Site icon ilakkiyainfo

நடிகர் பிரசாந்த் மீது சுவிச்சர்லாந்து விமான நிலைய பெண் ஊழியர் பண மோசடி முறைப்பாடு

சுவிட்சர்லாந்து விமான நிலைய பெண் ஊழியர் ஒருவர் நடிகர் பிரசாந்த் மீது பணமோசடி முறைப்பாடு அளித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த குமுதினி என்ற பெண் சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், குமுதினி பாண்டிபஜார் காவல் நிலையத்தில் வாய்மொழி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது நடிகர் பிரசாந்த் தன்னிடம் ரூ.10 இலட்சம் வாங்கி பண மோசடி செய்திருப்பதாக கூறி புகார்முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வெளிநாட்டு விமான நிலைய பெண் ஊழியர் பொய் புகார் அளித்திருப்பதாக நடிகர் பிரசாந்த் தரப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு புகார்கள் குறித்தும் பாண்டிபஜார் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version