Site icon ilakkiyainfo

கட்சி சாரா பிரதமர் தலைமையில் 15 பேரடங்கிய சர்வகட்சி இடைக்கால அரசமைக்க ஜனாதிபதி இணக்கம் – ஓமல்பே சோபித தேரர்

>நாட்டிலுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு துரித தீர்வு காணும் வகையில் கட்சி சாராத பிரதமர் ஒருவர் தலைமையில் 15 பேரை உள்ளடக்கிய சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும், சிவில் தரப்பின் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய விசேட ஆலோசனை குழுவை ஸ்தாபிக்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

 

முழு நாடும் யுத்தகளமாக மாறியமைக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும்.

பொலிஸாரின் செயற்பாடுகள் வெறுத்தக்கக்கவை. பொலிஸ்மா அதிபர் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அவதானம் செலுத்தியுள்ளோம் எனவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து சர்வமத தலைவர்கள் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

இதன் போதே ஜனாதிபதி இவ்வாறு இணக்கம் தெரிவித்ததாக ஓமல்பே சோபித தேரர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் காலி முகத்திடல் அமைதி வழி போராட்ட களத்தில் மேற்கொண்ட தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,  ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும்.

காலி முகத்திடல் போராட்டம் குறித்து ஜனாதிபதியிடம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினோம். சம்பவம் தொடர்பில் முறையான மற்றும் துரிதகரமான விசாரணைகளை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

சம்பவ இடத்தில்  பொலிஸார் செயற்பட்ட விதம் வெறுக்கத்தக்கது.பொலிஸ்மா அதிபர் குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அவதானம் செலுத்தப்பட்டுளளது.

கட்சி சாரா பிரதமர் தலைமையில் 15 பேரை உள்ளடக்கிய வகையில் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும், சிவில் தரப்பின் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய விசேட ஆலோசனை குழுவை ஸ்தாபிக்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என்றார்.

Exit mobile version