­துக்கு தடை­வி­திக்­கும்­படி நீதி­மன்­றத்தில் மனு­வொன்றை தாக்கல் செய்­ததையடுத்து மத்­திய குழு கூட்­டத்­துக்கு தடை விதிக்­கப்­பட்­டது.

ஐ.ம.சு.முன்­ன­ணியின் வாக்­கு­று­திகள்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணியின் தேர்தல் விஞ்­ஞா­பனம் கடந்­த­வாரம் வெளி­யி­டப்­பட்­டது. அதில் பல வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. புரை­யோ­டிப்­போ­யுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு 13ஆவது அர­சி­ய­ல­மைப்­புக்குள் ஆறு மாத காலத்தில் தீர்வு காணப்­ப­டு­மென அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மஹிந்த ராஜ­பக்­ ஷ இந்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை தயா­ரிப்­பதில் முன்­னின்று செயற்­பட்­டுள்ளார் எனத்­தெ­ரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே மஹிந்த ராஜ­பக்­ ஷ ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்­த­போது 13ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­த­தத்­திற்கு அப்பால் சென்று இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­டு­மென இந்­தி­யா­வுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருத்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது இது குறித்த எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­காமல் இந்த பொதுத்­தேர்­தலில் வெற்றி பெற்று ஒரு வேளை எந்த அதி­கா­ரமும் இல்­லாத பிர­த­ம­ரானால் இந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வரா? சகல அதி­கா­ரமும் இருந்­த­போது அளித்த வாக்­கு­று­தி­யியை நிறை­வேற்­ற­ாதவர் பிர­த­ம­ராக இந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வாரா?

தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மேலும் பல கவர்ச்­சி­க­ர­மான வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. திரு­ம­ணத்­துக்கு கொடுப்­ப­னவு, மாண­வர்கள் புத்­தகம் கொள்­வ­னவு செய்ய கொடுப்­ப­னவு, மாண­வர்கள் வெளி­நாடு செல்ல கொடுப்­ப­னவு என இளை­ஞர்­களை இலக்கு வைத்து பல வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் வாக்­கு­று­திகள்.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னமும் கடந்த வாரம் வெளி­யி­டப்­பட்­டது. இதில் பத்து லட்சம் தொழில் வாய்ப்­புக்கள், நாடு முழு­வதும் 45 வர்த்தக வலயங்கள் உருவாக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் இந்த பொதுத்தேர்தல் விஞ் ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்தியெய்தா விட்டாலும் க.பொ.த. உயர் தரம் பயில் வதற்கு அனுமதி வழங்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

அரசியல் கட்சிகள் இத்தேர்தல் காலத்தில் வாக்காளர் களை முட்டாளாக்கும் வகையில் வாக்குறு திகளை அள்ளி வீசி வருகின்றன.

சிதைந்துபோகும் சிறுபான்மை வாக்குகள்

வடக்கு, கிழக்கிலும் மற்றும் மலைய கம் பகுதிகளிலும் தமிழ், முஸ்லிம் வாக் குகளை சிதறடிக்கும் வகையில் பல கட் சிகளும், சுயேட்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

சில தேர்தல் மாவட்டங்களில் ஏட்டிக்குப் போட்டியாக முஸ்லிம் கட்சிகள் தனித் தும், பிரதான கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந் தும் போட்டியிடுவதால் முஸ்லிம் பிரதி நிதித்துவம் குறைந்துவிடும் அச்சம் காணப் படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். அம்பாறை, வன்னி ஆகிய தேர்தல் மாவட்டங்களில் இந்நிலை காணப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்திலும் இதே நிலை காணப்படுகின்றது. இங்கும் ஏட் டிக்குப் போட்டியாக மலையக அரசி யல் கட்சிகள் இத்தேர்தலில் களமிறங்கி யுள்ளன. இதனால் வாக்குகள் சிதைந்து தமிழ் பிரதிநிதித்துவம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படு கின்றது.

தமிழ், முஸ்லிம் மக்களின் இத்தேர்தலில் வாக்குகளைச் சிதறடிக்க கூடியவகையில் திட்டமிட்டு களமிறங்கப்பட்டுள்ள கட்சி கள், குழுக்கள் தேசியப்பட்டியலில் இடம் பிடிப்பதற்காக அகில இலங்கை ரீதியிலும், சில மாவட்டங்களிலும் களமிறக்கப்பட் டுள்ள கட்சிகளுக்கு துணை போகக் கூடா தென புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version