மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான பேருந்தின் பின் பக்க சில்லுக்குள் சிக்கி மூன்று வயதுடைய சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் தனது தாயுடன் ஆடைத் தொழிற்சாலைக்கு வந்த நிலையில் தொழிற்சாலைக்குள் தாய் சென்றபோது பின்னால் வந்த சிறுவன் மீது பேருந்தின் டயர் ஏறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version