ஒன்லைனில் பொருட்கள் கொள்வனவு செய்யும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் ஏமாற்றப்படும் நிலையில் கவனமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

விசேடமாக சமூக ஊடகங்கள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அதிகார சபை அறிவுறுத்துகிறது.

இவ்வாறு பொருட்களை விண்ணப்பம் செய்வதற்கு முன் விற்பனையாளரின் முகவரி, தொடர்புத் தகவல் மற்றும் வாடிக்கையாளர் மதிப்புரைகளைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் போலி reviews குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் அதிகாரசபை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version