இலங்கையில் கடந்த சில மாதங்களாக பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தவண்ண உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிகிரியாவை பார்வையிடுவதற்காக வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகளவில் பணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகரித்த கட்டணம் அறவிடப்படுகின்றமைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சிகிரியாவை பார்வையிட உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடம் 100 ரூபாவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 9810 ரூபாவும் (30 டொலர்) அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version