பெரகும்புர – அம்பேவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் கடவையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (19) அதிகாலை 4:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பதுளை தியத்தலாவை பகுதியைச் சோர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஆவார்.

இவர் கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் குறித்த ரயில் கடவையின் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ள நிலையில் சம்பவத்தன்று ரயில் தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் அதே ரயிலில் ஏற்றப்பட்டு அம்பெவெல ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version