பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், கென்யாவைச் சேர்ந்த தனது கணவருக்கு தான் 25,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்களை (52 இலட்சம் ரூபா) வழங்கியபின் அவர் தன்னை கைவிட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்நபருக்கு உலகின் பல நாடுகளிலும் 47 காதலிகள் இருப்பதையும் பின்னர் தான் அறிந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது 61 வயதான ஜூடித் ஸ்டில்வெல் எனும் பிரித்தானிய பெண், இணையத்தளம் ஒன்றின் மூலம் தன்னைவிட பல வருடங்கள் இளமையான ஒவி இலியாஸ் என்பவரை 2009 ஆம் ஆண்டு சந்தித்தார். கென்யாவைச் சேர்ந்த ஒவி, தான் லண்டனில் வசிப்பதாக கூறினார்.
அன்பாகப் பேசிய ஒவி இலியாஸ் மீது ஜூடித்துக்கு காதல் ஏற்பட்டது. 2012 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் கொண்டனர்.
(Seduced: When Mrs Stillwell met Elias on a dating website he told her he lived in London and she thought she had found her soulmate)
ஆனால், தனது புதிய கணவர் அவசர வேலை இருப்பதாகக் கூறி அடிக்கடி வெளிநாடு செல்வது குறித்து ஜூடித்துக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இறுதியாக தான் 25,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்களை ஒவி இல்யாஸுக்கு வழங்கியபின் அவரை மீண்டும் சந்தக்கவில்லை என்கிறார் ஜூடித்.
இது தொடர்பாக ஆராய்ந்தபோது, தனது கணவர் வேறு பல பெண்களுடனும் தொடர்புகொண்டிருப்பதை அறிந்தார்.
தற்போது 47 வயதான ஒவி இல்யாஸ், பல்வேறு பெயர்களில் செயற்பட்டு பல நாடுகளில் காதலிகளை கொண்டுள்ளதை அறிந்து ஜூடித் அதிர்ச்சியடைந்தார்.
அவுஸ்திரேலியாவில் அவர் ஸ்டீஸ் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பெண் ஒருவருடன் தொடர்புகொண்டிருந்ததாகவும் ஜூடித் கூறுகிறார்.
47 வயதான ஒவி இல்யாஸ் 47 காதலிகளைக் கொண்டுள்ளாரர் என்கிறார் ஜூடித்.
இது தொடர்பாக பிரித்தானிய பொலிஸாரிடம் ஜூடித் முறையிட்டுள்ளார்.
பரிதாபம்.. இதையெல்லாம் போய் ஒருவன் கல்யாணம் முடித்திருக்கிறானே!! 25,000 ஸ்ரேலிங் பவுண்ஸ் என்ன! 25மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் கொடுத்தாலும் உன்னை போன்ற ஒரு தியாகியை இந்த கிழவி இனிமேல் இந்த உலகத்தில் எங்குமே கண்டுபிடிக்க முடியாது..