கொழும்பு, கிராண்ட்பாஸ் மோலவத்த பிரதேசத்தில் உள்ள ஆற்றில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர். 

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

55 முதல் 60 வயது மதிக்கத்தக்க 5 அடி 04 அங்குலம் உயரமுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version