ஈரான் அணு விஞ்ஞானியை ரோபோ-ஏஐ மூலம் தட்டித் தூக்கிய இஸ்ரேல்! 2020ல் நடந்த திகிலூட்டும் சம்பவம்!

“ஈரான் நாட்டின் அணு விஞ்ஞானி என்று கூறப்படும் மொஹ்சென் ஃபக்ரிசாதே-வை (Mohsen Fakhrizadeh ) AI- இயங்கும்  ரிமோட்-கண்ட்ரோல்டு துப்பாக்கி மூலம் இஸ்ரேல் படுகெலை செய்த சம்பவம் தற்போது வைரலாகியிருக்கிறது.

இஸ்ரேல் – ஈரான் சண்டை இன்று, நேற்று உருவானது அல்ல. பல காலமாகவே, இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான பகை, மோதல், தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், கடந்த 2020ல், ஈரான் அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே-வைAI- இயங்கும்  ரிமோட்-கண்ட்ரோல்டு துப்பாக்கி கருவிகளைக் கொண்டு கொலை செய்த இஸ்ரேலின் சதி திட்டம் இப்போதும் பேசப்பட்டு வருகிறது.

ஈரான் அணு விஞ்ஞானி என்றும், அந்நாட்டின் அணு குண்டு தயாரிக்கும் ‘அமைத்’ திட்டத்தின் மூளை என்றும் இஸ்ரேல் நம்பி வந்தது மொஹ்சென் ஃபக்ரிசாதேவைத்தான்.

ஆனால், அவர் யார், எப்படி இருப்பார் என்று கூட வெளியுலகுக்குத் தெரியாமல் பாதுகாத்து வந்தது ஈரான்.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்று கூட இஸ்ரேலால் ஆதாரங்களைக் காட்ட முடியாத அளவுக்கு நிலைமை இருந்தது.ஆனால், இஸ்ரேல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, அவர் ஒருவரை மட்டுமே இலக்காக நிர்ணயித்து செயல்பட்டது.

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் இலக்காகவும் அவர் இருந்தார்.அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் திரட்டப்பட்டன. அவரைக் கொல்ல ஒரு தேதியும் குறிக்கப்பட்டது.

அதுதான் 2020 நவம்பர் 27ஆம் தேதி. இது திட்டமிட்டபடி நடக்கும் என்று இஸ்ரேல் நம்பியிருக்குமா என்று தெரியவில்லை.

ஆனால் உலகமே இப்படியொரு தாக்குதல் சாத்தியம் என்று அதற்கு முன்பு சொல்லியிருந்தால் நம்பியிருக்காது.

இப்போது நம்புகிறது..சம்பவம் இதுதான்!

அப்சார்ட் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு மொஹ்சென் ஃபக்ரிசாதே, தனது மனைவியுடன் காரில் செல்கிறார்கள்.

அவருடன் பாதுகாப்புப் படையும் உடன் இருக்கிறது.எங்குமே எந்த சந்தேகமும் வரவில்லை. சாலையோரம் ஒரே ஒரு ஆதரவற்ற டிரக் மட்டும் இருக்கிறது. அது பல நாள்களாக இருக்கிறது. அதில் ஒரு சின்ன மாற்றம். அதில்தான் எல்லா ஆயுதங்களும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், அங்கு இஸ்ரேல் வீரர்கள் யாரும் இல்லை. அனைத்தும் இஸ்ரேலிலிருந்து ரிமோட் மூலம் இயக்கப்படுகிறது.

சரியாக.. கார், டிரக் அருகே வருகிறது. அந்த டிரக் இருந்த இடம் மிகச் சரியாக வேகத் தடுப்புக்கு முன்பு. கார் வேகத் தடுப்பை அணுகுவதற்காக வேகம் குறைக்கிறது.

மிகத் துல்லியமாக டிரக்கிலிருந்து துப்பாக்கிகள் இயங்குகின்றன. தோள்பட்டையில் குண்டு பாய்ந்து ஃபக்ரிசாதே விழுகிறார்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ள காரிலிருந்து வெளியே வந்து மறைந்துகொண்ட அவரை, துப்பாக்கிகள் துளைக்கின்றன. அவர் பலியாகிறார்.

மூன்று குண்டுகள் அவரை சாய்க்கின்றன.அந்தக் காரில்தான் அவரது மனைவியும் இருந்தார். ஆனால் அவர் மீது குண்டுகள் துளைக்கவில்லை. காரணம்,

அந்த துப்பாக்கிகளுக்கு முகத்தை அடையாளம் காணும் ஃபேஷியல் ரெகக்னேஷன் மென்பொருள் இணைக்கப்பட்டிருந்ததுதான்.

அது ஃபக்ரிசாதேவை அடையாளம் கண்டு உறுதி செய்துகொண்டுதான் துப்பாக்கியை இயக்குகிறது. இரண்டு சுற்றுகள்.. 15 குண்டுகள். ஃபக்ரிசாதே பலியாகிறார்.

அதோடு, இஸ்ரேல் திட்டம் முடியவில்லை. அந்த டிரக் வெடித்துச் சிதறுகிறது. அதிலிருந்த இஸ்ரேலின் ஆயுதங்கள் தூள் தூளாகின்றன.

அந்த துண்டுகளை எடுத்து ஈரான் சோதித்தபோதுதான், மொசாட்டின் மூளை இது என்பது தெளிவாகிறது.

ஆனால் ஈரானால் அதனை உறுதி செய்ய முடியவில்லை.ஈரான் சொன்னது இதைத்தான், ரிமோட் மூலம் இயக்கப்படும் இயந்திரத் துப்பாக்கி, செயற்கைக்கோள் மூலம் இயக்கப்பட்டுள்ளது.

அனைத்து சிறப்பு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி நடத்தப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்தில் ஒருவரும் இல்லை என்பதுதான்..இந்தக் கருவிகள் அனைத்தும் அடையாளம் தெரியாத சிறு சிறு துண்டுகளாக ஈரானுக்குள் கடத்திச் செல்லப்பட்டு, அங்குதான் அவை கருவிகளாக மாற்றப்பட்டு, டிரக்கு பல காலமாக திட்டமிட்டு நிறுத்தப்பட்டு அதில் அவை பொருத்தப்பட்டுள்ளன என்பது அனைத்தும் ஈரானின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டவை

.இப்படி, வெளியுலகுக்கு அடையாளம் தெரியாமல் வைத்திருந்த விஞ்ஞானியை, இஸ்ரேல் மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டி, துல்லியமாக தீர்த்துக் கட்டியபோதே, இரு நாடுகளுக்கும் இடையே மூண்டிருந்த பகைக்கு தீ வைக்கப்பட்டது என்றே சொல்லலாம்.

இதுவரை இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. ஆனால், தாக்குதலுக்கு முன்பும், பின்பும், அந்நாட்டு அதிபர் பேசிய சூசகமான ஒரு சில வார்த்தைகளே புரிஞ்சவங்க பிஸ்தா என்று சொல்ல வைத்திருக்கிறது..

Share.
Leave A Reply

Exit mobile version