தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 994 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.

இதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிடப்பட்ட தகவலில் ஒரேநாளில் ஐயாயிரத்து 994 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மொத்த பாதிப்பு இரண்டு இலட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 6 ஆயிரத்து 20 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 38 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை இன்று ஒரேநாளில் மட்டும் 989 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 119 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதுவரை மொத்தமாக நான்காயிரத்து 927 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version