Site icon ilakkiyainfo

தலை முன் வகிட்டில் குங்குமம் வைக்க காரணம்

 

தலை முன் வகிட்டில் பெண்கள் குங்குமம் வைத்து கொள்வதற்கு ஆன்மிக காரணம் உள்ளது. அது என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மகாவிஷ்ணுவுக்கு பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டு வந்தால் எல்லா செல்வங்களும் கிடைக்கும்.

வாழை, மாவிலை, எலுமிச்சம் பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால் தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

தலை முடியின் முன்வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் மணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

நெற்றியின் இரண்டு புருவங்களுக்கு இடையில் ஆக்ஞா சக்கரம் உள்ளது. ஆத்ம சக்தி பிரம்மத்தை அடைய நெற்றியின் புருவ மத்தியில் குங்குமம் இட வேண்டும்.

தீபாவளி அன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள். மேலும் யானையின் முகத்திலும், குதிரையின் முகத்திலும் வாசம் செய்கிறாள்.

Exit mobile version